Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேள்விக்குறியான எமது இனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்விக்குறியான எமது இனம்: புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு

சீனா, ரஷ்யாவின் ஆயுத பலத்துடனும் இந்தியாவின் இராணுவ தொழில் நுட்ப உதவிகளுடனும் தமிழீழத்தில் உள்ள தமிழினத்தை இனச்சுத்திகரிப்பு செய்த இலங்கை அரசாங்கம் இன்று தாம் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாகவும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் தென்னிலங்கையில் பட்டாசு சந்தோசத்துக்காகவும் வட இலங்கையில் பட்டாசு தமிழினழிப்புக்கும் சிங்கள வெறியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழர்களாகிய எமது வாழ்க்கை, உரிமை, உறவுகள், சொத்துக்கள் எல்லாமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில், எமது தேசியத்தலைவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் நமக்கு தெளிவாகத்தெரியாது. “எமது தலைவரை எம்மிடமிருந்து கடவுள் பிர்க்கமாட்டார்” என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், “தலைவருக்கு ஒன்றும் நடக்காது” என்று தானே தன் மனதை தேற்றிக்கொள்ளும் நிலையிலும் நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம். எம் உறவுகள் இறந்துகிடக்கும் தருணத்தில் எமக்காக தம் உயிரை தியாகம் செய்த எம் உறவுகளின் உடல்களை பார்ப்பதற்கு கூட எமக்கு கிடைக்காது போய்விட்டது. தமிழீழத்திலிருந்து தேசிய தலைவர் போட்ட பிச்சை தான் நாம் இன்று உயிரோடு பிணமாக உலாவுவதற்கு காரணம் என்பதை ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை.

நேற்று எம் தேசிய தலைவரின் உயிரை காவு கொண்டதாக இலங்கையரசு அறிவித்த அடுத்த கணமே கொழும்பு நகரில் அதன் தாக்கத்தை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. வீதியில் போய்க்கொண்டிருந்த இரண்டு பெண்களின் தங்கச்சங்கிலியை பறித்ததாகவும் அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றியதாகவும் நாம் அறிந்தும் எமக்கு நடக்கவில்லை நாம் தப்பிட்டோம் என்றி நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று தங்க சங்கிலியை பறித்தவனுக்கு தங்கச்சங்கிலியை பறித்ததற்காக நடவடிக்கை எடுக்காமல் போனதால் அவர்களது கற்பை பறிக்க எவ்வளவு நேரமாகும்! நேற்றைய தினம் எமது பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் கூறும்போது சொன்னார் ” எம் போராட்டத்தில் எவ்வித சம்மந்தம் இல்லாத மலையக தமிழர்கள் வாழும் இடங்களில் அவர்களால் வணங்கப்பட்டு வந்த பிள்ளையார் சிலை நேற்று சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள வீடுகளில் புகுந்த சிங்கள காடையர்கள் பட்டாசு வாங்குவதற்காக நூற்றைம்பது ரூபாய் தரும்படி வாங்கி சென்றதாகவும்” கூறினார். இவ்வாறு எம் தலைவரை காவு கொண்டதாக பொய்பிரசாரம் செய்வதன் மூலமே இப்படியான ஒரு அநீதி தமிழர்களிற்கு இழைக்கப்படுகிறது என்றால் மீதியை எம்மினமே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

எதற்காக தலைவர் ஆயுதம் ஏந்தினார்! எதற்காக முப்பதாயிரத்திற்கும் உட்பட்ட போராளிகள் மாவீரர்களானார்கள்! என்பதற்கான விடைகளெல்லாம் வெகுவிரைவில் எல்லோரும் அனுபவிக்கும் போது தெரியவரும். எமக்காக தன் குடும்பத்தையும் சுகவாழ்வையும் இழந்த எம் தலைவரின் கொள்கைகள் பிடிக்காத சுயநலவாதிகளிற்கு இவற்றின் மதிப்பு தெரியவருவதற்கு இன்னும் காலம் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். தலைவரையோ அவரால் மக்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப்புலிகளையோ விமர்சித்த உறவுகளுக்கு இது ஒரு பெரிய பாடமாக இருக்கும். இனிமேல் எம் தலைவரை விமர்சிப்பார்களாயின் அவர்கள் மனச்சாட்சியற்றவர்கள் மட்டுமல்ல மனிதர்களே இல்லை என்று தான் கருதகூடியதாக இருக்கும். எம்மக்களின் மனநிலை மாறி “தலைவர் இருந்தால் எமக்கு இப்படி நடந்திருக்குமா?” என்ற நிலை எண்ணம் எம் மக்கள் எல்லோருக்கும் வரவேண்டும் வரும். வரும்போது தலைவரை அவரது போராட்டத்தை அவர்கள் நிச்சயம் உணர்வார்கள். அப்படியான சூழலிலே கடவுளின் அவதாரமான எம் தலைவர் எம் முன் நிச்சயமாக தோண்றுவார். அதற்காக நாம் காத்திருப்போம் பொறுத்திருப்போம்.

