Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது – சீமான்:

Featured Replies

தமிழக மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது எனவும் மொத்த தமிழனத்தையே அழிக்க அமைதிப்படை என்ற பெயரில் 2 லட்சம் பேரை ராஜிவ் அனுப்பினாரே இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் 'தமிழர் எழுச்சி உரைவீச்சு'என்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராமேஸ்வரத்தில் பேசியதற்காக தன்னை கைதுசெய்தனர் எனவும் தான் எண்ண பேசினார் என்பது எவருக்கும் தெரியவில்லை எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னை எதற்கு கைதுசெய்கிறீர்கள் என காவற்துறை அதிகாரியிடம் கேட்ட போது, 'நல்ல பேசினீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என தன்னை கைதுசெய்த காவற்துறை அதிகாரி கூறியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்து உள்ளே வைத்தனர் இதோ தற்போது வெளியில் வந்து விட்டேன்.ஈழ விடுதலை அணைக்க முடியாமல் எரிகிறது. துடைசெய்யப்பட்ட இயக்கம் என கூறப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பற்றி பேசக்கூடாது என கூறுகின்றனர். யாரை கேட்டு தடைசெய்தீர்கள்? அமைதி பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில் அவசர அவசரமாக விடுதலைப்புலிகளுக்கு தடைபோட வேண்டிய அவசியம் என்ன?. நான் பேச வேண்டும். சொந்த அண்ணனான பிரபாகரனை பற்றி பேச என்ன சட்டம் போடுவாய்?. எனது கனவு, சிந்தனை, அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது. அதை ஒன்னும் பண்ண முடியாது. உள்ளே போட்டால் இன்னும் அதிகமாக பேசுவேன், சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனிஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது இவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரன் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகில் வலிமைமிக்க இராணுவத்தை உருவாக்கி விடுவான் என பயப்படுகின்றனர்.

ராஜிவை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்ற காங்கிரசார் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதி என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழனத்தையே அழிக்க ராஜீவ் இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?. இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாரும் ஓட்டுப் போடாதீர்கள், ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள்.காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்?. பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து பிரபாகரனின் கையில் துப்பாக்கியாக உள்ளது. அவன் நமது குலதெய்வம். தவித்த வாய்க்கு தண்ணீர் தராத தேசம் மீது எப்படி நேசம் வரும்?. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தையும் கேரளாவையும் யாராவது கண்டித்தார்களா?. 406 தமிழக மீனவர்களை இலங்கை கொன்றது இந்தியா தேசம் இதனை கண்டித்தா?.

நவீன துப்பாக்கி தொலைநோக்கு கருவி ஆகியவற்றை இலங்கைக்கு கொடுக்கும் இந்தியாதான் தமிழினத்துரோகி. இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கை ஒரு கைப்பார்த்து விடுவான் எங்கள் அணணன். நான் சிறையில் இருக்கும் போது, அண்ணனை வெட்டியவன், பிக்பாக்கட் அடித்த தமிழன் தான் அதிகமாக சிறையில் இருககிறான். எதிரிகளான பார்ப்பனன், சிங்களவன், கன்னடனை விடுத்து, தன் சகோதரனை கொன்று விட்டு சிறையில் இருக்கிறான். இது ஒரு இனமாக இந்த மண்ணில் இன்னுமொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது என திரைப்பட இயக்குனர் சீமான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈராட்டில் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சீமான்இ மணியரசன் - கைதுசெய்ய வேண்டும் - காங்கிரஸ்:

இதேவேளை கடந்த 14 ஆம் திகதி இந்தியாவை கொச்சைப்படுத்தியும் விடுதலைப்புலிகளை ஆதரித்தும் ஈராட்டில் உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சீமான், தமிழர் தேச பொதுவுடமை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மணியரசன், பெரியர் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட இந்திய காங்கிரஸ் தலைவர் சட்ட சபை உறுப்பினர் பழனிச்சாமி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். சீமானின் உரை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆவேசமான உரை சீமான் அண்ணாவினது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.