Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதைக்கப்பட்ட சமஸ்டியை மீண்டும் தோண்ட நாம் விடமாட்டோம் - விமல் வீரவன்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27/05/2009, 13:03 [செய்தியாளர் மயூரன்]

புதைக்கப்பட்ட சமஸ்டியை மீண்டும் தோண்ட நாம் விடமாட்டோம் - விமல் வீரவன்ச

ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின்னர் ஜே.வி.பி. அரசுடன் இருந்திருந்தால் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிகளை அவர்களும் பங்கெடுத்து கொண்டாடியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன் சேர்த்து சமஸ்டியையும் புதைத்துவிட்டனர். அந்த சமஸ்டி என்ற சடலத்தை மீண்டும் தோண்டுவதற்கு நாம் விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்க்கைத் தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரைநிகழ்த்துகையில்,

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தலைமைத்துவத்தை ஜனாதிபதி வழங்கினார் என்றால் அதற்கான வீரத்துவத்தை ஜே.வி.பி. பெற்றிருக்கலாம். ஆனால் கடந்தகால எதிர்வு கூரல்களினால் அக்கட்சியின் தலைவர் எடுத்தமுடிவினால் ஜே.வி.பிக்கு அது கிடைக்கவில்லை.

இந்தியாவிடம் மகிந்த அடிமைப்பட்டுவிட்டார், பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது, விமானக்குண்டு வீச்சு நிறுத்தப்பட்டுவிட்டது உள்ளிட்ட பல்வேறான எதிர்வு கூரல்களை கூறிய ஜே.வி.பிக்கு இன்று வெற்றிக்கொண்டாட்டங்களில் பங்கெடுக்கமுடியாதுள்ளது.

மக்கள் தேசியக்கொடியின் கீழ் ஒன்றிணைகையில் ஜெ.வி.பி கட்சி தலைமைக்காரியலாயத்தை நடத்துவதற்கு அன்றையதினம் தேசியக்கொடியை விற்றது. தங்கடைய எதிர்வு கூரல்களை நியாயப்படுத்துவதற்கு கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் முன்செல்கின்றனர்.

அதுமட்டும் அல்லாது சமஸ்டித் தீர்வு வரும் என எதிர்வு கூறிக்கொண்டு மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது. எமது படைவீரர்கள் பயங்கரவாதத்துடன் சேர்த்து சமஸ்டியையும் புதைத்துவிட்டனர். சமஸ்டியை மீண்டும் தோண்டிஎடுக்க நாம் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.