Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக அடக்குமுறையை தடுக்கும் எண்ணம் உண்டா..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக அடக்குமுறையை தடுக்கும் எண்ணம் உண்டா..

[26 ஜனவரி 2009, திங்கட்கிழமை 12:55 மு.ப இலங்கை]

வன்முறைக்கலாசாரத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கின்றது இலங்கையின் ஊடகத்துறை.

அரசின் போரியல் வெறிப்போக்குக்கு ஒத்து ஊதாத அனைத்து ஊடகங்களும் பயங்கரவாத அமைப்புகளாக அரசின் உயர்மட்டத்தினால் பச்சையாக விமர்சிக்கப்படும் பேராபத்து நிலைமை ஏற்பட்டிருப்பது வெளிப்படையான அம்சம்.

அமெரிக்காவில் ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் புதிய அரசநிர்வாகம் பொறுப்பேற்ற கையோடு இலங்கை விவகாரத்தை ஒட்டி அதன் சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிக்கை, இலங்கையில் செத்துக்கொண்டிருக்கும் ஊடக சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க அரசின் கரிசனையை வெளிப்படுத்தும் விவகாரமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ள ஒபாமா நிர்வாகம், ஜன நாயகத்துக்கு எதிராக இவ்வாறு பயங்கரமான போக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு இலங்கை அரசைக் கோரியிருக்கின்றது.

ஊடகப் பணியாளர்கள் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்துவது, மிரட்டுவது போன்ற செயல்கள் குறித்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மிகமோசமாக சீர்கெட்டு வரும் சூழ்நிலையையே இத்தகவல்கள் எடுத்தியம்புகின்றன. எத்தகைய ஜனநாயகமும் தழைத்து விருத்தியாவதற்கு திறந்த சுதந்திரமான ஊடகப் போக்கு மிக அவசியமாகும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தி, ஊடக அச்சுறுத்தலைத் தடுத்து, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவிலியன்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் கச்சிதமான முழு அளவிலான நம்பகத் தன்மையுடைய புலன் விசாரணைகளை நடத்தி, எல்லாப் பிரஜைகளையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசைக் கோருகின்றோம். இவ்வாறு அமெரிக்க அரசின் சார்பில் அதன் இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் தாம் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார்.

இதேவேளை, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதையும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதையும் உறுதிப்படுத்துவ தில் இலங்கை அதிகாரிகள் சிரத்தை எடுப்பதே யில்லை என்ற சாரப்பட குற்றம் சுமத்தியிருக்கின்றது.

சுதந்திரமான ஊடக செயற்பாடு இல்லாவிட்டால் நாட்டில் அதிகாரத் துஷ்பிரயோகம் எல்லை மீறும் என்றும் மன்னிப்புச்சபை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதேசமயம், இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் மோசமான தாக்குதல்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு இலங்கை பத்திரிகை நிறுவனமும் கோரியிருக்கின்றது.

இலங்கையில் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை மோசமான கட்டத்தை அடைந்திருப்பது இன்று சர்வதேச ரீதியில் ஆராயப்படும் ஒரு முக்கிய விவகார மாகியிருக்கின்றது. பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளில் தொடங்கி, ஊடகக் கட்டமைப்புகள் வரை பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், அமெரிக்கா முதல் கொண்டு அருகில் உள்ள இந்தியா வரை பல்வேறு நாடுகளும் இவ்விவகாரம் குறித்து கரிசனையுடன் கவனம் செலுத்தி வருகின்றன. அவையெல்லாம் முன் வைக்கும் கோரிக்கை ஒரேயொரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதல்களின் சூத்திரதாரிகளைக் கண்டறிய நேர்மையான நீதியான உண்மையான புலன் விசா ரணை உடன் நடத்தப்பட வேண்டும் என்பதும் சூத்திர தாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதும்தான்.

ஆனால், அப்படிக் குற்றமிழைத்த சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பற்றுறுதி திடசங்கற்பம் அரசுத் தலைமைக்கு உண்டா என்பதே இன்றைய முக்கிய வினாவாகும்.

If there is a will, there will be a way மனமுண்டா னால் இடமுண்டு மனதில் உறுதி இருக்குமானால் வழி பிறக்கும் என்ற முதுமொழி நம் மத்தியில் உண்டு. இங்கும் அதுதான் பொருந்துகிறது. சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்கும் மனவுறுதியும், திடசங்கற்பமும், பிரதிக்ஞையும் அரசுத் தலைமையிடம் இல்லை. அதனால்தான் இத்தகைய வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன.

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்புள்ள உயர் அதிகாரவர்க்கமே, ஊடகங்களைக் கரித்துக் கொட்டி, அவற்றுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் கருத்துருவாக்கிகளாகச் செயற்படும்போது, வன்முறைச் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என நம்புவது அர்த்தமற்றது.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.