Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்பிற்கு துணை போகும் சர்வதேசம்:தமிழ்செய்திக்கு வழங்கிய பேட்டியில் செ.கஜேந்திரன்!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்திக்கு வழங்கிய நேயர்காணலில், இலங்கையில் மோசமான இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்,இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் துணை போவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வரை தொடர வேண்டும் என செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய முழுமையான பேட்டி:

கேள்வி: இலங்கையின் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை பற்றி?

பதில்: இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது மோசமான இனப்படுகொலை. இதனைப் பார்த்துக் கொண்டு உலகம் அமைதியாக உள்ளது. இந்தியா பல இராணுவ உதவிகளை செய்து வருகின்றது. உலகம் மனச்சாட்சிகளுடன் செயற்பட வேண்டும்.

இராணுவத்தினரின் பகுதிக்கு வருகை தந்த மக்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளார்கள். அங்கு வருகின்ற பெண்களை இராணுவத்தினரும், அவர்களுக்கு துணை போகின்றவர்களும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி வருகின்றார்கள்.பல இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டும் வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை யாருமே அங்கிருந்து சொல்ல முடியாமல் உள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்த நோர்வே நடுத்தெருவில் தமிழ் மக்களை விட்டுள்ளது. புலிகள் தோல்வியடைந்துள்ளதாக கருதி காத்திருந்து கழுத்தறுத்து விட்டதாக தமிழ் மக்கள் நினைப்பதாக அவர் கூறினார்.

தமிழினத்தின் கோரிக்கைகளை உலகம் அங்கிகரிக்க வேண்டும். சர்வதேச நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து யுத்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இந்தியா,மற்றும் சர்வதேச நாடுகள் வழங்கும் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி: இலங்கைப் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர எப்படியான அரசியல் தீர்வை தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்?

பதில்: தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் விரும்புவது இலங்கைப் படையினர் தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக வெளியேற வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

தற்பொழுது போர் நடந்து கொண்டிருக்கும் போது தீர்வைப் பற்றி கதைக்க முடியாது. போர் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி: சர்வதேச நாடுகளில் பல போராட்டங்கள் புலம்பெயர் தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் சர்வதேச நாடுகள் அதனைப் பார்த்தும் ஒன்றும் செய்யவில்லையே?

பதில்: சர்வதேசம் ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. தமிழின அழிப்பிற்கு துணை போவதாகவே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஈழத்தமிழர் போராட்டங்களைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இந்தியா வழங்கும் போர் உதவிகளினால் பலர் நாள்தோறும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். ஆனால் தமிழகத்தில் எழுந்துள்ள புரட்சியினால் இந்திய மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடிகள் எற்பட்டு வருகின்றது.

அவர்களின் போராட்டங்கள் தொடர வேண்டும். ஈழத்தமிழர் மக்களுக்காகவும், தமிழுக்காகவும் தமிழகத்தில் மூன்று தமிழர்கள் தியாகம் செய்துள்ளார்கள். தற்பொழுது உலகம் முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. மலேசியாவிலும் தமிழ் மக்களுக்காக ஒரு இளைஞர் தியாகம் செய்துள்ளார்.

நான் சொல்வது என்னவேன்றால் போர் நிறைவு பெறும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு சுயாட்சி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டங்களினாலும்,அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் இந்திய மத்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்: இந்தியா போர் நிறுத்தம் செய்ய இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக சொன்னது பொய். இந்தியா இராணுவ உதவிகளையும் வழங்கிக் கொண்டு வருகின்றது. இந்தியா தான் இலங்கைப் போரை முழுமையாக நடத்தி வருகின்றது. இலங்கைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி மற்றும் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சென்று கதைத்த பின்னரே தமிழ் மக்கள் மீது தாக்குதல் தீவிரமடைந்ததுள்ளது.

கேள்வி: அமெரிக்காவின் புதிய அரசு இலங்கைப் பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்து வைக்குமா?

பதில்: அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தமிழர்களின் விருப்பத்தின் படி தீர்த்து வைக்கப் பட வேண்டும்.

கேள்வி: இலங்கை அரசு மேற்கொள்ளும் போர் நடவடிக்கையினால் தமிழர்கள் கொல்லப்படவில்லை என ஐ.நா செயலாளர் பாங் கீ மூனூக்கு, மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றி?

பதில்: கொலைகள் செய்வோர்களிடம் போய்க் கேட்டால் எப்படிச் சொல்வார்கள். வன்னிப் பகுதிக்கு சர்வதேச ஊடகங்களை ஐ.நா அனுப்பிவைக்க வேண்டும்.வன்னியில் உள்ள மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களை ஐ.நா அனுப்பிவைக்க வேண்டும் என செ.கஜேந்திரன் கூறினார்.

கேள்வி: வேறு எதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

பதில்: வன்னியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கு விருப்பம் இல்லாதே அங்கு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற பலர் முயற்சிகள் செய்து வருகின்றார்கள். அவர்களை அங்கே வாழ விட வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மக்களுக்கு மருந்து,உணவு போன்றவற்றை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

http://www.tamilseythi.com/interview/kajen...2009-02-10.html

-தமிழ்செய்தி நிருபர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.