Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அந்நாடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்துள்ளார் மக்கள் சமூக உரிமை கழகத்தின் தமிழகத் தலைவர் முனைவர் வி. சுரேஷ்.

உணவு பாதுகாப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையருக்கு ஆலோசகராகவும், மத்திய சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமை ஆய்வு அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். அவரோடு தமிழ்.வெப்துனியாவின் நேர்காணல்.

தமிழ.வெப்துனியா.காம்: இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், நடந்து முடிந்த இறுதிப் போர் என்று சொல்லப்பட்ட மோதிலில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று ஐநாவின் மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை ஐ.நா. மன்றத்திலேயே கூறினார். அவர் கூறியதன் அடிப்படையில் ஆழமான விவாதம் நடந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மற்றும் போர் மீறல்கள் என்ன என்பது பற்றி தெளிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 26, 27ஆம் தேதிகளில் நடந்த அந்த கூட்டத்தில் அப்படி எதுவும் விவாதிக்கப்படாதது மட்டுமின்றி, சிறிலங்க அரசே கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எப்படி, எதனால் என்ற கேள்வியும், ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகமும் பொதுவாக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் உள்ளது. இதனை நீங்கள் விரிவாக விளக்க வேண்டும்.

முனைவர் வி. சுரேஷ்: 26, 27ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில், உச்சக்கட்ட அரசியல் அதாவது ஆங்கிலத்தில் ஹைலெவல் பாலிடிக்ஸ் என்று சொல்வார்களே அதுதான் நடந்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால் அந்த இறப்பே கண்துடைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சில உண்மைகள் வெளிவருகின்றன. எப்படி ஒரு அரசாங்கம், தங்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மீது போரை முன்னெடுத்துச் செல்கிறார்கள், அங்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை போர் என்ற கண்ணோட்டத்திலும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மறைப்பது எப்படி என்பதையும் செய்து காட்டினர்.

வெறும் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தாமல், போரில் சம்பந்தப்படாதவர்களையும் (அப்பாவி மக்களையும்) எப்படி ஒரு போர் வடிவத்தில் அவர்களையும் போருக்குள் கொண்டு வந்தார்கள், எவ்விதமான தந்திரத்தைக் கையாண்டார்கள் எனபதை இலங்கையில் நடந்த போரின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் தற்போது இருக்கக் கூடிய அரசாங்கம் மிகக் கொடூரமானது. நம்மை எல்லோரையும் விழுங்கிவிட்டார்கள். ஆள் பலம், படை பலம் இருக்கிறது. பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு சுலுகைகளையும் பெற்றார்கள். மனித உரிமை அமைப்பாளர்களை வெளியேற்றுதல் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் செய்தார்கள்.

ஜெனிவாவில் நடந்த விஷயங்களை இந்த பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம், தன்னைப் பற்றியே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை சாதாரணமாக யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்வதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, தான் மட்டுமல்லாமல், 25 நாடுகள் இதனை முன்மொழிந்து தீர்மானத்திற்கு ஆதரவு பெற்றுள்ளனர் என்றால், யார் யாரை முட்டாளாக்கிவிட்டார்கள் என்று புரியவில்லை.

அங்கு நடந்த மாபெரும் மனிதப் பேரழிவைப் பற்றி கூறியது உண்மையா அல்லது அங்கு ஒன்றுமே நடக்கவில்லை, ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை, மிக அழகாக போரை நடத்தினோம் என்று கூறுவது உண்மையா என்று புரியவில்லை.

சில நேரத்தில் நமக்கே குழப்பமாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தந்திரமாகவும், சிறப்பாகவும் ஒரு செயலை அவர்கள் செய்து முடித்துள்ளனர்.

இதைத்தான் நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிறிலங்க அரசு மேற்கொண்டது போன்ற ஒரு போர் நடவடிக்கையை, ஆசியாவில் இருக்கும் நாடுகளும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் இதே வழியில் பின்பற்றினால் ஒரு பயங்கரமான நிலை ஏற்படும்.