உலகில் பெரும்பான்மையான கொள்கைவகுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் அவர்கள் இறந்த பிறகு தான் இந்த சுயநலவாத உலகத்தால் முடிசூட்டப்படுகிறது. தமிழர்களாகிய எம்மனதிலுள்ள ஆவல், எம் தேசிய தலைவர் அந்த விருதை தமிழீழத்தை ஆட்சி செய்யும் போது எந்த உலகத்தால் அவர் தீவிரவாதி என வர்ணிக்கப்பட்டாரோ அந்த உலகத்தால் அவர் சுதந்திரபோராட்ட வீரர் என்று போற்றப்படவேண்டும் வாழ்த்தப்பட வேண்டும். என்பதே!. போராட்ட ரீதியாக சிந்திக்கும் போது சிலரின் கருத்து எம்மினத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்பது. ஆனால், நான் என்ன கருதுகிறேன் என்றால் இப்போது தான் எமது போராட்டம் வலிமை பெற்றிருக்கிறது என்று. தமிழீழம் நாமும் பல நெருக்கடிகளிற்குள்ளான போது தான் உலகத்திலுள்ள பெரும்பான்மை மக்களிற்கு எம்மை பற்றி தெரியவந்தது. இவர்கள் யார்? ஏன் போராடுகிறார்கள்? இவர்களது பிரச்சனை என்ன? என்று அவர்கள் ஆராய்வதற்கு காரணமாக மூலமாக திகழ்ந்தவர்கள் எம் புலம்பெயர் உறவுகள். அதிலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இப்போது தான் எமது போராட்டம் சர்வதேச ரீதியில் வலுப்பெற்றிருக்கிறது.

“ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்” எனும் தமிழீழ பாடல் வரியிலுள்ள அந்த தீப்பிழம்பை இன்று தமிழினத்தின் உள்ளங்களில் அக்னிக்குஞ்சாக விட்டு சென்றிருக்கிறார்கள் எம் தளபதிகள். அதை கொண்டு நடத்துவதற்கு எம் தேசிய தலைவரிற்கு நிகரானவர் யாரும் இருக்கமாட்டார்கள். அதற்காகவே எமது தேசியத்தலைவரை எமது மக்களும் போராளிகளும் மிகவும் கவனமாக காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். ஒருவரை பார்க்கும் போது தெரியும் இவர் நிச்சயம் தமிழீழமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அப்படியான ஒரு ஒழுக்கம், கட்டுபாட்டுடன் எம்மினத்தை வழிப்படுத்தி வந்தவர் தான் எம் தலைவர். “பிஞ்சு மழலைக்கும் பகைவன் நஞ்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன்” என்று ஒரு பாடல் வரி இதனை நன்கு தெளிவு படுத்தும் என நினைக்கிறேன். குழந்தையிலிருந்து அவரது வழிகாட்டல் பணி தொடர்ந்தது. இப்படியான ஒரு தலைவர், உத்தமர், பூரண மனிதர், உலகத்திலே தமிழீழத்தில் பிறந்து அவரின் வழிநடத்தலில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்றால் உலகத்தில் எம்மை விட உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது.

எம் தலைவர் எங்கு இருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டுமாயின் கார்த்திகை இருபத்தியேழு வரவேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில், எமக்கு என்ன தான் முக்கிய காரணங்கள் இருந்தாலும் கார்த்திகை இருபத்தியேழு அன்று மாலை ஆறு மணி ஐந்து நிமிடங்களிற்கு எமது கடவுள்களை தமிழினம் ஒன்றுகூடி வணங்கும் அந்த தருணத்தில் தான் எம் தலைவர் எம் குறிக்கோள்களையும் நாம் செய்யவேண்டிய பணிகளையும் மக்களுக்கும் உலகுக்கும் எடுத்துக்கூறுவார். அன்று எம் அடுத்த கட்ட போராட்டங்களை பற்றி தலைவர் எமக்கு கூறுவார் கூறவேண்டும். இந்தியராணுவம் இலங்கையில் இருந்தபோது தலைவரை சுட்டுவிட்டார்கள் என்று ஒரு செய்தி பரவியிருந்தது. மக்கள் அனைவரும் மிகுந்தவேதனையடைந்திருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.