Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு எதிராக ‌இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து அமெரிக்க செனட்சபையின் விசாரனை ஆரம்பமானது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ‌இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் ஃபெ‌ய்‌ன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய ‌விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு இன்று (25) ‌விசாரணை நடத்தவுள்ளது.

இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள வன்முறைகள் பற்றிய எழுத்துமூலமான வாக்குமூலத்தை நேரில் அளிக்குமாறு மத்திய ‌கிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு தலைவர் ரொபர்ட் கேசேயின் அலுவலகத்தில் இருந்து தன‌க்கு அழைப்பு வந்துள்ளதாக ஃபெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படு கொலைகள் தற்போது முன்னரைவிட மாற்றபட்டுள்ளதுடன் அவர்களை தொடர்ந்து தாக்கி இடம்பெயரச் செய்தல்இ உடல்ரீதியாகவும்இ பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தை அழித்தல் என்ற வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் உள்ள நடுநிலையாளர்களின் கூற்றுக்களுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட‌கிழக்கு பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்து‌உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இடம்பெயர்ந்து உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சிங்கள பௌத்த அரசாங்கம் போர் நடைபெறும் இடங்களுக்கு செல்ல ஊடகங்களுக்குத் தடை விதித்து‌ள்ளதுடன் தன்னார்வத் தொண்டு ‌நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றியுள்ளது.

மனிதாபிமானப் பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சர்வதேச் செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம்இ மனித உரிமைக் கண்காணிப்புக் குழு என அனைத்தும் தரப்பினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை அரசின் தமிழர்கள் அறவே இல்லாத ‌சிங்கள ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதலை அவதானிக்க நடு‌நிலையான கண்காணிப்பாளர்களோஇ சுதந்திரமான செய்தியாளர்களோ களத்தில்‌‌இல்லை.

பாதுகாப்பு வலயங்கள்இ பாடசாலைகள்இ தேவாலயங்கள்இ கோயில்கள்இ மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் ‌மீது தினமும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறு‌கிய நிலப்பரப்பில் ‌சிக்கியுள்ள தமிழ்மக்களின் ‌மீது அவர்களை அழிக்கும் நோக்கில் பெரும்பா‌ன்மை ‌சி‌ங்களப் படையினர் செய‌ல்படுகின்றனர் புரூஸ்ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இஇதனை தடு‌க்க‌ப் பின்வரும் நடவடிக்கைகளை அமெரிக்க செனட்சபை மேற்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ‌விதிகளின் கீழ் இலங்கைக்கு ச‌ர்வதேச நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

அமெரிக்கச் சட்டங்களின் ‌கீழ் சூடான்இ ஈரான்இ ‌சிரியாஇ கியூபா உள்ளிட்ட நாடுகளை‌ போன்று இலங்கையையும் அரச பயங்கரவாத நாடுக‌ள் பட்டியலில் இணைத்து மேலும் பல தடைகளை விதிக்க வேண்டும். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜப‌க்ஷஇ இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆ‌கியோருக்கு அமெரிக்க‌hவில் உள்ள சொத்து‌க்களை முடக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளி‌ட்ட இலங்கை அரசின் தலைவர்கள் அனைவருக்கும் விசாக்களை மறுக்க வேண்டும்.

ஐ.எ‌ம்.எஃப்இ உலக வங்கி ஆகியன ‌இலங்கைக்கு நிதி உதவி செய்வதை தடுக்க அமெரிக்கா வாக்களிக்க வேண்டும்.

இலங்கையின் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டணச் சலுகைகளை ‌நீக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ கோத்தபாய ராஜபக்ஷ சரத் பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இலங்கை இனப்‌பிரச்சனைக்கு சுயாட்சி கொண்ட இரண்டு நிர்வாக அமைப்புகள் என்ற அடிப்படை‌யிலான அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.

இனப்படுகொலையும் அப்பாவித் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதும் நிறுத்தப்படும் வரை கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/oneadmin/newspublis...php?news_id=352

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.