Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் -அமெரிக்கா தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் -அமெரிக்கா தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு 4/17/2009 8:26:33 AM - தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தசாப்த காலமாக இடம்பெறுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது.

இத்தருணத்தில் இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலவுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளதுடன் மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் ,இடைத்தங்கல் முகாம்களுக்கு மனிதாபிமான பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு அனுமதியளிக்கவேண்டும்.

வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவது மோதல்களை முடிவுக்கு கொண்டுவராது; சமாதானத்துக்கும் இழுக்கு: அமெரிக்கா

வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது

வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் தப்பிச் செல்லக்கூடிய வகையில் உடனடியாக மோதல் நிறுத்தமொன்றிற்கு செல்லவேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவென ஏற்படுத்தப்பட்ட வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் அத்துடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை சென்று பார்வையிட சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது உதவி அமைப்புகள் முகாம்களுக்குச் சென்று செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகால பிரச்சினைக்கு முடிவொன்றை வைக்கும் வாயப்பொன்று இலற்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் றொபேர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் மேலும் சுட்டிக்காட்டியிருப்பதாகவு

பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கு வரவேண்டும் என அமெரிக்கா அழைப்பு

சிறீலங்காவில் முல்லைத்தீவு பகுதியில் வதியும் பொதுமக்களின் அபாயகரமான நிலை மற்றும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதஅவலம் கண்டு அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடியாக பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கு வரவேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது.

யுத்தப்பிரதேசத்தினுள்; 140 000 ற்கு மேற்பட்ட மக்கள் வதிவதாகவும் இவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் இருதரப்பு உடனடியாக மனிதநேய பகைமை தவிர்பு ஒப்பதம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனவும் இருதரப்பு பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்தினை பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பொதுமக்களின் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதனை நிறுத்தவேண்டும் எனவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதித்து அவர்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவவேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்கள் வதியும் முகாம்களை சர்வதேச மனிதநேய தரத்திற்கு ஏற்ப அமைப்பதை உறுதிசெய்யவேண்டும் சர்வதேச மனிதநேய நிறுவனங்களுக்கு விசா வழங்கி சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது.

இறைமையுள்ள சிறீலங்கா அரசாங்கம் இவ் நீண்ட கால பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நீடித்து நிற்கக்கூடிய அனைத்து சமூகத்தாலும் ஏற்புடைய சமாதானத்தினை அரசியல் தீர்வின் ஊடாகவே அடையமுடிம். மேலும் கொலைகள், பொதுமக்களை கொல்லுதல் முரண்பாட்டை முடிவுக்கும் மற்றும் இறுதியான சமாதானத்தையும் கொண்டுவராது.

நாம் சிறீலங்கா அரசாங்கத்தினை இவ் முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுதிட்டத்தினை உடனடியாக முன்வைத்து வன்முறையில் அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபடாத தமிழ்மக்களுடன் அதிகாரங்களை பகிர்ந்தழித்து நீடித்த சமாதானத்தை அடைவதற்கு செயல்படவேண்டும் என கேட்க்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.