Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றி: கனடிய தமிழர் பேரவை

Featured Replies

ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றி: கனடிய தமிழர் பேரவை

[புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 11:13 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினதும் தலைவர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எம் உணர்வுகளில் ஒன்றித்துக் கலந்துவிட்ட தாய் தமிழகத்தின் தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே ஈழத்தின் இன்றைய அவல நிலை கண்டு இன உணர்வு கொண்டு தமது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினதும் தலைவர்களே -

தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி கனடா தேசத்தில் தற்காலிகமாகத் தரித்திருந்த போதும் நாளும் பொழுதும் நினைவிலும் கனவிலும் தம் தாயக தேசத்தையே சிந்தையில் சுமந்தபடி வாழும் கனேடிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் சார்பில் கனேடியத் தமிழர் பேரவையின் நன்றி கலந்த வணக்கங்கள்.

பெரியார் அண்ணா காலம் முதல் எப்போதெல்லாம் ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள கொடுங்கோல் அரசு வன்முறைகளை நிகழ்த்தி அவர்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி ஓட ஓட விரட்டி அவலம் சூழ்ந்த வாழ்வை அவர்களுக்கு திணிக்கின்றதோ அப்போதெல்லாம் உலகமே மௌனித்து கைவிட்ட கையறு நிலைகளில் கடல் கடந்து வரும் உங்கள் நேசமிகு ஆதரவுக்குரல்களே எமக்கான மனோவலிமையையும் தடைகளைத் தாண்டும் வேகத்தையும் அளித்து வருகின்றன.

என்றுமில்லாத வகையில் சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில் ஈழத் தமிழ் மக்கள் மீது அழிவுகளையும் கொடும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மக்களின் வாழிடங்களை வல்வளைப்புச் செய்து வீடுகளிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் அவர்களை விரட்டியடித்து மாபெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி வருகிறது. வீடிழந்த மக்கள் காடுகளில் கூடமைத்து நச்சு விலங்குகளின் அச்சுறுத்தல் மிகுதியாகி சொல்லொணாத் துயரங்களை சுமந்து வருகிறார்கள்.

அநாதரவாக ஏதிலிகளாக கைவிடப்பட்ட மக்கள் மீதும் சற்றெனும் மனித நேயமற்று சிங்கள அரசின் இராணுவ இயந்திரம் வான் வழியிலும் தரை வழியிலும் கனரக குண்டுத் தாக்குதல்களை நடாத்தி பெண்கள் குழந்தைகள் என்ற பேதமேதும் அற்று கொன்றொழித்து வருகிறது. உலக போரியல் விதிகளை மீறி மக்கள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி உடலங்களை உயிரோடு எரித்து வருகிறது.

ஐ.நா. உட்பட்ட அனைத்துலக அமைப்புக்கள் எம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களில் எந்த விதமான ஈடுபாடுமற்று இருக்கும் நிலையில் நமக்கென யாருமே இல்லையா என்ற எம் மக்களின் குரல் கேட்டு கடல் கடந்து வந்து கரம் கொடுக்கிறது உங்கள் குரல். நன்றியோடு உங்கள் கரங்களை பற்றிப் பிடித்துக்கொள்கிறோம் நாம்.

தமிழகத் தலைவரே இதுவரை காலமும் நீறு பூத்த நெருப்பாக தமிழக உறவுகளின் மனங்களில் ஆழப்படிந்திருந்த தமிழீழ ஆதரவு அலை இன்று நீங்கள் திறந்து விட்ட வாசல் வழியாக ஆர்ப்பரித்து எழுந்து அலை அலையாக தமிழகமெங்கும் பொங்கிப் பிரவாகிப்பது கண்டு பூரித்துப் போய் நிற்கிறோம். நாம் தனித்தவர்கள் அல்ல என்னும் எண்ணமே எமக்குள் இறுமாப்புற்று எழுச்சியுற வைக்கிறது.

கைவந்து தாங்கும் நீளக் கடல் கடந்து கருணையுள்ளத்தோடு நீளும் உங்கள் குரல் இன்னும் இன்னும் வானளவு விரிந்து - இந்திய அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் உங்களது இராஜதந்திரமும் இணைந்து - இலங்கையில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வலுவுள்ள பிராந்திய வல்லரசான இந்தியா - தனது முன்னைய வெளியுறவுக் கொள்கைகளை மீள் பரிசீலனை செய்து - ஈழத் தமிழர் இப்போது எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களான உணவு உறைவிடம் மருந்து அத்தியாவசியப் பொருட்தடை ஆகியவற்றை விரைந்து நீக்கி இயல்பு வாழ்வினைத் தருவதோடு தொடர்ந்தும் கவனம் செலுத்தி சிங்கள மேலாதிக்கத்துடனான தமிழரின் வரலாற்று இனமுரணை சரியான முறையில் எடுத்துரைத்து எப்போதும் தமிழர் பக்கமிருக்கும் அரசியல் நியாயத்தன்மையை விரித்துரைத்து ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசியம் மரபு வழித் தாயகம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை இந்தியாவும் உலகமும் அங்கீகரிப்பதற்கான சரியான திசையில் இந்திய மத்திய அரசை வழிநடத்தும் வண்ணம் அதற்கான வேண்டுகோளை ஈழத் தமிழ் இனத்தின் சார்பில் முன்வைக்கின்றோம்.

மிக விரைவில் ஈழத் தமிழினம் அமைதி பெறும் எனவும் வரலாற்றுக்காலம் தொட்ட அதனது தமிழகத்துடனான அரசியல் பண்பாட்டு பொருளாதார உறவுகள் எதிர்காலத்திலும் தொடரும் எனவும் நம்புகிறோம். விரைவில் வந்தடையப் போகும் எம் நிமிர்ந்த வாழ்விற்கு நேசக்கரம் நீட்டிய தமிழக அரசியற் கட்சிகள் தலைவர்கள் நிறுவனங்கள் பொது அமைப்புகள் மாணவர்கள் என அனைவருக்கும் நன்றிகளை காணிக்கையாக்குகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.