Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு

Featured Replies

இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளை அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் ஆகியோர் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் அறிந்துகொள்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை வரவேற்ற பிரதி இராஜாங்கச் செயலாளர் மற்றும் பிளேக் ஆகியோர், மனிதநேயப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அமெரிக்க முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் வடபகுதியில் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாக அவர்கள், புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தாக்குதல்கள் நடத்துவதை விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக இராஜாங்கத் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் செல்வது அவசியமானது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புலம்பெயர்ந்துவாழும் தமிழ் சமூகத்துடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்துவதற்கும் ரிச்சட் பௌச்சர் மற்றும் பிளேக்குடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கொழும்பிலுள்ள தூதரகத்திலிருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக நேரடியாகக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்படவேண்டும், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதியில் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதாக அவர்கள், புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் தாக்குதல்கள் நடத்துவதை விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக இராஜாங்கத் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.

ஈழத்தமிழனின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை சர்வதேசம் கொடுக்க முன்வந்தால் பாதுகாப்பு வலய மக்களின் பிரச்சனை ஒரு வினாடியில் தீர்ந்துவிடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.