Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு வன்னி எதிர் நோக்கும் உக்கிர போர்.

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயல்களாக எழுந்த நெருக்கடிகள் என்பனவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசு அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புது முறிப்பு நோக்கியும், முறிகண்டி இரணைமடுச் சந்தி நோக்கியும் பெருமெடுப்பில் நகர்ந்த படையினர் புலிகளின் முறியடிப்பு படையணிகளின் வியூகத்தினுள் சிக்கியது.

வடபோர் முனையில் கிளிநொச்சயுpம் அதனையடுத்த பரந்தனும் இன்றைய நிலையில் படைத்துறையினரின் உயர்ந்த பட்ச இலக்கு. இந்த இலக்கினை படையினர் அடைவதற்கு புலிகள் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே. ஏனெனில், நீண்ட நாட்களாக தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடடுப் பகுதி மிகவும் சுருங்கி விடடது. வ்னனிப் பெருநிலப்பரப்பின் 25 சதவீதப் பகுதியே தற்போது அவர்களின் இறுக்கமான ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதால் மேலும்; மேலும் பின்நகர்வுகளை செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதனாலேயே படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனா.

கிளிநொச்சி நகருக்கு மிக அண்மையாகவே பiயினர் நிலையெடுத்திக்கின்ற நிலையிலும் கண்ணுக்கெட்டிய தூரத்திலுள்ள கிளிநொச்சி நகரை நெருங்கமுடிhயமல் உள்ளது.

புலிகளைப் பொறுத்தவரை கிளிநெச்சிப் பகுதியும், முகமாலைப் பகுதியும் , மிகமுக்கியமான போராட்ட களம். இப்பகுதியி;ல் ஏ;றபடுகின்ற ஈராணுவ பாதகத் தன்மை கிழக்கு வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்றவல்லது. எனவே இப்பகுதிக்கான சண்டை என்பது புலிகளால் விடடுக் கொடுக்க முடியாத அல்லது இழக்கப்பட முடியாத கேந்திர மு;ககியத்துவத் தன்மை வாய்ந்தது எனவேதான் மேற்குவன்னியில் முழுமைப் பகுதியையும் படிப்படியாக விட்டுக் கொடுத்த புலிகள் இக்களமுனையில் கிளாலி தொடக்கம் நாகர் கோயில் வரையிலான முன்னரங்கப் பகுதியில் கடும் பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஏ9 வீதியை முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ கொண்டுவராமல் ஏ-32 வீதி வழியே பூநகரியூடான யாழ்ப்பாணததிற்கான தரைவழிப் பாதை பாதுகாப்பானதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், யாழ்க்குடாவுடன் ஏ-32 வீதியை இணைப்பதற்கு சங்குப்பிட்டியிலிருந்து கேரை தீவுக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் சிறிது தூரத்திற்கு படகுப் பயணம் மேற்கொள்வது சிரமமானதும், பாதுகாப்பற்றதும் கூட எனவே தற்போதைய நிலயில் யாழுக்கான பூநகரியூடான தரைவழிப்பாதை என்பது பெரிய அளவில் பயனற்றதொன்றாகவே கருத முடியும்.

படையினர் ஏ-9 வீதியை இலக்கு வைத்து மாங்குளத்தில் ஊடுடறுப்புத் தாக்குதலைச் செய்து வீதியைக குறுக்கறுத்து ஆறு மைல் தூரத்திற்கு பெட்டியடித்து நிலை கொண்டதனால் கிழக்கு வன்னியின் தென் அரைப்பாகத்திலிருந்து புலிகள் பின்வாங்கி விடடனர். இதனால் இன்று மாங்குளம் கிழவன் குளம் தொடக்கம் ஓமந்தை வரையான கிட்டத்தட்ட 25 மைல் தூரத்தில், இராணுவப் பெட்டிக்குள் அடங்கும் ஆறுமைல் தவிர்ந்த ஏனைய பகுதி இன்று யாருமற்ற சூனியப்பிரதேசமாகக் கிடக்கிறது.

அது மட்டுமல்லாமல் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவுக்குற்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான், நைனாமடு, சின்னடம்பன், கனகராயன்குளம், புளியங்குளம், புத்தூர், அனந்தர்புளியங்குளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சால்கட்டி, மற்றும் பன்றிகெய்தகுளம், சேமமடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப் பெரிய பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாற்றமடைந்திருக்கிறது. காரணம், மாங்குளத்திலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்த படையினர் ஓலுமடு கிராமத்தைக் கைப்படற்றிதோடு அங்கிருந்து நேர் கிழக்காக காடுகளுக்கூடாக நகர்ந்து தண்ணிமுறிப்புக் குளப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் 59 ஆவது டிவிசன் படையினருக்கிடையில் தொடர்ச்சியற்ற இணைப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

எனினும், இப்பகுதியினுள் படையினர் நுழைவதை தவிர்த்திருக்கின்றனர். காரணம் இப்பெரும்; பகுதியில் நிலைகொள்வதற்கு பெருமென்ணிக்கையிலனா படையினர் தேவைப்படுகின்றனர். கிழக்கு வன்னியில் ஏ9, ஏ34, ஏ35 ஆகிய மூன்று வீதிகளும் இணையும் முக்கோணப் பிரதேசத்;தினுள் தான் ஒட்டு மொத்த வன்னி மக்களும் தஞ்சமடைந்திருக்கின்றனர்.எனவ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.