Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனவிலங்குகளை பாதுகாக்க சரணாலயங்கள் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டுவீச்சு

Featured Replies

வனவிலங்குகளை பாதுகாக்கவும் அவற்றுக்கு சரணாலயங்களை அமைக்கவும் நடவடிக்கையெடுத்துள்ள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது, குண்டுகளை வீசுவதுடன் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்து வருகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் இயற்கை வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

விலங்குகளுக்கு சரணாலயங்களையும் தாவரங்களுக்கு பூங்காக்களையும் அமைத்துக் கொடுக்கும் அமைச்சர்கள் வன்னியில் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கு கூடாரங்களின்றியும் உண்பதற்கு உணவின்றியும், உயிருக்குப் போராடும் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் காட்டாதது ஏன்?

பொது மேடைகளில் சமாதானம் குறித்து வாய் கிழியப் பேசும் அமைச்சர்கள் பாராளுமன்றத்தினுள் அது குறித்துப் பேசத் தயங்குவது ஏன்?

பாதுகாப்பு எனக் கூறிக் கொண்டே பெருமளவான காடுகள் அழிக்கப்படுகின்றன. அதுவும் தமிழர் பகுதிகளிலேயே அதிகமான காடுகள் அழிக்கப்படுகின்றன. வீதியோர மரங்களைக்கூட விட்டுவைக்காது பாதுகாப்புக் காரணத்தைக் கூறி அழித்து விடுகின்றார்கள்.

ஏனைய இடங்களில் காடுகளை பாதுகாத்துக்கொண்டு எமது பகுதிக்காடுகளை மட்டும் ஏன் அழித்து வருகின்றீர்கள்.

வன இலாகா அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் காடழிப்பு துரிதமாக நடைபெற்று வருகின்றது. மரங்கள் திருட்டுத்தனமாக வெட்டப்பட்டு மரக்காலைகளுக்கு விற்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

காடழிப்பினால் காடுகளிலுள்ள விலங்குகள் கிராமங்களுக்குள் நுழைகின்றன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும், பாதிக்கப்படுகின்றது. விவசாய நிலங்கள் சேதமடைகின்றன.

எமது படுவான்கரை கிராமத்தில் மண் அகழ்வு மிக மோசமாக நடைபெறுகின்றது. இதனால், வயல் நிலங்கள் பள்ளமாவதால் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பில் நான் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முறையிட்டபோதும் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

காடழிப்பு, மண் அகழ்வு போன்ற செயற்பாடுகளால் எமது எல்லைக்கிராமங்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.

வன்னி ப்பகுதியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் எந்தவித உதவிகளுமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகின்றது. மக்களுக்கு வாழ்விடமில்லாததால் காடுகளில் தான் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோல் படுவான்கரைப் பகுதியிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டபோது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.