இது போன்றதொரு நிலைமை பாகிஸ்தானிலும் நிலவுகிறது. பாகிஸ்தானில் பலுச்சி மக்கள் வாழும் பகுதியில், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல பலுச்சி மக்கள், நாங்கள் தனியே போக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எப்படி இலங்கையில் தமிழர்கள் கூறி வருகின்றனரோ அதைப்போன்ற பிரச்சினைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் நிலவுகிறது. கிழக்கு நேபாளத்திற்கும், மேற்கு நேபாளத்திலும் இதே நிலை நிலவுகிறது. பங்களாதேஷில் சிட்டகாங் பிரச்சினை உள்ளது. அங்கு ரிகாங் பழங்குடியினரும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நமது இந்தியாவிலும் வடக்கு பகுதியில் இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. மணிப்பூர், நாகாலாந்து, அசாம் என பல இடங்களில் இப்பிரச்சினை உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு, இலங்கையில் நடந்தது போன்ற (போர்) மாதிரியான தீர்வை நோக்கி சென்றால் என்னவாகும் என்பதுதான் அடுத்த கவலைக்குரிய விஷயமாகும்.

இலங்கையில் 3 முறைகளைக் கையாண்டார்கள். ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று 9/11க்கு பிறகு உருவாகிய ஒரு சூழ்நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகள் என்பவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் தமிழர்கள் என்பதால், எல்லா தமிழர்களுமே தீவிரவாதிகள்தான். அவர்களை நம்ப முடியாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறி 2006ஆம் ஆண்டே தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையை வைத்துக் கொண்டு அவர்கள் கையாண்ட சில அரசியல் போக்குகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போருக்குப் பின்னால் நடந்த அரசியல் தந்திரங்களை மூன்று நடவடிக்கைகளாகப் பிரிக்கலாம். ஆகஸ்ட், 2006ஆம் ஆண்டுதான் இலங்கை போர் 4 என்று ஆரம்பித்தனர். இது டிசம்பர் 2008 வரையான காலகட்டம். அடுத்து, ஜனவரி 2009 முதல் ஏப்ரல் 2009 வரையான காலகட்டம். அது போரின் உச்சக்கட்டம். கடைசி பாகம் ஏப்ரல் 14, 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை. அப்போதுதான் பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். போர் முடிந்தது என்று அவர்கள் அறிவித்தார்கள்.

இன்று மூன்று காலக்கட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம். இந்த மூன்று காலகட்டத்தையும் பிரித்து அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது, அப்போது இலங்கை அரசின் வழிமுறைகள் என்ன என்று பார்க்கவில்லை என்றால், வரலாற்று ரீதியாக நாம் தவறு இழைத்துவிட்டதாக ஆகிவிடும்.

அது புரியாமலே நாம் ஒரு நிலையை எடுத்துவிட்டால், என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விடும் என்பதோடு, இதனை எதிர்ப்பதாக இருந்தால் எப்படி எதிர்ப்பது என்பதும் தெரியாமல் போய்விடும்.

ஆகஸ்ட் 2006 முதல் டிசம்பர் 2008 வரையிலான காலகட்டத்தைப் பார்ப்போம். அப்போதுதான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் துவக்கினார்கள். சிறிது சிறிதாக போரை துவக்கி பெரிய அளவில் கொண்டு வந்தனர்.

இலங்கை முழுவதுமே ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்தியது போன்ற நிலையை கொண்டு வந்தனர். எங்கு பார்த்தாலும் காவலர்கள், ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர்.

தமிழர்கள் சித்ரவதை, ஆள் கடத்தல், காணாமல் போவது, வெள்ளை வாகன ஆள் கடத்தல் போன்றவை நிகழ்ந்தது. அப்போது ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் தெளிவாக செய்தனர்.

முன்பு செய்த தவறுகளை மாற்றிக் கொண்டனர். உதவி செய்யும் அமைப்புகளான, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, ஜப்பான் போன்ற நிதி உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு, ஜனநாயகம் என்பது ஒரு தேவையான சொல். அந்த சொல்லுக்கான ஒரு நாடகத்தை வெளியில் இருந்து செய்துவிட்டனர். அவர்களுக்கு ஜனநாயகம் என்பது பேரளவில் இருந்தால் போதும், நாட்டிற்குள் அப்படி ஒரு நிலை நிலவுகிறதா என்பதை எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இலங்கை அரசும், இவர்களுக்கு ஒரு நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டது. இவர்களிடம் நிதியைப் பெற அதுவே போதும் என்று எண்ணியது.

