Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் வானம்- இறுவட்டு மூன்று விமர்சனங்கள்

Featured Replies

காதல் வானம் இறுவட்டுக்கு தமிழகத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற மூன்று வேறுபட்ட விமர்சனங்களை இங்கே யாழ்கள உறவுகளுக்காக பதிவு செய்கின்றேன். நீங்கள் படித்துவிட்டு ஒரு இறுவட்டை வாங்கிக் கேட்டால் எங்களுடைய அடுத்த படைப்பை உருவாக்க பெரிய உதவியாக இருக்கும்.

நன்றியுடன்

வசீகரன்-வி.எஸ்.உதயா

கண்ணீர் தேசத்தின் 'காதல் வானம்'! -15.09.2008

http://thatstamil.oneindia.in/movies/speci...usic-album.html

இலங்கை கவிஞர்கள் யாராக இருந்தாலும் கண்ணீரை மட்டும்தான் பதிவு செய்வார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கியிருக்கிறார் ஒருவர். அவர் வசீகரன்... தமிழ் திரையுலகுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான் இவர். காதல் கடிதம் எனும் அர்த்தமுள்ள இசைத் தொகுப்பைத் தயாரித்தவர்.

ஈழத்திலிருந்து நார்வேக்குப் புலம்பெயர்ந்து அங்கே சம்பாதித்ததைக் கொண்டு, தன் சினிமா - இலக்கிய ஆர்வத்துக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பவர்.

வெறும் சப்தங்களே இசையாகிவிட்ட இன்றைய சூழலில் 'காதல் வானம்' எனும் ஒரு இனிய இசைத் தொகுப்பைத் தந்திருக்கிறார் வசீகரன், இசையமைப்பாளர் வி.எஸ். உதயாவுடன் இணைந்து.

'கண்டேன் சீதை', 'பீஷ்மர்', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. சினிமாவில்தான் ஜூனியரே தவிர, ஆல்பங்களை உருவாக்குவதில் சீனியர். இவருக்கு இது இருபதாவது ஆல்பமாம்!

காதல் வானம் தொகுப்பில் மொத்தம் எட்டு பாடல்கள். அனைத்துமே அர்த்தமுள்ள, மனதை வருடும் இனிய கீதங்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் போன்ற திரை இசை பிரபலங்களுடன் டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் ஜனனி, இலங்கையின் சிவகுமார், சாம்.பி.கீர்த்தன் மற்றும் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா ஆகியோரும் பாடல்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

சுப்ரமணியபுரம் படத்தின் சூப்ப்பர் ஹிட் பாடலான கண்கள் இரண்டால்.... பாடிய தீபா மிரியம் இந்த ஆல்பத்தில் 'சின்ன சின்ன மழைத்துளி...' என்ற பாடலுக்கு குரல் தந்துள்ளார்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்புதான் எத்தனை சிறப்புமிக்கது! இந்த ஆல்பத்தில் தன் தந்தைக்கு ஒரு மகன் வைக்கும் கவிதைப் படையலாக ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அப்பா எனும் ஓர் உருவம்... என்ற அந்தப் பாடலை கேட்கும்போதே கண்கள் பனிக்கின்றன.

பெரும்பாலும் பெண்கள் தங்கள் முப்பதுகளைத் தாண்டியபிறகுதான் தொலைத்த இளமையைத் தேடத் தொடங்குவார்கள். அந்தத் தேடலின் புள்ளி அநேகமாக அவர்களின் பள்ளிப் பருவம் அல்லது அந்தரங்கம் பகிரந்து கொண்ட அன்புத் தோழியாகத்தான் இருக்கும். இதை, சாந்து பொட்டு வைத்து... என்ற பாடலில் பதிவு செய்துள்ளார் வசீகரன். அதற்கு இனிமையாய் சுருதி கூட்டியுள்ளார் உதயா.

