Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி

Featured Replies

இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி

இலங்கை விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர மெக்ஸிக்கோ மீண்டும் முயற்சி எடுத்துள்ளது ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைக் கொண்டுள்ள மெக்ஸிக்கோ இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. பாதுகாப்புச் சபைஉறுப்பு நாடுகளின் பிரத்தியேக சந்திப்பின் போதே மெக்ஸிக்கோ இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

எனினும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் இடம்பெறாததை சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

மெக்ஸிக்கோ மறுபடி இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியை இவ்வாரம் மேற்கொள்ளலாம் என ஐ. நா.வட்டாரங்கள் தகவல்வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கை விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு வருவதற்கு மெக்ஸிக்கோ உட்பட ஏனைய சில நாடுகள் எடுக்கும் முயற்சிகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசு அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லாது தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசு மும்முரமாக இறங்கியிருக்கின்றது. அதற்காக பல்வேறு நாடுகளுடன் இலங்கை அரசுத் தரப்பினர் அவசர அவசரமாக கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அச்சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாவது எதிர்ப்புத் தெரிவித்தால் அச்சபைக்குக் கொண்டுவரப்படும் ஏந்தவொரு விவகாரமும் பின்வாங்கப்பட்டுவிடும். என்பது குறிப்பிடத்தக்கது

http://www.pathivu.com/

இப்படியான நிகழ்வுகளில் இலங்கைக்கு தோல்வி ஏற்படுத்த, இப்படியான நிகழ்வின் முன் ஒவ்வொரு நாட்டுபிரதிகளிடம் சரியான விளக்கங்கள் ஆதராங்களுடன் கொடுத்து அவர்களுக்கு முன்னறிவித்தல் கொடுத்தால் சரியான பலன் கிடைக்கும்..

அதாவது இலங்கையின் பொய்முகம் உலகத்திற்கு காட்டப்படவேண்டும்,, ஆதாரங்களுடன்..

இதில் ஒன்றுதான் தமிழர்தகவல் மையங்கள், செய்தி தாபனங்கள் மூலம் சரியான விளக்கங்கள் கிடைக்கவழி செய்யப்படல் வேண்டும்..

தற்போதைய நிலையில் இலங்கையின் பொய்முகமே உலகின் முன் நம்பிக்கைக்கு உரியதாகவுள்ளது,,

இதனை உடைத்தெறிய உலகத்தமிழினத்தில் ஒன்றிணைந்த அறிவான தொழிட்பாடு தேவை..

செய்தால் தப்புவோம் வெல்லுவோம்... எமக்குள் பேசி, கவலைப்பட்டு பலன் இல்லை..

மெற்சிக்கோவிற்கோ நாட்டிற்கு மேலும் ஊக்கிவித்து தகவல்களைக்கொடுத்து..

அதன் நட்பு நாடுகளை அணுகி விளக்கி மேலும் ஆதரவை கூட்டலாம்..

அல்லது இலங்கை முந்தி உடைத்து விடும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.