அதனால் ஜனநாயகத்தை அப்படியே பாதுகாத்தார்கள். தேர்தல், சட்டம், காவல்துறை போன்றவற்றை அப்படியே வைத்துக் கொண்டு, உள்ளே மட்டும் ராணுவ ஆட்சியைப் போன்று நடத்தி வந்தனர்.

காவலர்கள் யாரை வேண்டுமானாலும் பிடித்துச் செல்லாம், அடிக்கலாம், கொலையும் செய்யலாம். ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி என்பதாகும். அதில், நீதிமன்றம், காவல்துறை, நாடாளுமன்றம், அரசு அமைப்பு என எல்லாமே தனித்தனியாக இருக்க வேண்டும். இவை எல்லாமே சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். மூன்றாவது யாருமே சட்டத்திற்கு மேல் கிடையாது. எல்லோருமே சட்டத்திற்குக் கீழ்தான் என்பது.

இங்கு என்ன நடந்தது என்றால், மேலோட்டமாக ஜனநாயகம் என்று வைத்துக் கொண்டு, உள்ளிருக்கும் அமைப்புகளை ஒவ்வொன்றாக உடைத்து சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தனர்.

அதற்கு ஒரு அத்தாட்சியாக, நம் நாட்டில் 40, 50 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யும்போது, அங்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பெட்ரோல் விலையை உயர்த்தியது தவறு என்று தீர்ப்பளித்தார். உடனடியாக அவர் மிரட்டப்பட்டார்! இதுபோன்ற தீர்ப்புகளைக் கூறிக் கொண்டிருந்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் கதி என்ன வென்று சொல்லவே வேண்டாம்.

இப்படித்தான் ஒவ்வொருத் துறையிலும் மிகவும் கூர்மையாக அமைப்புகளை உடைத்தெறிந்தனர்.

காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறப்பட்டது. இது உச்சக்கட்டத்திற்கு போனது.

இது பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ஐ.நா.வில் கூறியது என்னவென்றால், ஒரு 10 போலிஸ்காரர் இருந்தால், அதில் 3 பேர் ரவுடிகள் போல செயல்படுகிறார்கள். அவர்களால்தான் மற்ற காவல்துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது என்று பொதுவாக கூறுவார்கள்.

இவர் சிறிலங்காவில் பல முகாம்களுக்கும், பல இடங்களுக்கும் சென்றுவிட்டு என்ன சொல்கிறார் என்றால், இந்த மாதிரியான சித்ரவதை செய்யும், சட்ட மீறல் செய்யும் காவலர்கள் குறைந்தபட்சமாக இல்லை. அவர்கள்தான் அதிகபட்சமாக இருக்கிறார்கள். அதாவது 10இல் 7 பேர் இருக்கிறார்கள். எனவே, ஏதோ ஒரு சில காவலர்கள் இப்படி செய்து விட்டார்கள் என்று ஒதுக்க முடியாது, ஏறக்குறைய அனைத்து பேருமே அங்கு அப்படித்தான் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதை நான் சொல்லவில்லை, ஐ.நா.வால் அமர்த்தப்பட்ட அதிகாரி திட்டவட்டமாகச் சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தெளிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

ஜனநாயகப் போர்வையில் அங்கு ஒரு ராணுவ ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களை கடத்திச் செல்வதும் கொல்வதும் மிகவும் சாதாரணமாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்று கொல்லப்பட்டுள்ளனர்.

கொழும்புவில்தான் இது அதிகமாக நடக்கிறது. ஒரு நான்கு பேர் ஒரு இளைஞரைக் கடத்திச் சென்று கொன்று விடுவார்கள். இதனால், மற்றவர்களுக்கு, நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான் என்ற பயம் வரும், இதனால் சமுதாயமே ஒரு அச்சத்திற்குள்ளாகியுள்ளது.

இது ஒரு அரச பயங்கரவாத நிலையாகும். அரசே ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, மக்களை பயந்த நிலையிலேயே இருக்க வைப்பதான முறையாகும்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழர்களை மட்டும் இவர்கள் தாக்கவில்லை. தமிழர் அல்லாதவர்களும் இந்த தாக்குதலுக்குட்படுத்தப்பட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.