Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008 ம் ஆண்டின் இறுதி கடிதம்

Featured Replies

நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் :rolleyes:

இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்பதற்கு எவருமில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் உண்மை நிலைவரம் குறித்து அறிவதற்காக ஒருவரில் தங்கியிருக்க வேண்டாம் எனத் தனது கடிதத்தில் ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பத்திரிகையை பலவந்தமாக பொதுமக்களிடம் திணித்தல், தடுப்புக்காவல் உத்தரவுகள், காணாமற்போதல் உட்பட யாழ். மக்கள் எதிர்நோக்கும் பலவிடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

யாழ்ப்பாண மக்கள் பல விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இராணுவச் சோதனைச் சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவது யாழ். மக்களின் முக்கிய கவலையாக உள்ளது.

இது தங்களது நடமாட்ட சுதந்திரத்தை பாதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர் சில குற்றவாளிகள் தப்பிச்செல்ல முற்படுவதற்கும் இது காரணமாகவுள்ளது.

அரசியல் கட்சியொன்று அங்குமிங்கும் அலுவலகங்களை வைத்திருப்பதற்கும் (அயுதமேந்திய உறுப்பினர்களுடன்) இதன் மூலம் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாக அனுமதிப்பதற்கு, உரிய காரணம் இல்லை.

அரசியல் கட்சியொன்று தனது வாரப்பத்திரிகையை வாங்குமாறு கட்டாயப்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் குற்றச்சாட்டொன்று காணப்படுகின்றது.

ஒரே பத்திரிகையை ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் கொள்வனவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. சோதனைச் சாவடிகளிலுள்ள இராணுவத்தினரால் இவ்விடயத்தில் எதுவும் செய்யமுடிவதில்லை.

சந்தேக நபர்களிற்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவும் பலரிற்கு அநீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தவர்கள், அப்பாவிப் பெண்கள் போன்றோர் நீண்டகாலத்திற்கு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மேலும் எவரிற்காவது உதவினார்கள் என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் உண்மையில் அநேகமாக இவர்கள் அப்பாவிகளாகக் காணப்படுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக யாழ். குடாநாட்டில் பெருமளவான ஆண்கள், பெண்கள் இளையவர்கள், முதியவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரங்கள் இல்லை.

சில அரச அதிகாரிகளால் இவர்கள் சட்ட பூர்வமாகவோ, சட்ட விரோதமாகவோ தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் காணப்படுகின்றது. அவர்களது எதிர்பார்ப்பு சகல சந்தர்ப்பங்களிலும் சரியாக அமையாது.

அரச அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு இதனுடன் சம்பந்தப்பட்டவர்களிற்கு அறிவுறுத்த வேண்டும்.

இதன் மூலம் மனஉளைச்சலிற்கும் மனவேதனைக்கும் முடிவு கட்டலாம்.

தங்களது பிள்ளைகள் உயிருடன் உள்ளனரா அல்லது பாதுகாப்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா - என்பதையே பல பெற்றோர்கள் அறிய விரும்புகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வருபவர்கள் துன்புறுத்தப்படமாட்டார்கள் என்ற உறுதி மொழியை அரச நிறைவேற்ற வேண்டும். - என்று அந்தக் கடிதத்தில் உள்ளது.

http://www.uthayan.com/pages/news_full.php?nid=1317

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.