Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது

வீரகேசரி நாளேடு 10/16/2008 8:46:16 AM - ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஐ.நா.வின் இரண்டாவது வாகனத் தொடரணி 7ஆம் திகதி செல்லும் என அறிவிக்கப்பட்டபோதும் அது நேற்று வரை வன்னிக்கு செல்லவில்லை. முன்னர் சென்ற பாதையை தவிர்த்து ஓமந்தை புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக செல்லுமாறு அரசாங்கம் பணித்ததையடுத்தே ஐ.நா.வின் இரண்டாவது வாகனத் தொடரணி வன்னிக்கு செல்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு குறித்துதமது குழு பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே இரண்டாவது வாகனத் தொடரணியின் பயணம் சாத்தியமாகுமென ஐ.நா. அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஐ.நா.வின் வன்னிக்கான உணவு விநியோகம் தற்போது என்ன நிலையில் உள்ளது என கேட்டதற்கு பதிலளித்த ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ்,ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்லவுள்ளன.

இன்று செல்லவுள்ள இரண்டாவது வாகன தொடரணியின் மூலம் 650 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.புதிய விநியோப் பாதையின் பாதுகாப்பு குறித்து எமது குழு நேற்று நேரில் சென்று ஆராய்ந்தது. எனவே இன்று இரண்டாவது உணவு வாகனத் தொடரணி வன்னிக்கு செல்லும் என எதிர்பார்க்கின்றோம்

சென்ற பின் சொல்வது தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உணவு வாகன தொடரணியை பார்த்தபடி எத்தனை மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த உணவை தானும் உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கக்கூடாதா??? :o .அவர்கள் உயிர் வாழ்ந்தால்தானே நீங்கள் அப்புறம் குண்டு போட்டு கொல்லலாம் அதுக்காகவாவது அனுப்பிவையுங்கோ

சென்ற பின் சொல்வது தானே?

செல்லாது என்று தெரிந்தால் தான் என்னவோ?

புலிகளின் செல்தாக்குதல், மற்றும் கிளைமோர்தாக்குதல் என்பவற்றால் அவை செல்லமுடியாமல் வவுனியா திரும்பிவிட்டனவாம்!

செய்திக்கு (கருத்துக்கு) நன்றி சாணக்கியன் :o

Food convoy returns due to heavy fighting - UN

Despite an earlier security clearance the UN food convoy on the way to Wanni had to return after heavy fighting broke out along the A9 road, UN spokesman claimed.

Daily mirror

இதுக்கு என்ன சொல்கின்றீர்கள்.பாலத்தை உடைத்தார்கள்,மாற்று பாதை பயன்படுத்த சொன்னார்கள்.இப்போது.....

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.