Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோர் மன நெருக்கீடு நீக்கப்படுவது எப்போது..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோர் மன நெருக்கீடு நீக்கப்படுவது எப்போது..?

[26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:10 மு.ப இலங்கை]

வன்னியில் போர்ப் பகுதிக்குள் சிக்குண்டிருந்து தமது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே யொரு நோக்கத்துடன் அங்கிருந்து வெளியேறிய இடம்பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களில் கடந்த 20 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் 12,000 பேர்வரையில் குடாநாட்டுக்கு வந்துள்ளனர்.

எங்கே போகலாம் என்ற ஒரு நிலையில், தங்களைச் செõந்த இடமான குடநாட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு அவர்கள் படையினரிடம் கேட்டதாகவும், அதனை ஏற்று மனிதாபிமான முறையில் அணுகி தமது வாகனங்களி லும் கப்பலிலும் ஏற்றிவந்து இங்கு சேர்த்துள்ளனர். படையினரின் இந்த உதவியை வன்னியிலிருந்து வந்த மக்கள் வாழ்க்கையில் என்றும் மறக்கமாட்டார்கள். அவர் களின் குடாநாட்டு உறவுகளும் படையினரின் செயலுக் குத் தமக்குள்ளே நன்றி பாராட்டுவார்கள்.

ஆனால், ஆகப்பிந்தி வந்த பெரும் எண்ணிக்கை யினர் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அவர் களின் குடும்ப உறுப்பினர்கள் தவியாய்த் தவிக்கின்ற னர். தம்மால் இயன்றவரை தமது வலுவுக்கு ஏற்ற மாதிரி தென்மராட்சி என்றும், வடமராட்சி என்றும் அலைகிறார் கள். அவ்வாறு அலைந்து திரிந்தாவது தமது குடும்ப உறவுகள் எவராவது குடாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு வந்திருப்பார்களா என்ப தனை எப்பாடுபட்டும் அறிந்து விடவேண்டும் என்ற அங்கலாய்ப்புடன், உடற்களைப்பும் அலுப்பும் பார்க் காமல் சென்று வருகின்றனர். இது மனித உணர்வின் அதுவும் நெருங்கிய குடும்ப உறவின் மீதான அல்லது உற்றார் மீதான அன்பினால், பாசத்தினால் இயற்கை யாக உண்டாகும் மன ஆவல். மனிதநேயம், அன்பு, பாசம், பந்தம் என்பன மனிதனோடு ஒன்றித்தவை. அவை எல்லோருக்கும் பொதுவானவை. ஆகையால் ஆவல் மிகுதியாலும் அன்பின் நீட்டத்தினாலும், குடா நாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் ஏதாவது ஒன்றி தங்கள் உறவுகள் தங்கவைக்கப் பட்டிருப்பார்களோ என்ற மன ஏக்கத்துடன் அலைவதனைப் பொருட் படுத்தத் தேவையற்ற வீண் முயற்சி வீண் வேலை

என்று எவரும் தட்டிக்கழித்து விடக்கூடாது.

இங்கே இரண்டு தரப்புகளும் வன்னியிலிருந்து வந்தவர்களும், இங்கே வாழும் அவர்களின் உறவுகளும் மனத்தாக்கத்துக்கு உள நெருக்கீட்டுக்கு ஆளாகி றார்கள் என்பதனை எவரும் கவனத்தில் கொள்வதாக இல்லை.

தங்கள் உறவுகளைப் பார்த்து இரண்டு நிமிடநேர மேனும் தமது நிலையைக் கூறி ஆறுதல் அடைய முடிய வில்லையே என்று அங்கிருந்து வந்தவர்களும்

எத்துணை அவலங்களைச் சந்தித்துத் துன்பத்தின் வடிவங்களாக வந்திருக்கும் இரத்தத்தின் இரத்தங்களை ஒரு நிமிட நேரமேனும் கண்டு ஆறுதல் கூறக் கொடுத்து வைக்கவில்லையே

பல மைல் தொலைவில் இருந்த வேளைதான், அவர் களின் நிலைமைகளை அறிய முடியவில்லை, சேமம் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் எமது பிரதேசத் துக்கு வந்த பின்னரும் அந்த நிலையா என்று இங் குள் ளோரும் விநாடிக்கு விநாடி தமது மனதை உருக்கி, நெஞ்சம் கனல்வீசி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.

இப்போது குடாநாட்டுக்கு வந்துள்ள தமது இரத்தத்தின் இரத்தங்களை ஒரு நிமிடமேனும் பார்க்க முடியாமல், பேசமுடியாமல் மனம் நொடிபவர்கள், அவர்கள் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டிருந்த வேளை யில் அவர்களின் சேமநலன்களை இங்கிருந்தவாறே வாரத்தில் ஒருதடவையாவது அறிந்துகொள்ளக் கூடிய தாக இருந்தது.

போர்ப் பிரதேசத்துக்குள் வசித்தவர்களின் புலம் பெயர் உறவுகள், அங்கிருந்து தகவல் அறிந்து இங் குள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இப்போது அந்த தூரவழித் தகவல் அறியும் வாய்ப்பும் அற்றுப் போய்விட்டது.

அவர்களின் உளநெருக்கீட்டையும் அதனால் உண் டாகப் போகும் உளவியல் தாக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடியவர் எவரும் இல்லையா என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுவது இயல்பே. மனித நேயமும் மனிதத்துவமும், உலகில் மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள். அவற்றைத் தேடி யாரிடம் போவோம் என்ற ஆதங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட இரண்டு தரப்பு களும் இப்போது......! அவர்களின் மனநோவை நீக்க வேண்டும் என்ற மன விருப்பம் அதிகாரிகளுக்கு இயல் பாகவே பிறந்திருக்க வேண்டும். ஆனால் அதனை இன் னும் செயலில் காண முடியவில்லை.

மனிதாபிமானம் பேணப்பட்டு, இடம்பெயர்ந்த மக் களின் நலன்கள் உரியவாறு கவனிக்கப்படுவதாக அடிக் கடி கூறிக்கொள்ளும் அமைச்சர்கள் மகிந்த சமரசிங் காவும், றிஷாத் பதியுதீனும் குடாநாட்டில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கி இருக்கும் மக்களினதும், வவு னியா, மன்னார் மாவட்டங்களில் நலன்புரி நிலை யங் களில் தங்கிஉள்ள மக்களினதும் மனவருத்தத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான சேவையின் ஓர் அங்கமாக உறவுகள் அவர்களைச் சந்தித்துப்பேச ஏற் பாடு செய்வது எப்போது?

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.