Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்னையில் குலுங்கிய இங்கிலாந்து!

இலங்கைத் தமிழர்களைக் காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார்' என்று அறிவித்ததோடு நிற்காமல் தமிழ்நாட்டின் உணர்வை உலகுக்கு எடுத்துக்காட்ட 'தமிழர் சங்கிலி' போராட்டத்துக்கும் வழி வகுத்தார் தமிழக முதல்வர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலில் அதை மத்திய அரசேகூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் வெளியுறவுத்துறைச் செயலாளரை விட்டு இலங்கைத் தூதரிடம் பேசச் சொன்னார்கள். தி.மு.க. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது என்பது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததற்குப் பிறகுதான் மத்திய அரசுக்கே புரிந்தது. அவரைத் தொடர்ந்து தி.மு.க&வின் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்மு டைய ராஜினாமா கடிதங்களை முதல் வரிடம் ஒப்படைத்தபோது, மத்திய அரசு கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தது. அதன்பிறகுதான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைப் பிரச்னை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரிடம் தொலை பேசியில் பேசியதாகச் செய்திகள் வெளிவந்தன.

p8id0.jpg

இதற்கிடையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் இலங்கைத் தமிழர் பிரச்னை பெரிதாக வெடித்திருக்கிறது. இதுகுறித்த விரிவான விவாதம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. அங்கே ஆட்சி செய்து வரும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஜோன் ரயான் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்து ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் லேபர் கட்சிமட்டுமன்றி கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி&க்களும் கலந்துகொண்டு தம்முடைய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வெளி விவகாரத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபோஸ்டரும் இதில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் ஆதரவை எடுத்துக்கூறியிருக்கிறார். விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜோன் ரயான், ''இந்த விவாதத்தில் பலரும் கலந்துகொள்ள முன்வந்திருப்பதிலிருந்தே, இலங்கையில் நிலவும் அவலச் சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொண்டி ருப்பது தெரியவருகிறது. இங்கிலாந்தில் ஈழத்தமிழர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். லண்டனில் மட்டும் ஒன்றரை லட்சம்

தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நம்முடைய நாட்டுக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியின் மூலம் தம்முடைய கவலைகளை தெரிவித்திருக் கிறார்கள். இலங்கையில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை ஐ.நா&வின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையும் உறுதி செய்திருக்கிறது'' என்றவர்,

''இலங்கைப் பிரச்னையில் நாம் இரண்டு அம்சங் களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த ஜூலை மாதம் முதல் உக்கிரமடைந்திருக்கிற யுத்தம், தமிழர்கள் வாழும் வன்னிப் பகுதியில் இருந்து ஐ.நா. அமைப்பைச் சேர்ந்தவர்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டிருப்பது ஆகிய இரண்டு அம்சங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார் ஜோன் ரயான். அடுத்து பேசிய பேரி கார்டினர் என்ற எம்.பி., கடந்த டிசம்பர் மாதம் வரை தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்கு தினந்தோறும் எழுபது லாரிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வந்ததாகவும், அவை இப்போது அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டு விட்டது என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை இலங்கையில் நடைபெற்று வந்த யுத்தத்திலேயே மிகவும் மோசமான யுத்தம் இப்போது நடப்பதுதான் என்று அந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் திறந்த வெளியில், மரத்தடியில் வாழ்கிறார்கள் என்பதையும் விவாதத்தில் கலந்துகொண்ட எம்.பி&க்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.