Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா எம்மை என்ன செய்துவிட முடியும்? அதன் அச்சுறுத்தலுக்கு அடிபணியக்கூடாது! கர்ச்சிக்கிறார் விமல் வீரவன்ஸ

Featured Replies

இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்து விட முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு மூடைகளையே போட முடியும்.

இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் கூறியவை வருமாறு:

வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக வாஷிங்டனும் புதுடில்லியும் மேற்கொள்ளும் சதித்திட்டத்தை தோல்லியுறச் செய்ய தேசப்பற்றாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்ய முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு முடைகளைமட்டுமே போட முடியும் வாஷிங்டன், ஒஸ்லோ, ஜேர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் கடந்தகாலங்களில் எமது பிரச்சினையில் தலையிட்டு மூக்குடைபட்டன. அன்று புலிகள் தோல்லியுறும் இறுதித்தருவாயில் அவர்களும் இன்று தமிழ்நாட்டில் இடம்பெறுவது போன்றே நாடகங்களை அரங்கேற்றினார்கள். எமது படையினர் விடுதலைப்புலிகளை முழுமையாக அழிக்கும் வெற்றிகரமான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனர். இதனைத் தடுக்க மேற்குலகம் பல்வேறு சதிகளை மேற்கொள்கிறது. புதுடில்லியும், வாஷிங்டனும் இணைந்து பிரபாகரனைப் பாதுகாக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றன.

தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இரண்டு வாரங்களில் இலங்கை யுத்தத்தை நிறுத்த இந்திய மத்திய அர” நடவடிக்கை எடுக்கா விட்டால் எம்பிக்கள் 40 பேர் ராஜிநாமா செய்வார்கள் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இவையெல்லாம் தமிழ்மக்கள் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடல்ல தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் நீண்ட காலக் கனவு கலைந்து போவதை தாங்கிக்கொள்ள முடியாமலே போராட்டங்களை நடத்துகின்றனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரனை பயன்படுத்தி இலங்கையின் வடக்கு, கிழக்கை தமிழகத்தையும் இணைத்து விசாலமான தமிழீழத்தை அமைப்பதே தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நீண்டகாலக் கனவாகும்.

ஆனால் இன்று எமது படையினர் பிரபாகரனை சுற்றி வளைத்துள்ளனர். எனவேதான் போராட்டங்களை நடத்துகிறார்கள். இலங்கை இறைமை மற்றும் சுதந்திரமான நாடென பிரதமர் மன்மோகன்சிங் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தி இந்திய எல்லையைக் காண்பிக்க வேண்டும்.

எமது மக்கள் மன்மோகன்சிங்குக்கு வாக்களிக்கவில்லை மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினார்கள் அதுவும் பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிப்பதற்காகவே ஆணை வழங்கினார்கள்.

இலங்கை இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவே எம்மை அடக்கியாள முனையக்கூடாது என்றார்.

நன்றி உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.