Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் போய்விட்டன: வன்னி மக்கள் கவலை

Featured Replies

அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறியிருப்பதானது மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாதிக்கும் அதேவேளை, தாக்குதல்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கான பாதுகாப்பு இடங்களையும் இல்லாமல் செய்திருப்பதாக வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறக்கூடாதெனக் கூறி அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திப் பகுதியிலுள்ள யு.என்.எச்.சீ.ஆர். அலுவலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்ட மக்கள் வாகனங்கள் எதுவும் வெளியில் செல்லமுடியாதவாறு நுழைவாயிலில் மறியல்களையிட்டு வீதியில் அமர்ந்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, வன்னியிலிருந்து வெளியேறிய அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனத் தொடரணிகளை வழிமறித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், அவர்களின் வெளியேற்றம் தம்மை பாதுகாப்பில்லாத சூழலுக்குத் தள்ளியிருப்பதாகக் கூறியுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறியதைத் தொடர்ந்து வன்னி பெரும்நிலப்பரப்பின் மீது இலங்கை அரசாங்கப் படைகள் கண்மூடித்தனமான வான் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அச்சம் தெரிவித்ததாக தமிழ் நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றுக் காலை 6 மணிமுதல் வன்னிப் பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும், தாம் பலவந்தமாக வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் விளக்கமளித்ததாகத் தெரியவருகிறது.

மாணவர்களைப் பாதித்திருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வெளியேற்றம்

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறுகின்றன என்ற செய்தி இடம்பெயர்ந்திருக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்திருப்பதாக மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தமிழ் நெட் குறிப்பிட்டுள்ளது.

“இந்தச் செய்தியே வகுப்பறைகளில் கலந்துரையாடப்படும் விடயமாகிவிட்டது. கிளிநொச்சி வீதிகளில் அரசசார்பற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் நடமாட்டமானது பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளோம் என்ற மனத்திருப்தியை சிறுவர்களுக்கு வழங்கியிருந்தது. இதனால்தான் அனைவரும் கிளிநொச்சியை நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர்” என அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எமது குடியிருப்புக்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது ஏற்பட்ட சேதங்களுக்கு ஐ.நா.ஸ்தாபனங்கள் சாட்சிகளாக இருந்தன எனக் குறிப்பிட்டிருக்கும் அந்த ஆசிரியர், இனிவரும் காலங்களில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு யார் சாட்சி எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இக்கட்டான நிலைமையில் உள்ளோம்- ஆர்ப்பாட்டக்காரர்கள்

வன்னிப் பகுதிக்கான அனைத்து விநியோகங்களையும் தடுத்து நிறுத்தியிருக்கும் அரசாங்கம், தொடர்ச்சியான விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்திவருவதாக சாலைமறியல் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நெட்டுக்குக் கூறியுள்ளார்.

“நாங்கள் தற்பொழுது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளோம். இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எம்மால் மதிப்புடன் வாழமுடியாது. எவ்வாறான சூழ்நிலையில் பலவந்தமாக வெளியேறுமாறு கூறுவது விரும்பிய இடத்தில் வாழக்கூடிய அடிப்படை மனித உரிமையை மீறும் செயல்” என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பான சூழல் என்ற உணர்வு

இடம்பெயர்ந்த தமக்கு எந்தவொரு நிறுவனத்தாலும் இதுவரை உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லையென நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, இலுப்பக்கடவையிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருக்கும் 48 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவர் கூறினார். அவ்வாறெனின் ஏன் நீங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறீர்கள் எனத் தமிழ்நெட் கேட்டகேள்விக்குப் பதிலளித்த அவர்,

“இதுவரை எந்த உதவியும் எமக்கு வரவில்லை. ஆனாலும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரசன்னம் நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கின்றோம், உலக நாடுகளால் நாம் தனித்துவிடப்படவில்லை என்றவொரு உணர்வைத் தரும். இதுவே உமது உயிர்கள் மீது நம்பிக்கையைத் தரும் விடயமாக இருந்தது. தற்பொழுது அந்தச் சூழ்நிலையும் மாறிவிட்டது” என்று கூறினார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.