Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளெங்கும் ஆர்ப்பரித்தெழும் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த இருபத்தைந்து வருடங்களுக்குமதிகமாக தாயகம் கோரிப் போராடும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவாகப் பல வருடங்களாகப் புலம் பெயர் தேசங்களிலும் அமைதிவழிப் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் எனப் பல நடந்து வந்திருக்கின்றன. அன்மைக்காலத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பில், போர் அதி உச்சநிலை அடைந்திருந்த போதும், புலம் பெயர் தேசங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மிகுந்த ஒழுங்கமைப்புடனேயே நடைபெற்று வந்தன.

நேற்று வன்னிப் பெருநிலப்பரப்புச் சமர்க்களங்களில் கொல்லப்பட்ட பல போராளிகளினதும், பொதுமக்களினதும், உடல்கள் கருகியும் சுருங்கியும் காணப்பட்ட படங்கள் படைதரப்பின் இணையத்தளங்களில் பிரசுரமானதும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் என அரசு அறிவித்ததும், பாதுகாப்ப வலயத்துள் சரணடைந்த மக்கள் மீது தாக்குதல் தொடுக்க அரசு முயல்கிறது என்ற ஊகத்தைப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஏனெனில் அவர்களது வாழ்நாளில் எத்தனையோ தடவைகள் அரசு இப்படி அறிவிப்பதும், அதன் பின் பலியெடுப்பதும் நடந்து வந்திருக்கிறது. இதை ஊகித்துக் கொண்ட தமிழ்மக்கள் உடனடியாகத் தாங்கள் வாழும் நாடுகளில் வீதிகளுக்க வந்து போராட்டத் தொடங்கினார்கள். இது வரை அமைதியாகப் போராட்டம் நடத்திய தமிழ்மக்கள் ஆர்பரித் தெழுந்தார்கள். பிரதான இடங்களில் உள்ள முக்கிய சாலைகளை மறித்தார்கள். பேசவந்த பெரியவர்களின் வசீகர வாக்குறுதிகளைக் கேட்க மறுத்தார்கள். செயல் ஒன்றே தேவை அது உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றே எனப் பலமாய் சொன்னார்கள். பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனச் சொல்லி வீதிகளிலேயே அமர்ந்தார்கள்.

காலங்கடந்த போது காவற்துறை தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. ஆனாலும் மக்கள் கலையவில்லை. காவற்துறையின் பாச்சல்கள் படங்களாக மீடியாக்களில் வெளிவரபோராட்டத்தில் மக்கள் தொகை மேலும் அதிகரித்து. பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், பிரானஸ், டென்மார்க் என எல்லா நாடுகளிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிரத்தானியாவிலும், நோர்வேயிலும் முதலில் கலைந்து செல்ல வைப்பதற்காக காவற்துறை எடுத்த முயற்சிகள் பலனளிக்காது போயிற்று. இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் பிரித்தானியக் காவற்துறை அதிகாரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில், பெண்களும், குழந்தைகளும், அதிகளவில் உள்ளதும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் உட்பட அனைவரும், போக்குவரத்தைச் ஸ்தம்பிதமடையச் செய்ததது தவிர வேறெந்தக் குற்றங்களிலோ, சேதம் விளைவிப்பதிலோ ஈடுபடவில்லை என்பதனால அவர்களைக் கைது செய்வதோ அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதோ உடனடிச் சாத்தியமில்லை என்றார். ஆயினும் இருபத்தினான்கு மணி நேரங்களுக்கு மேலாகத் தொடரும் இப்போராட்டம், இன்றிரவும் தாண்டித் தொடருமாயின் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டி வரலாம் எனத் தெரிவித்தார்.

இதே சமயம் பிரான்சில் இப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவற்துறை வன்முறை பாவித்ததாகத் தெரியவருகிறது. டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் நூறுபேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுவிஸ் ஜெனீவா நகரத்தில் உள்ள ஐ.நா முன்றலில் எதுவித முன்னறிவிப்புமின்றி சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி வீதிகளை மறித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்௧ள். அங்கு வரவழைக்கப்பட்ட அதிகளவிலான காவற்துறையினர் மக்களைக் கலைந்து போகுமாறு கேட்டும், மக்கள் கலைந்து செல்ல மறுக்கவே அவர்கள் மீது, கண்ணீர் புகை அடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மன் டுசில் டோர்ப் நகரில் போராட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. இன்றைய போராட்டங்கள் தொடரும் இவ்வேளையில் இன்று மாலையும், நாளையும் வேறு பலநாடுகளிலும் போராட்டங்கள் தொடரப்பட இருப்பதாகவும்தெரியவருகிறது.

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளர், தமிழ்மக்கள் முன்னெடுத்திருக்கும் இப்போராட்டங்கள், அவர்களது பிரச்சனை குறித்த மிகப் பெரிய பரப்புரையாகவே அமைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தி இன்று அதிகளவிலான பிரித்தானிய மக்களைச் சென்றடைந்துள்ளதாகவும், கலகமும் சேதமும் விளைவிக்காத மக்களிடத்தில், காவற்துறை வன்முறை பாவிப்பது, அவர்கள் பக்கத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையுமென்றும், தெரிவித்தார்.

தன்னெழுச்சி ஒன்று கூடிய மக்கள் தொடரும் இப்போராட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் என்று யாரும் காணப்படாததால், எவருடன் கதைப்பது என்பதே பெரும் பிரச்சனையாக உள்ளதென்றும், ஒரு சில நூறுபேர்தான் நிற்கின்றார்கள் என நினைத்துத் திட்டமிடு முன்னமே ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவதும், இப்பிரச்சினையை எப்படி அனுகுவது அதிகாரிகள் சிந்திப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக கிடைத்த தகவல்களின் படி, இந்த மக்கள் போராட்டத்தின் நியாயம் கருதி, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர், இப் போராட்டத்தில் மக்களுடன் இணைந்திருப்பதாகத் தெரிய வருகிறது.

கானொளியில்

Get Flash to see this player.

http://4tamilmedia.com/index.php/200904073...7-18-54-08.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.