Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நாணய நிதியத்துடனான திருட்டு ஒப்பந்தத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்-ஐ.தே.க

Featured Replies

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் திருட்டு உடன்படிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான இந்த கள்ளத் தொடர்பு ஒப்பந்தத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

தேசப்பற்று என்ற சுலோகத்தை மாட்டிக்கொண்டு நாட்டைக் குட்டிச்சுவராக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் உடனுக்குடன்

வெளிப்படுத்தி வருகின்றோம். இது குறித்து ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருந்தால், நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே கபீர் ஹாசிம் எம்.பி. இதனைத் தெ? வித்தார்.

இதன்போது கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்னவும் சமூகமளித்திருந்தார். கபீர் ஹாசிம் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், தமிழ்சிங்கள புது வருடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மக்கள்மீதான வாழ்க்கைச் சுமை வெகுவாக அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் ஒழுங்கான திட்டம் எதனையும் காணமுடியவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடியிலும் பார்க்க உள்ளூர்ப் பொருளாதாரம் மோசமடைந்து காணப்படுவதற்கும் நாடு இன்று இவ்வாறானதொரு நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கும் அரசாங்கமே மூல காரணமாகும்.

நிதிக் கொள்கையொன்றை வகுத்துக் கொள்ள முடியாத திராணியற்ற அரசாங்கம் வெளிநாடுகளிடமும் நிதிக் கம்பனிகளிடமும் கடனுக்கு மேல் கடன் வாங்கி அதனை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதுடன் கொள்ளையும் அடிக்கின்றது.

2006 ஆம் ஆண்டு 630 மில்லியன் டொலர், 2007 ஆம் ஆண்டு 500 மில்லியன் டொலர், 2008 இல் 600 மில்லியன் டொலர் என்றும் அத்துடன் எச்.எஸ்.பி.சி. வங்கியிடம் இருந்து 500 மில்லியன் டொலர் என்றும் கடன்களைப் பெற்ற அரசாங்கம் இதனை மக்களின் தேவைகளுக்காகவோ அல்லது நலன்களுக்காகவோ பயன்படுத்தவில்லை.

தற்போது இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடன் 4.5 பில்லியன் டொலர்களாகும்.இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த மாதங்களில் கூறியிருந்த கருத்துகளின் படி, இலங்கை அரசாங்கம் சர்வதேநாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய தேவை இல்லை என்றிருந்தது. அப்படியா னால் இன்றைய நிலையில் மத்திய வங்கியின் நிலைப்பாடு என்னவென்று கேட்க விரும்புகிறேன்.

அரசாங்கத்துக்கு அருகøதயில்லை எக் காரணத்தைக் கொண்டும் சர்வதேநாணய நிதியத்திடம் கடன் கேட்டுச் செல்லப் போவதில்லை என்று கூறிய அரசாங்கம் தற்போது அங்கு சென்று கடன் கேட்டு நிற்பதற்கு எந்த அருகதையும் இல்லை.

இதனை அரசாங்கமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரகசியம் என்ன?

நிதி நிறுவனங்களிடம் ஐ.தே.க. கடன் பெற்ற போது அதன் உடன்படிக்கைகள் குறித்து நாம் வெளிப்படுத்தியிருந்தோம்.

மக்களிடம் நாம் எதனையும் மறைத்து வைக்கவில்லை. ஆனால், இன்று அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அல்லது கள்ளத் தொடர்பின் இரகசியம் என்ன என்பதை ஐ.தே.க. கேட்கின்றது.

திருட்டு உடன்படிக்கை அரசாங்க?ம் சர்வதேச நாணய நிதியமும் திருட்டுத் தனமான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு விட்டன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அரச சேவை ஆட்சேர்ப்பு, நிவாரணங்கள், உரமானியம் ஆகியவற்றை இல்லாது செய்வதும் அத்துடன் வரிகள், நீர்க் கட்டணம் அதிகரிப்பு மின்சாரத் துறை தனியார் மயமாக்கல் போன்ற அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையாகும்.

மூடி மறைப்பு இதனை வெளிப்படுத்த முடியாத அரசாங்கம் சகல விடயங்களையும் மூடி மறைக்கவே முற்படுகின்றது. அது மட்டுமல்லாமல் இவ்விடயங்களை வெளிப்படுத்துகின்ற சமயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் சேறு பூசுவதும் அரசாங்கத்துக்கு கலையாகி விட்டது.

விமல்சம்பிக்க எங்கே சென்றனர்?

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை வந்தபோது அரச தரப்பினர் அவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது எதிர்த் தரப்பினருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் தேசப்பற்று குறித்து பதறிக் கொள்கின்ற விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இவ்வாறு நாட்டுக்கே அசாதாரணம் ஏற்படுகின்ற நிலைமை குறித்து பேசாது எங்கே சென்றனர் எனக் கேட்க விரும்புகிறேன்.

பித்தலாட்ட தேசப்பற்று இன்று அரசாங்கமே ஒருவகையான பித்தலாட்ட தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றது. தொழில் வாய்ப்புகளை இல்லாமல் செய்து பொருளாதாரத்தை படுபாதாளத்துக்குள் தள்ளிவிட்டு கடன் சுமையை ஏற்றி வைப்பது தான் தேசப்பற்றுக்கான அர்த்தமா என்ற கேள்வியையும் முன்வைக்கின்றேன்.

ஊடகங்கள் தமது பொறுப்பில் தவறியுள்ளன அரசாங்கத்தின் மேற்கண்ட வங்குரோத்து நிலைமைகள் பொருளாதாரத்தை நாசமாக்கும் கொள்கைகள், ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டுகள் என அனைத்தையும் நாம் பொறுப்புள்ள எதிர்க் கட்சி என்ற வகையில் கடந்த மூன்று வருடங்களாக வெளிப்படுத்தி வந்த போதிலும் இவ்விடயத்தில் ஊடகங்கள் தமது பொறுப்புகளை, கடமைகளை ச?வரச் செய்யத் தவறி விட்டன.

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் எமது நாட்டுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி தனது கடமைகளில் இருந்து என்றும் விலகியதில்லை.

நிறுத்த முடியும் ஊடகங்கள் நேர்மையுடனும் அக்கறையுடனும் செயற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கப் பெறுகின்ற மிக மோசமான, விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உடன்படிக்கையுடனான நிதியை நிறுத்த முடியும் என்றார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.