வி.எஸ்.உதயா பாடியிருக்கும் சின்னமணி அக்கா...., கிருஷ்ணராஜ் பாடியுள்ள பொங்கலோ பொங்கல்... பாடல்கள் சந்தேகமில்லாமல் இன்றைய சினிமாவுக்கேற்ற சூப்பர் ஹிட் மெட்டுக்கள்.

'இன்னும் இதுபோன்ற 10 ஆல்பங்களை உருவாக்கப் போகிறேன். அனைத்துமே காதலைக் கவுரவிக்கும் வகையில்தான் இருக்கும். காரணம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீரையும் வலிகளையும் மட்டுமே பதிவு செய்யத் தெரியும் என்று கூறுபவர்களுக்கு எங்கள் காதலையும், இனிய மலரும் நினைவுகளையும் இசையாய் பதிந்து தரும் ஆர்வம்தான், என்கிறார் கவிஞர் வசீகரன்.

தமிழுக்கு இப்படி இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்!

-----------------------------------------------------------------------------------------------------

சிறகடிக்கும் 'காதல் வானம்' 13.08.2008

கிறங்கடிக்கும் ஹிட் ஆல்பம்!

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...ust/130808c.asp

புலம் பெயர்ந்த தமிழர்களின் 'இதயா'வாக இருக்கிறார் நம்ம ஊரு இசையமைப்பாளர் உதயா! நார்வேயில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழரான வசீகரன், அங்கிருந்து வரிகளை அனுப்ப, இங்கிருந்தபடியே அதில் இசையை நிரப்பிக் கொண்டிருக்கிறார் உதயா! இன்டர்நெட் மூலம் நடந்து வரும் இந்த இசை திருவிழா, உலக தமிழர்களை பொறுத்தவரை ஒரு மியூசிக் மேஜிக்!

லேட்டஸ்டாக இவர்கள் இருவரும் இணைந்து படைத்திருக்கும் ஆல்பத்தின் பெயர் 'காதல் வானம்' இவர்களின் முதல் ஆல்பமான 'காதல் கடிதம்', ஈழத்தமிழர்களின் பாராம்பரிய பாடலாகவே பதிந்துவிட்டது. இதையடுத்து வெளிவந்த 'காதல் மொழி'க்கும் ரசிகர்கள் மத்தியில் செம அப்ளாஸ்! இப்போது வெளிவந்திருக்கும் காதல் வானத்தில், சிறகடித்துப் பறக்கிறது இசையும் வரிகளும்!

இவர்களின் ஒவ்வொரு பதிவும், ஈழ மண்ணின் பதியமாகவே பார்க்கப்படுகிறது. காதல் வானத்தில் கூட, தனது பள்ளிப்பருவத்தை யோசித்து பார்க்கும் யுவதியின் வரிகள், ஈழத்தமிழர்களை மீண்டும் தனது சொந்த மண்ணுக்கே இழுத்துச் செல்லும். இன்னொரு பாடல், புலம் பெயர்ந்த தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்வதை வலியோடு பதிவு செய்திருக்கிறது. (முந்தைய ஆல்பங்களை ஒப்பிட்டால் ஈழத்தமிழர்கள் பற்றிய விஷயங்கள் இதில் குறைவு என்ற கருத்தும் நிலவுகிறதாம் ரசிகர்களிடம். 'அடுத்த ஆல்பத்தில் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்' என்கிறார் இசையமைப்பாளர் உதயா)

மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் போன்ற திரை இசை திலகங்கள் பாடியிருக்கிறார்கள். டென்மார்க்கை சேர்ந்த ஜனனி, இலங்கையை சேர்ந்த சாம் பி கீர்த்தன் ஆகியோருடன், இசையமைப்பாளர் உதயாவும் பாடியிருக்கிறார். லேட்டஸ்ட் ஹிட் படமான சுப்ரமணியபுரத்தில் 'கண்கள் இரண்டால்' பாடலை பாடியிருக்கும் தீபா மரியமும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படி ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல்கள் எட்டு. அத்தனையும் லட்டு.

