Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக உறவுகளின் ஈழ தமிழருக்கான எழுச்சி, குழப்பம் ஏதுமின்றி ஈழத்தமிழரின் விடிவுவரை தொடர வேண்டும்.

Featured Replies

தமிழக அரசியல் கட்சிகள் ஈழத்தில் தமிழர்களின் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்களோ, அதேயளவு தமிழர்களின் சுய உரிமை போரின் தன்மையையும், கடந்த கால நிகழ்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் ஈழ தமிழருக்கு ஒரு நிரந்தரமான, சுயமரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை தமிழகத்தால் பெற்றுக் கொடுக்க முடியும். தமிழக தலைவர்களுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் சிங்கள இனவெறி அரசின் பொய்பிரசார போர் உலகின் கண்களுக்கு பல உண்மைகளை மறைத்துவிட்டது.

சிங்களத்தின் தன்னிச்சையான, தமிழருக்கு எதிரான போரையும், வரலாறையும் மறைத்து புலிகளும் போர் நிறுத்த வேண்டும் என்று சொல்வது "மத்திய கொள்கை வகுப்பு கூட்டத்தின்" தமிழக எழுச்சியை நீர்த்துப்போகும் படி செய்யும் தந்திரமே.

தமிழர் தரப்பில் புலிகள் ஒருதலைபட்சமாக போர் நிறுத்தம் செய்தனர், 2002 மாசி மாதம் 22 ம் நாள் சமாதான ஒப்பந்தத்தில் கையிட்டது முதல் இந்நாள் வரை புலிகள் வலிந்த போர் எதையும் செய்யவில்லை, நிலமீட்பு சமர் எதையும் நடத்தவில்லை, ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாகவும் கூறவில்லை. இருந்தபோதும் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசால் தொடுக்கப்பட்ட இன அழிப்பு போரையே தம்மால் முடிந்தவரை தமிழர்கள் எதிர்கொள்கிறார்கள். அப்பாவி தமிழரை சிங்கள பேரினவாதத்தின் இன துடைத்தழிப்பில் இருந்து பாதுகாக்கும் போரே அவர்கள் செய்வது.

சிங்கள அரசே தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை வெளியேற்றியது, சர்வதேச தொண்டு நிறுவனஙகளையும் வெளியேற்றியது. சீன,பாகிஸ்தானிய உதவியுடன் தமிழர்களின் மீது ஓர் அநீதிப் போரை நிகழ்த்துகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் புலிகளின் கையை கட்டி விட்டு தமிழர்களை கொன்று குவிக்கிறது. சர்வதேசமும் இதை வேடிக்கை பார்க்கிறது.

தமிழக அரசுக்கு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே வன்னியில் உள்ள தமிழ் மக்களை அழித்து விடலாம் என்பது தான் சிங்கள இன வெறி அரசின் திட்டம். இதற்காக காலம் காலமாக பொய் பிரசாரத்தை நடத்தி வரும் சிங்கள அரசின் பிரசாரத்தை தமிழக நெஞ்சங்கள் நம்பக்கூடாது.

சிங்கள மக்களிடம் இன வாதம் எனும் நஞ்சை கொடுத்து, அதன் மூலம் ஆட்சி நடத்தி போரின் மூலம் பணம் சேர்க்கும் சிங்கள குடும்ப அரசியலுக்கு தமிழக அரசியலும் ஏமாறக்கூடாது.

இன்று வரை எந்த ஒரு தீர்வையும் ஈழ தமிழர் பிரச்சனைக்கு சிங்கள அரசியல் வாதிகள் முன்வைக்கவில்லை. இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் உட்பட எல்லா உடன்பாடுகளையும் சிங்களமே கிழித்து எறிந்திருக்கிறது. தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைகளில் முன் வைத்த சுயாட்சி அதிகார சபை யோசனை தூக்கி குப்பை கூடையில் போடப்பட்டது.

தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் சிங்கள இன வெறி அரசின் தந்திரத்தை இனம் காணவேண்டும். ஈழ தமிழர்கள் எப்போதும் போருக்கு ஆசை பட்டது இல்லை.சிங்களமே போர் வெறி கொண்டு அலைகிறது. இதற்கு தமிழன் தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் விதி விலக்கு இல்லை. தமிழக மீனவர்களின் தொடரும் துன்பமே சிங்கள இனவெறி அரசின் கொடுங்கோலுக்கு தக்க சாட்சி.

உலகெங்கும், தமிழன் வாழும் இடமெல்லாம், தமிழகம் உட்பட "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அமெரிக்க போர்வையில் சிங்களம் தமிழனை துன்புறுத்துகிறது,.

ஈழ தமிழர் தம் தொப்புள் கொடி உறவுகளிடம் வேண்டுவது ஒன்றே. சிங்கள இன வெறி அரசின் பொய்களை நம்ப வேண்டாம். ஈழ தமிழர் பாதுகாப்பு அரண் புலிகளே. தமிழர் வேறு புலிகள் வேறு கிடையாது. உலகமே வன்னியில் தமிழரின் அழிவுச் சேதிக்காக காத்துக்கிடக்கிறது. தமிழனின் அழிவே இந்திய மத்திய கொள்கை வகுப்பு கூட்டம் உட்பட பலரின் குறிக்கோளாய் உள்ளது,. தமிழகத்தின் எழுச்சியே ஈழ தமிழரின் துன்பத்தை தீர்க்கும். இத்தனை ஈழ தமிழரின் இன்னல்களையும் தீர்க்கும் சக்தி தமிழக உறவுகளிடமே உண்டு.

ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரியுங்கள். தமிழகம் முன்வந்தால் உலகமே முன்வரும்.

ஈழ தமிழன் வாழ்வில் அமைதி திரும்பும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.