Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை காட்டிகொடுக்க மாட்டார் என்பது தமது திடமான நம்பிக்கை - சம்பிக்க ரணவக்க

Featured Replies

மாவிலாறு தொடங்கி கிழக்கு மாகாணத்தை மீட்கும் வரை போரைத் தொடர்ந்து நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கை மீட்கும் வரை யுத்தத்தை நிறுத்த மாட்டார் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை காட்டிகொடுக்க மாட்டார் என்பது தமது கடுமையான நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1987ல் இந்தியா மேற்கொண்ட தலையீட்டுக்கு அபராதமாக ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்பட்டது மீண்டும் தலையிட்டால் அத்தகைய இழப்பைச் சந்திக்க நேரிடும்:

இந்தியா என்பது தனியான நாடு, அதேபோல் இலங்கையும் ஒரு தனியான ஒரு நாடு எனவும் இலங்கையின் பிரச்சினையில் தலையிடவோ, அழுத்தங்களை ஏற்படுத்தவோ இந்தியாவினால் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டுகளில் இந்தியா, விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களை வலுப்படுத்தியதாக குற்றம்சுமத்திய அவர், 1987 ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட தலையீட்டுக்கு அபராதமாக ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்பட்டதாகவும,; இம்முறை அவ்வாறான தலையீடுகளை இந்தியா மேற்கொள்ளுமாயின் இவ்வாறான இழப்பை இந்திய சந்திக்க நேரிடும் எனவும் சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள தமிழ் இனவாத கட்சிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்த போதிலும் இந்தியாவில் மேலும் பல பௌத்த கட்சிகள் இருப்பதாகவும் இந்த கட்சிகளின் ஊடாக இலங்கை மீது தலையீடுகளை மேற்கொள்வதை தடுக்க இந்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நடைபெற்று வரும் மனிதநேய நடவடிக்கையின் மூலம் தமிழ் மக்களை மீட்டு, அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் போராட்டத்திற்கு, இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கில்; அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தினால் 1980களில் ஏற்பட்ட நிலைமை ஏற்படுவதை தடுக்க முடியாது:

இலங்கையின் பிரச்சினையில் இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறி, தெற்கில் உள்ள சில கட்;சிகள் அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெற்கில் அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், 80 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமை இலங்கையில் மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியாது எனவும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் இருந்து இலங்கை நோக்கிய ஆக்கிரமிப்பு வரலாற்றில் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. எதிர்க்காலத்தில் அவ்வாறான ஆக்கிரமிப்பது ஏற்படக் கூடும் எனவும் அவ்வாறான சூழல் ஏற்பட்டால், அதற்கு எதிராகவும் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை காப்பற்றவும் முழுமையான தேசிய அமைப்பு ஒன்றின் அவசியம் குறித்தும் அவர் வலிறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளருக்கு கேள்வி எழுப்ப உரிமையில்லை:

இந்தியாவின் அழுத்தத்திற்கு அமைய அரசாங்கம் போர் நிறுத்தம் மேற்கொண்டால், அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பிக்க ரணவக்க,

ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான கேள்விகளை எழுப்ப உரிமை இல்லை எனவும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்புகளை வழங்குவது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் கூறியதுடன், இத்துடன் கேள்விகள் போதும் எனக் கூறி ஊடகவியலாளர் மாநாட்டை நிறைவுசெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.