Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூக்கி நிறுத்தவே முடியாமல் சரிந்து செல்லும் பொருளாதாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கி நிறுத்தவே முடியாமல் சரிந்து செல்லும் பொருளாதாரம்

[18 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 9:15 மு.ப இலங்கை]

பொருளாதார விடயங்கள் குறித்து அதிகம் அலசும், கொழும்பு வாரமத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நேற்றைய பதிப்பில் முன் பக்கத்தில் வந்த சில செய்திகள் இலங்கையின் இன்றைய நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக இருந்தன.

* நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் அண்மைக்காலத்தில் மிகக் குறைந்த அளவுக்கு - 6.3 வீதத்திற்கு - இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரிகள், நாடு தனது பொருளாதார இலக்கு நோக்கிய நகர்வு வேகத்தைக் கோட்டைவிட்டு மந்த கதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கின்றார்கள்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, யுத்த நெருக்கடித் தீவிரம், உலகப் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மிகவும் பின்னடைவு நிலையை இந்த ஆண்டில் எட்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து எதிர்வு கூறுகின்றனர்.

* நாடுகளின் பொருளாதார ஸ்திர நிலைமை தொடர்பான சுட்டிகளை வெளியிடும் சர்வதேச அமைப்பு, இலங்கையின் நிலையை மேலும் தரம் இறக்கிப் பிரகடனப்படுத்தியதை அடுத்து இலங்கையின் பங்குச் சந்தை நான்கு ஆண்டு காலத்தில் மிகவும் தாழ்வு நிலையை நோக்கி வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கின்றது.

* சர்வதேச நாணய சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த பதினான்கு மாத காலத்தில் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. ரூபாவின் பெறுமதி சரிந்து செல்லும் நிலையில் இன்னும் இரு வாரங்களில் - இந்த வருட முடிவில் - ஓர் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு - 115 ரூபாவாக வீழ்ச்சியடையும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் எதிர்வு கூறுகின்றன.

- இவை மேற்படி ஆங்கிலப் பத்திரிகையின் நேற்றைய முன்பக்கத்துச் செய்திகளின் சாராம்சமாகும்.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி - அதலபாதாளத்தை நோக்கி - சரிந்து கொண்டிருக்கின்றது என்பது பட்டவர்த்தனமாக - வெளிப்படையாக - புலப்படக்கூடிய அம்சமாகி விட்டது.

இலங்கையின் பொதுக் கடன்கள் அதிகரித்தமை, ஸ்திரமற்ற அரசியல் சூழல், யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி நிலைமை ஆகியவை காரணமாக, இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான தர நிலையை அது தொடர்பான சுட்டியில் ஐந்து மட்டங்கள் இறக்கியிருக்கின்றது அது சம்பந்தமான சர்வதேச குறியீட்டு அமைப்பு.

சர்வதேச தரச் சுட்டி நிலையில் இலங்கையின் நிலை மிகவும் மோசமான கட்டத்துக்கு கீழ் இறக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உதவிகளை இலங்கை சர்வதேச மட்டத்தில் பெறுவது அதற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய கடன்களுக்காகப் பெரும் நிதியை மேலதிகமாக இலங்கை செலவிட வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இதேசமயம், சர்வதேச நாணய சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதியை சரிந்து விட விடாமல் தடுப்பதற்காகத் தனது அந்நிய செலாவணி சேமிப்பை, கரைத்துக்கொட்டிய இலங்கை மத்திய வங்கி, அது இறுதியில் கையைக் கடித்து, இயலாமல் போகவே, இனியும் ரூபாவின் பெறுமதியை செயற்கைத் தனமாகத் தூக்கிப் பிடிப்பதற்காக அந்நிய செலாவணி சேமிப்பைக் கரைக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.

எனவே, இலங்கை ரூபாவின் பெறுமதியை இனிமேல் தன்பாட்டில் இறங்கவிட்டு விடுவது என்ற முடிவுக்கு - இயலாத் தன்மையில் அமைந்த தீர்மானத்துக்கு - இலங்கை வந்துவிட்டது.

அந்த முடிவை செயற்படுத்த அது தீர்மானித்த அடுத்த 24 மணி நேரத்துக்குள், ரூபாவின் பெறுமதி மளமளவென்று சரிந்து அது இன்றைய கட்டத்துக்கு வந்திருக்கின்றது. இனி ரூபாவின் பெறுமதியை தூக்கி நிறுத்துவது என்பது துர்லபமே. அது மேலும் வீழ்ச்சியுறுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தவறான ஆட்சிக் கொள்கைகள், தீர்க்கதரிசனமற்ற வழிகாட்டல் திட்டங்கள், ஊழல்,முறைகேடுகள், முறையற்ற ஆட்சி, அளவுக்கு அதிக அமைச்சர்களை வைத்துக்கொண்டு வளத்தை வீணடிக்கும் பொறுப்பற்ற போக்கு போன்றவையும் நாட்டின் பொருளாதாரம் நாசமாகக் காரணங்களாகும்.

இலங்கை இனப்பிரச்சினையால் வெடித்திருக்கும் கொடூர யுத்தத்தைத் தணிக்கும் வகையிலும், அரசியல் தீர்வு ஒன்றை ஒட்டி, அதிகாரத்தை சிறுபான்மையினருக்குப் பகிரும் விதத்திலும் அரசியல் - இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலேயே சரிந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியும் என்பது திண்ணம்.

ஆனால், சிறுபான்மையினருக்கு நீதியான அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்றை வழங்கும் தாராளமோ, விட்டுக்கொடுப்போ கொண்டிராத கொழும்பு அரசின் இனவெறிப் போக்கினால் யுத்தம் மேலும் தீவிரமடையும். அதன் விளைவாக நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்து நாடு அந்தரிக்கப் போவது நிச்சயம்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.