Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் இன்று நடத்தப்படவிருந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் மழை காரணமாக ஒத்திவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்துத் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பா.ம.க., சி.பி.ஜ., சி.பி.எம்.உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 24ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வரும் 24ஆம் திகதி நடக்கும் இந்தப் போராட்டத்தில்,

ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்குமாறு இந்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தும் முகமாகவும் தமிழர்களின் அவலங்களை உலகறியச் செய்வதற்காகவும் சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தமிழக மக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

"இலங்கையில் தமிழன் கொல்லப்படுகிறான். அதுகேட்டு தமிழனாகப் பிறந்தவன் கொதிக்கிறான். இந்தச் செய்தியை உலகுக்குத் தெரியப்படுத்தத்தான் மனிதச் சங்கிலி" என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-

இலங்கைத் தமிழர்களின் உரிமை, மொழி, கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், சிங்கள மொழியின் ஆதிக்கம் அகலவும் அங்குள்ள தமிழர் கிளர்ந்தெழுந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினை 1956ஆம் ஆண்டிலிருந்து உருவானது என்று நான் சுட்டிக்காட்டியமைக்கு ஆதாரமாக அதே தீர்மானத்தை சான்றாகக் கூறியிருந்தேன். அதைப் படித்துவிட்டு சிலர் 1956ஆம் ஆண்டில் இருந்து வரும் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி, இப்போது தீர்க்கப் போகிறார் எனச் சொல்வது மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.

தமிழ் நாட்டில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாது என்றும் பொய் கூறி அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு, நாம் நமது இரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியைத் தொடருவோம்.

அனைத்துக் கட்சிகளின் சார்பில் 24ஆம் திகதி நடத்தவுள்ள மனிதச் சங்கிலி அணிவகுப்பால் என்ன பயன் என்று ராசிபுரத்திற்குப் போய் ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். இதே கேள்வியைக் கேட்டு என்ன பேசுவது என்று தெரியாமலே வேறு சிலர் பேசித் திரிகிறார்கள்.

இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத்தான் மனிதச் சங்கிலி.

எந்த இனமான தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ அந்த மண்ணில் அவன் தலை பந்தாடப்படுகிற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம். துவண்டு போகிறோம். அதை வெளிப்படுத்தத்தான் மனிதச் சங்கிலி.

இலங்கைக் கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்தியப் பேரரசு ஒரு கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தத்தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல, அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் இதற்கோர் முடிவே கிடையாதோ என்று கொதித்துக்கேட்கும் நிலையை உலகுக்கு வெளிப்படுத்தத்தான் மனிதச் சங்கிலி. சென்னையில் 24ஆம் திகதி சரியாக 3 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்கும். தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ, அள்ளி, அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தொலைபேசியில் என்னிடம் நன்றி தெரிவிக்கிறார்கள். கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அந்தக் கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை, அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன. தமிழன் கொல்லப்படுகிறான். அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும், இருப்பவனும் கொதிக்கிறான். இந்தச் செய்தி உலகுக்கு எட்டவேண்டும் என்பதற்காகத்தான் மனிதச் சங்கிலி. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.