Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியி;ல எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் வெளியேற்ற அரசாங்கம் தீவிர முயற்சி – மக்கள் பேரச்சம்

Featured Replies

வன்னியி;ல தங்கியிருக்கும் எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது.

நிவாரணப்பணிகளை அரசு கவனித்துக் கொள்ளும் எனவும் ஒரு தொண்டர் அமைப்புக்கேனும் அரசு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் கடுமையாக அரசு அறிவித்துள்ளது.

வன்னியிலிருந்து அனைத்து தொண்டர் அமைப்புக்களும் வெளியேறி விட வேண்டுமென அரசு அறிவித்ததையடுத்து அங்குள் ளமக்கள் பெரும் அச்சம் கொண்ட நிலையில் வன்னியிலிருந்து ஐநா அமைப்புகள் வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வன்னியின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஐ.நா தலைமையகத்திற்கு அறிவித்து அங்கிருந்து பதில் கிடைக்கும் வரை தமது வெளியேற்றத்தைத் தாமதப்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் அங்கு எஞ்சியிருக்கும் தொண்டர் நிறுவனங்களின் சகல பிரதிநிதிகளும் தமது உபகரணங்களுடன் உடனடியாக வெளியேற வேண்டுமென அரசு வலியுறுத்தி வருகின்றது.

கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து தொண்டர் அமைப்புகள் வெளியேறுவதால் அங்கு மனித நேயப் பணிகள் பாதிக்கப்படாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்தோடு வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணிபுரியும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் வைத்திய அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவி;த்துள்ளது.

வன்னி மக்கள் பேரவலங்களை எதிர்நோக்குகின்றனர் – ஜயலத் ஜயவர்தன

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளதென ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 150,000 த்திற்கு மேற்பட்ட மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்களது இடர்கள் வெளிக்கொணரப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்ப்பிணிப்பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என சகல வயதினரும் உணவு, குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகளின்றி பல்வேறு மனிதாபிமான சவால்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக யுத்த நிலைமை உக்கிரமடைந்து செல்வதனால் வன்னி மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு இலக்காகக் கூடிய அபாயம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்களை மேற்கோள்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான பணிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.