Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு இணைத்தலைமை நாடுகள் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு இணைத்தலைமை நாடுகள் அழைப்பு

வீரகேசரி இணையம் 4/10/2009 10:56:20 AM - இலங்கையின் வடக்கே மோதல்களை முடிவிற்கு கொண்டுவருமாறு விடுதலை புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இணைத்தலைமை நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

யுத்த வலயத்தில் சிக்கி பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் இணைத் தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிக்கியுள்ள 100,000 த்திற்கும் மேற்பட்ட சிவிலியன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மோதல் தவிர்ப்பு வலயங்கள் மீது நடத்தப்படும் எறிகணைத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்க உள்ளிட்ட இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட்ஸ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான மோதல் தவிர்ப்பு அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிவிலியன்களுக்கு தேவையான போதியளவு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் எனவும் இணைத் தலைமை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரினால் இணைத் தலைமை நாடுகளுடனான இந்த விசேட கூட்டம் நேற்றைய தினம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அரசாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைத்தலைமை நாடுகள் இன்று காலை விசேட கலந்துரையாடல்

[ வா.கி.குமார் ]

வெள்ளி, 10 ஏப்ரல் 2009 04:42

இலங்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இணைத்தலைமை நாடுகள் இன்று காலை விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனிதாபிமான நிலவரங்கள் குறித்து ஆராயும் பொருட்டு, இந்த கலந்துரையாடலை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரிச்சர்ட் பவுச்சர் ஒழுங்கு செய்திருந்தார்.

மோதல் தவிர்ப்பு பிரதேசத்தின், நிலவரம் குறித்து இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக அமெரிக்க ராஜாங்க செயலகம் தெரிவித்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

மோதல் பிரதேசங்களில் உள்ள மக்களது நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்வதுடன், அவர்களை பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வர இரு தரப்பினரும் இடமளிக்க வேண்டும் என இதன் போது கோரியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கம், பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினை, மதித்து, தாக்குதலை மேற்கொள்ளாதிருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த பிரதேச மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்த வெள்ளம் மிக்க இந்த யுத்தத்தினை நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும், இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போது, ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.swissmurasam.net/srilanka/13490...0-03-42-03.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை மீறி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களை எந்தவொரு அன்னிய சக்தியும் காப்பாற்ற வரப்போவதில்லை என்பது நிச்சயம். இதனை நன்கு உணர்ந்து கொண்டே சிங்களம் இந்தியாவை பின்தளமாகக் கொண்டு தனது யுத்த நிகழ்ச்சிநிரலை நகர்த்தி வருகின்றது. இன்றைய சூழலில் இந்தியாவை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் எவருக்கு இருக்கிறது? அது தமிழக மக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. இது கட்சி, கொள்கை, மதம் என்ற அகநிலை சிக்கல்களை எல்லாம் கடந்ததாக இருக்க வேண்டும்.

நன்றி தாரகா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.