காதல் கடிதம் ஆல்பத்தில் இடம்பெற்ற யாழ் தேவியில் பாடலை, திரை வடிவமாக பார்த்த பின்பு, இந்த ஆல்பங்களில் இடம் பெறும் எல்லா பாடல்களையுமே வீடியோ பதிவாக கொடுத்திருக்கலாமே என்ற ஏக்கம் வருகிறது. (ஏற்பாடு செய்வீங்களா?)

உங்களின் அடுத்த படைப்பும் காதல்தானா? என்றால், 'ஈழத்தமிழர்களுக்கு காதல் பிடிக்கும்! காதலுக்கு இசையை பிடிக்கும்! இசைக்கு எங்களை பிடிக்கும்' என்கிறார் உதயா! விட்டால், இதற்கும் ஒரு ட்யூன் போட்டு ரசிக்க வைப்பாரோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

---------------------------------------------------------------------------------------------------------------------------

திரைப்படத்துக்கு நிகரான 'காதல் வானம்' இசைதொகுப்பு - 09.08.2008

http://tamil.cinesouth.com/masala/hotnews/...9082008-7.shtml

கருவிகளின் சப்தத்தில் காதுகளை பொத்தலாக்கும் இன்றைய திரை இசை பாடல்களுக்கு மத்தியில், செவியில் விழுந்து இதயம் நுழையும் பாடல்களை தாங்கி உருவாகியுள்ளது 'காதல் வானம்' என்னும் இசைத்தொகுப்பு.

ஈழத்திலிருந்து நார்வேக்கு இடம் பெயர்ந்துள்ள கவிஞர் வசீகரனின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு இசை உயிர் கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா. 'கண்டேன் சீதை', 'பீஸ்மா', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு இது இருபதாவது ஆல்பம்.

டி.ஆர்.பாணியில் சொல்வதென்றால் 'காதல் வானம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எட்டு; ஆல்பம் வெளிவந்தால் அத்தனை பாடல்களும் ஆகிவிடும் ஹிட்டு.

மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் திரைஇசை பிரபலங்களும் பாடியுள்ள இத்தொகுப்பில் டென்மார்க்கை சேர்ந்த ஜனனி ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சிவகுமார், சாம்.பி.கீர்த்தன், வி.எஸ்.உதயா உள்ளிட்டோர்களும் தங்கள் குரல்களை பதிய வைத்துள்ளனர். 'சுப்ரமணியபுரம்' படத்தில் பிரபலமாகியுள்ள 'கண்கள் இரண்டால்....' பாடலை பாடிய தீபா மிரியம் இதில் 'சின்ன சின்ன மழைத்துளி...' என்ற பாடலை பாடியுள்ளார்.

நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண் தனது பள்ளி பருவத்தை நினைத்து தோழிக்கு கடிதம் வாசிப்பதுபோல இடம்பெற்றுள்ள 'சாந்து பொட்டு வைத்து...' பாடலும், அப்பாவை நினைத்து உருகியழும் ஒரு மகன் பாடும் பாடலாக இடம் பெற்றுள்ள 'அப்பா என்னும் ஓர் உருவம்' என்ற பாடலும் இதுவரை யாரும் தொடாத புதிய வடிவில் இடம் பெற்றுள்ளது. வசீகரனின் பேனாவில் கண்ணீரை ஊற்றி எழுதியிருப்பாரோ என்று யோசிக்கும் அளவுக்கு அந்த பாடல்கள், கேட்கும் நம்மை மெழுகாய் கரையவைக்கிறது. இன்றைய சினிமா டிரண்டிற்கு பொருந்துவதுபோல வி.எஸ்.உதயா பாடியிருக்கும் 'சின்னமணி அக்கா....' பாடல் ஒருவேளை சினிமாவில் பயன்படுத்தப்பட்டால் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் ஐயமில்லை.

செய்தியை படித்துவி்ட்டு 'அட அப்படியா....' என ஆச்சர்யப்படுபவர்கள், தொகுப்பை கேட்டு மகிழ்ந்து 'ஆமாம்' போட்டால் சந்தோஷம்.

- By Amalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.