Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட வந்துள்ள புதிய அவசரகால சட்ட விதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட வந்துள்ள புதிய அவசரகால சட்ட விதிகள்

[03 நவம்பர் 2008, திங்கட்கிழமை 9:30 மு.ப இலங்கை]

‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள்.

கெட்டுப் போக முடிவு செய்தவன் கேட்டையே நாடுவான். அவனைத் திருத்தவே முடியாது.

அந்த நிலைமைதான், இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் கெட்டழியச் செய்யும் எண்ணத்திலும் இலக்கிலும் உள்ள அதிகார வர்க்கத்தின் போக்கிலும் தென்படுகிறது. அவர்கள் திருந்தவே மாட்டார்கள் போலும்.

ஊடகப் பாதுகாப்பு இயக்கமான ‘ஊடக குறியீட்டு பிரசார அமைப்பு’ கடந்த வருடம் தான் நடத்திய ஆய்வின் பின்னர், ‘உலகில் பத்திரிகையாளர்கள் பணிபுரிவதற்கு மிகவும் பயங்கரமான இடம்’ என்று இலங்கையை வர்ணித்திருந்தது. உலகில் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்து ஊடகவியலாளர்கள் கடமையாற்றுவதற்கு மிகமிக மோசமான நாடு என்ற (அவப்) பெயரை இலங்கை சம்பாதித்துக்கொள்ள வழி செய்தது நமது ‘மஹிந்த சிந்தனை’ ஆட்சி முறைமை.

இதன் பின்னர் ஓராண்டு கழித்து - இவ்வருடத்தில் - ‘எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு’ என்ற பிரான்ஸைத் தளமாகக் கொண்ட நிறுவனம் நடத்திய குறியீட்டு ஆய்வுகளின்படி ஊடகசுதந்திரம் பேணும் நாடுகளின் வரிசையில் கடைசி பத்துக்குள் இலங்கைக்கும் இடம் கிடைத்திருக்கின்றது.

சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் வெளியான இந்தக் குறியீட்டு அளவுகளின்படி, 173 நாடுகளில் 165 ஆவது இடத்திலேயே இலங்கை உள்ளது என்பது அம்பலமாகியுள்ளது. சீனா,ஈரான், கியூபா, துருக்மெனிஸ்தான், வடகொரியா, எரித்திரியா ஆகியவற்றுடன் கடைசி வரிசையை இலங்கை பெற்றிருக்கின்றது.

இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் ஏற்கனவே மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்குதல் போன்றவற்றுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்த ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம், சோமாலியா ஆகியவற்றை எல்லாம் விட இலங்கையில் ஊடக சுதந்திரம் கெட்டுக் குட்டிச்சுவராகிவிட்டது என்ற கணிப்பீட்டுப் பெறுபேறுதான்.

புலிகளை அழித்தல், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தல், நாட்டின் இறைமையை நிலைநிறுத்தல் என்ற பெயர்களில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி, அடக்கி, கெடுபிடிக்கு உள்ளாக்கி ஊடக சுதந்திரத்தை மீறும் பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை ஆட்சிப்பீடம் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றது.

இதனால் ஊடக சுதந்திரத்தை மறுக்கும் நாடுகளின் வரிசையில் உயர்வான இடம் இலங்கைக்குக் கிடைத்துவருகின்றது.

இந்தச் செயற்பாடு ஒழுங்கில், இப்போது அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் புதிய சட்ட ஒழுங்கு விதிகள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களை - தொலைக்காட்சிச் சேவைகளை - கட்டுப்படுத்தி, தமக்கு இசைவாகச் செயற்படவைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

தொலைக்காட்சிச் சேவைகளின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டு அடைக்கும் - ‘தணிக்கை’ போன்ற கடும் விதிமுறைகளைக் கொண்ட - வர்த்தமானி அறிவித்தலை, அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் ஊடக அமைச்சர் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்டிருக்கின்றார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொது நலன் விவகாரத்தில் ஈடுபாடு உள்ள பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து முன்வந்திருக்கின்றன.

அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படக்கூடிய திருக்கூத்துகளைக் கட்டுப்படுத்துவதில் உயர்நீதிமன்றம் வலு கரிசனையாகவும் கவனமாகவும் உள்ளது என்பது தெளிவு. அதனை உறுதிப்படுத்தும் பல தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் அது அண்மைக்காலத்தில் வெளியிட்டு வருகின்றது என்பதும் தெரிந்த விடயமே.

1997 இலும் இதேபோன்று சந்திரிகா அரசினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட விதி உயர்நீதிமன்றத்தினால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், இலத்திரனியல் ஊடகங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள தற்போதைய கட்டுப்பாட்டு விதிகளுக்கும் அதே நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எது,எப்படியென்றாலும் இத்தகைய ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக - கருத்துச் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் அதிகார அராஜகத்துக்கு எதிராக - அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கிளர்ந்தெழுவது அத்தியாவசியமானதாகும்.

இலத்திரனியல் ஊடகங்களை - குறிப்பாக, மக்களை இலகுவாகச் சென்றடைவதும், அதிக தாக்கம் கூடியதுமான தொலைக்காட்சிச் சேவையை - அடக்க முற்படும் இந்த நடவடிக்கை கருத்து வெளியிடும் மக்களின் பிரதான சுதந்திரத்திற்கு அடியோடு இழுக்கு ஏற்படுத்தும் எத்தனமாகும். இதனை அனுமதிப்பது ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையையே சிதைத்துவிடும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.