Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் பதில்கூறக் கடமைப்பட்டுள்ள கேள்விகள்?---பழ.நெடுமாறன்

Featured Replies

இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது.

சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அரசு தமது கடற்படையைச் சேர்ந்த மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்றை அந்தப்பகுதிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தது. இத்துடன் நிற்கவில்லை. மேலும் ஐ.என்.எஸ். வீரட் என்னும் விமானம் தாங்கிக் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. மேலும் நான்கு போர்க்கப்பல்களை அங்கு அனுப்பவும் இந்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

"சோமாலியா கடற்கொள்ளையர்கள் சரக்குக்கப்பல்களை கடத்துவதேடு நிற்கவில்லை. அந்தக் கப்பலில் உள்ள மாலுமிகளையும் பிற பணியாளர்களையும் அடி?மாகளாக்கி கொள்வது, சித்திரவதை செய்வது, இனப்படுகொலை செய்வது பேன்ற அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது' என இந்திய கடற்படைத் தளபதிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய கடலோரங்களை காவல் காக்கும் கடற்படையாக மட்டும் விளங்காமல் ஆழ்கடலில் சென்று எதிரிகளை தாக்கும் அளவிற்கு நமது கடற்படை புதிய வடிவம் கொள்ள வேண்டும் என பலகாலமாக கடற்படை தலைமை இந்திய அரசை வலியுறுத்தி வருவதன் அவசியத்தை சோமாலியா கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

சோமாலியா கடற் பகுதியில் வீர சாகசம் புரியும் இந்திய கடற்படை மன்னார் வளைகுடாப்பகுதியில் ஆமையாக,ஊமையாக அடங்கிக்கிடக்கிறது. உலகின் 5 ஆவது வலிமைவாய்ந்த கடற்படையாக திகழும் இந்திய கடற்படை ஆழ்கடலில் கூட எதிரிகளை வென்றடக்கும் வலிமையும் திறமையும் படைத்தது என மார் தட்டிக்கொள்கிறது. ஆனால் சின்னஞ்சிறிய சிங்களக்கடற்படை கடந்த 25ஆண்டு காலமாக தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிறது. அதைத்தடுக்கவும் நமது மீனவர்களை காப்பாற்றவும் கடமைப்பட்ட இந்திய கடற்படைசெயலற்றுக்கிடக்கிறத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.