Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி

Posted by நந்தாOctober 24, 2008

உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது. கண்முன்னே பரந்து கிடக்கும் கையாலாகாத்தனம் வாழ்வின் இருப்பை கேலி செய்துக் கொண்டிருக்கிறது. எவரைத்தான் நம்புவது எனும் கேள்வி ஒன்று மனதினுள் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் எல்லா பிரச்சினைகளுக்கும் பதிலாய் ஒரே ஒரு பதிவு போடுவதோடு நின்று போய்விடுகிறோமே(னே) என்ற எண்ணம் என்னை ஓர் குற்றவாளியாய் நிறுத்தி வைத்திருக்கின்றது.

அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தல்கள், ராஜதந்திரம், சாணக்கியத்தனம் இன்னும் எத்தனை எத்தனையோ அரிதாரங்கள் பூசிய வார்த்தைகளின் பின்னே கலைஞரின் செயல்கள் மீண்டும் ஒரு முறை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. நடு நடுவில் “கலைஞரே ஏமாந்து விடாதீர்கள்… இது அவர்களின் திசை திருப்பல்” என்பது போன்ற குரல்கள் உயர் எழும்பிக் கொண்டிருக்கின்றன. வை.கோ வைக் கைது செய்ய கலைஞர் என்னமோ ஜெ அம்மையாரின் அறிக்கையால் பயங்கரமாய் நிர்ப்பந்திக்கப் பட்டாற் போலவும், அந்த சூழ்ச்சியில் கலைஞரும் தெரியாமல் வீழ்ந்து விட்ட மாதிரியும் பலர் பேசி விட்டுச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் கலைஞர்தான் இப்படி வை.கோ கைது மூலமாய் பிரச்சினையை மொத்தமாய் திசை திருப்பிக் கொண்டிருக்கிறாரோ என்று பலமாய் தோன்றுகிறது. மீண்டும் ஒரு முறை ஈழத் தமிழர் விவகாரம் படு கேவலமான முறையில் அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தங்கபாலு, ஞானசேகரன் இளங்கோவன் என எல்லா காங்கிரஸ்காரர்களும் என்ன சொல்லியாவது தான் ராஜீவ் காந்தியின் பொருட்டு கடும் கோபத்துடன் இருப்பது போலக் காட்டிக் கொள்ள ரொம்பவே பிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தொடர் அறிக்கையை படிக்க படிக்க கெட்ட வார்த்தைகள்தான் தோன்றுகிறது.

உச்சநீதி மன்ற உத்தரவுக்குப் பின்பும் காவிரியை திறந்து விட மறுக்கு கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூட அவர்களைக் கைது செய்யலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஒரு வேளை சேரன், சீமான், அமீர் உள்ளிட்டோர் காவிரி பிரச்சினையைப் பற்றியும் கோடு காட்டிப் பேசியிருக்கா விட்டால் “எனக்கென்ன போச்சு, எப்படியோ அடிச்சுக்கிட்டு சாவுங்கடா” என்று அவர் தேமேன்னு உட்கார்ந்திருக்கலாம். அறிக்கைகளை விட்டவர்களில் எத்தனை பேர் ஈழத்து தமிழர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகள் அடங்கிய சி.டியை பார்த்திருப்பார்கள் என்று தெரிய வில்லை.

மனதின் ஏதேனும் ஓர் மூலையில் ஈரம் இன்னமும் கொஞ்சமேனும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்த பிரச்சினையை இவ்வளவு மோசமாய் கையாள்வார்களா என்று தெரிய வில்லை. வை.கோ கைது, சீமான் கைது, அமீர் கைது, திருமாவளவன் கைது, காங்கிரஸ் மனித சங்கிலிக்கு ஆதரவு தருகிறது.(கலந்துக் கொள்ளுமா என்றெல்லாம் தெரியவில்லை) அப்புறம் என்ன கருமத்துக்குடா மனித சங்கிலி போராட்டம்னுட்டு. ஊரை ஏமாத்தறதுக்கா என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு மழை பெய்தாலும் இன்று மனித சங்கிலி நடந்தே தீரும் என்று உணர்ச்சி வசப்பட்டு டயலாக் விட்டால் மட்டும் போதுமா? ராஜினாமா கடித்தத்திற்கே ஒரு மரியாதையும் இல்லை.

சரி இந்த மனித சங்கில் தாம்பரம் தாண்டி, வண்டலூர் தாண்டி நீண்டு விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம்.அப்போ மட்டும் என்ன நடந்து விட முடியும் என்று தெரிய வில்லை. ஈழத் தமிழர் விஷயத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு ஒரு மாதிரியாய் இருக்கின்றது. சோனியா பட்டும் படாமலும் நடந்து கொள்கிறார். பிரியங்காவின் நிலைப்பாடு ராகுல் காந்திக்கு எதிராய் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தத்தமது பங்குக்கு மூவர் காலடியிலும் இடம் பிடிக்க மாற்றி மாறி கருத்துக்களைச் சொல்லி சொல்லி இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலிதா அம்மையார் இந்த விஷயத்தில் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நடந்துக் கொண்டிருக்கிறார். “நளினி ஓர் தியாகி போல அவர்களை விடுதலை செய்ய இத்தனை கோரிக்கைகள் எழுகின்றன” என்று முழங்கி இருக்கின்றார். நளினி எத்தனை வருடங்களாய் சிறையில் இருந்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்துதான் பேசுகிறாரா இல்லையா என்று சந்தேகப் பட வேண்டியதாயிருக்கிறது. சீமான், அமீரைக் கைது செய்ய கோரி இவ்வளவு ஆவேசப்படும் அம்மையார் மீனவர்களை இலங்கை அரசாங்கம் கொன்றுக் குவித்த போது கூட இவ்வளாவு ஆவேசப்பட்டிருக்கிறாரா என்று தெரிய வில்லை. அப்பவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, அரசை கலைக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். எழவு வீட்டில் கூட தான்தான் பிணமாய் இருக்க வேண்டும் எனும் புத்தி வேறு என்ன செய்ய?

