Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்னையில் பொறுமை காக்க கருணாநிதி அறிவுரை : மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்க திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை : "இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை அறிய சில நாட்கள் பொறுத்திருப்பது நலம்' என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முல்லைத் தீவை இலங்கை ராணுவம் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மீண்டும் சில கட்சிகள், உண்ணாவிரதம், போராட்டம் என ஆரம்பித்துள்ளன.

tblfpnnews_5042231083.jpg

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க தொடங்கப்பட்டது அறப்போர். செல்வா தலைமையில் நடந்து பல கட்டங்களைச் சந்தித்து, இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1956ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மான வழித்தடத்தில், நானும் நடந்து வந்துள்ளேன்.

இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழ என்னால் எந்த அளவு முடியுமோ, அந்த அளவு ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் பாடுபட்டுள்ளேன். இன்னமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை, சென்னையில் சந்தித்த செல்வா 1977ம் ஆண்டு மறைந்த பின், அவரது நெருங்கிய நண்பர் அமிர்தலிங்கம் இந்தியாவின் உதவி கேட்டு வந்தபோது, இந்திராவை சந்திக்க உதவினேன். அமிர்தலிங்கம் 1989ம் ஆண்டு கொல்லப்பட்டார். எல்.டி.டி.ஈ., - டெலோ - இ.பி.ஆர்.எல்.எப்., - ஈராஸ் - டி.யு.எல்.எப்., - பிளாட் - இ.என்.டி.எல்.எப்., - புரோடெக் - டி.இ.எல்.எப்., இயக்கங்கள் தோன்றி போராடின. மதுரை "டெசோ' மாநாடு 1986ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நடத்தப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட வாஜ்பாய் உள்ளிட்டோர், போராளிகள் இடையே ஒற்றுமை இல்லை என அறிவுரை கூறினர். நானும் தனியாக அமர வைத்துப் பேசி "சகோதர யுத்தம் தவிர்ப்போம்' என கேட்டுக்கொண்டேன். உறுதிமொழி வழங்கப்பட்டதும் உண்மை. "டெலோ' தலைவர் சபாரத்தினம் கொல்லப்பட்டதும் உண்மை.

ஒவ்வொரு இயக்கத் தலைவர்களும் கொலையுண்ட கொடுமை நடந்து, மாபெரும் சக்தியாக பெருகியிருக்க வேண்டிய விடுதலைப் படை பலவீனமுற்றது. அதன்பின் ராஜிவ் கொல்லப்பட்ட கொடுமையான நிகழ்ச்சி நடந்தது. இன்னும் இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாக வாழும் நிலை உருவாகவில்லை. இப்போது யாருக்கிடையே சண்டை எனினும் அங்கே செத்துக் கொண்டிருப்பது அப்பாவித் தமிழர்கள் என்ற வேதனை நம்மைத் துளைக்கிறது. பிரதமரிடம் முறையிட்டோம்; "பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்படுவார்' என பிரதமர் கூறினார். பிரணாப், இலங்கை செல்லும் நாள் இன்னும் குறிக்கப்படவில்லை. அது நமக்கு ஏமாற்றமே. இலங்கைப் பிரச்னையில் 50 ஆண்டுகளாக என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இன்னும் செய்ய தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

மத்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன், இலங்கை சென்றுள்ளது முக்கியமானது. மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும், இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கொல்வதை நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதையும் அறிய சில நாட்கள் பொறுத்திருப்பது நலம். நலமான முடிவுக்கு மத்திய அரசை நாம் நம்பியிருக்கலாம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்

topnew_new.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது இன்னமும் பொறுமையா? அய்யா இது ஒன்னும் இடைத்தேர்தல்ல, பலரின் உயிர் சம்பந்த பட்டது... இதிலிருந்து ஒன்னு மட்டும் தெரியுது... வயசானா புத்தி மந்தமாகிடும்...

அவர் அப்பிடியெல்லாம் சொல்லி பொருக்கச்சொனது பிழையெண்டா அப்ப வர் என்னதான் செய்யுறது? அவரி விட வேற ஆர்தான் இவ்வளாவும் செய்யுறது?...

சரி இன்னும் பொறுமையா எண்டா எழும்பிபோய் சண்டைபிடியுங்கோ... இயக்கமே சில இடங்களை விட்டு தாங்களாவே போகுது .....

சில அரசியல் சக்திகளுக்கு அவசரத்தில அழுத்தம் குடுக்கேலாது.

இந்த படம் சொல்லுது என்ன பேசியிருப்பார்கள் எண்டு

k0s1xf453p35li55ct2g2y45_4.jpg

பல்லவன் அவங்கள் வேறென்னதான் பேசியிருப்பாங்கள் என்டு எதிர்பாத்தனிங்கள்?

பல்லவன் அவங்கள் வேறென்னதான் பேசியிருப்பாங்கள் என்டு எதிர்பாத்தனிங்கள்?

இல்லை, மாண்புமிகு முதலமைச்சர், தமிழின தலைவர் கருணாநிதி அவர்கள் இப்பிடி சொல்லியிருந்தார், அதுதான்

மத்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன், இலங்கை சென்றுள்ளது முக்கியமானது.

அவருக்கு அவக்கள் அப்படித்தான் சொல்லியிருப்பாங்கள்....

இனி யார்தான் இப்பிடி கதைகேல்ல?சரி இதை விடுங்கோ

அன்ரன்ணை பீரிஸ்சை சந்திக்கும் போதெல்லாம் இதை விட சுவாரிஸ்யமா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.