இனி தமிழக அரசு என்ன செய்யப் போகின்றது. கலைஞர் மனித சங்கிலியை விட கைதுக்களில்தான் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கும், ஜெயலலிதாவிற்குமிடையே “யார் பெரிய ராஜ தந்திரி” எனும் சறுக்கு மர விளையாட்டு நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டில் ஜெயிப்பது யாராயிருந்தாலும் தமிழர்கள் தோற்றுப் போகப் போகின்றார்கள்.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வரப் போகின்றது. காங்கிரஸ்காரர்கள் எவராவது ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டு வீதிகளில் நுழைந்தால் விளக்குமாறைக் கொண்டுதான் வரவேற்க வேண்டும். பா.ஜ.க - அத்வானியோ “இந்திய தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் அழித்தெடுப்பை பல காலமாய் செய்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு நமது தர்ம நியாயங்கள் புரியப் போவதில்லை.

ஏன் பாராளுமன்ற தேர்தலைப் பற்றி பேச வேண்டும். அடுத்த சட்ட மன்ற தேர்தலின் போது ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இவர் நியாயமாய் நடந்துக் கொள்வார் என்று சொல்லி எவரைத் தேர்ந்தெடுப்பது. தி.மு.க உண்மையில் திராவிட கட்சிதானா எனும் ஐயம் அவர்கள் உத்தப்புரம் மற்றும் ஈழ விவகாரத்தில் காத்து வரும் மௌனம் மற்றும் இரட்டை நிலைப்பாடுகள் கிளப்பி விட்டிருக்கின்றன. ஜெ. அம்மையார் சத்தியமாய் ஆதரவாய் நடந்துக் கொள்ள மாட்டார். பழிவாங்குதல் நடவடிக்கைக்கே அவருக்கு நேரம் சரியாய் இருக்கும். இவ்வளவு நடந்த போதும் மாநாடு நல்ல படியாய், வெற்றிகரமாய் முடிந்தது என்று அறிக்கை விடும் தே.மு.தி.க, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோ என்று தெரிந்துதான் செய்து கொண்டிருக்கிறாரா என்று எண்ணத் தோன்றும் வை.கோ, எவரை நம்பி ஓட்டளிப்பது….

எல்லாவற்றிற்கும் மேலாய் பிரணாப் முகர்ஜியின் பேச்சு.

“இலங்கையில் நடக்கும் சண்டையால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இலங்கை நிலவரத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால், அகதிகள் இந்தியாவுக்கு வராமல் பார்த்துக் கொள்ளும்படி இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளோம்.

புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையால் இடம் பெயரும் மக்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. இலங்கையில் நடக்கும் சண்டையால், அப்பாவித் தமிழர்களின் நலனும், உரிமையும் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளோம். இலங்கை இனப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. ஐக்கிய இலங்கையின் வரையறைக்கு உட்பட்டு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். அதே நேரத்தில், தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் அனைவரின் சட்டப்பூர்வமான உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். சர்வதேச கடல் எல்லையை இந்திய மீனவர்கள் மதிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்

இலங்கை பிரச்சினை என்பது பொறுமையாய் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை. அதை வேறு எந்த வகையிலும் கையாள முடியாது. ப்ளா ப்ளா ப்ளா. காங்கிரஸ் அரசு இனி வரும் காலத்தில் இலங்கை பிரச்சினையில் ஒன்றையும் கிழித்து விடப் போவதில்லை என்பதை இதை விட அழகாய் பூசி மெழுகப்பட்ட வார்த்தைகளால் சொல்லி விடப் போவதில்லை.

என்ன சொல்லி திட்டினால் உங்களுக்கு உறைக்கும்.

http://blog.nandhaonline.com/?p=72

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் விவகாரம் : கேடு கெட்ட அரசியலுக்கு நிகழ்காலமொரு சாட்சி

Posted by நந்தாOctober 24, 2008

உச்சகட்ட வெறுப்பாய் இருக்கின்றது.

என்ன சொல்லி திட்டினால் உங்களுக்கு உறைக்கும். போங்கடா மயிரானுங்களா

http://blog.nandhaonline.com/?p=72

இந்த வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம்....

உங்களின் அதே மனநிலையில்தான் இப்பொழுது நானும் இருக்கின்றேன். எங்கள் கண்ணீரைத் துடைப்பதாய்ச் சொல்லிக்கொண்டு கட்சி வளர்க்கும் இவர்களை என்ன சொல்லிப் பேசுவது?!!

எங்கள்நிலை என்று மாறும்?!!!...நெஞ்சு வலிக்கிறது...புலம்பெயர் தமிழர்கள் அத்தனைபேருமே ஈழத்தை நோக்கிப் படை எடுக்க வேண்டியது தான் ஒட்டுமொத்த சிங்கள இராணுவத்துக்கும் பாடம் புகட்ட வேண்டியதுதான். . "மானத்தை விட உயிர் பெரிதா????? என்ன?!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.