Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வின் கள்ள மௌனம்!

Featured Replies

ஐ.நா.வின் கள்ள மௌனம்!

சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம்.

ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழுதி மனிதருக்கு முதுகுவலி வந்ததுதான் மிச்சம். இவர் எழுதியபோது அவர் போய் படுத்துக்கொண்டார். அவர் வெளியேவந்தபோது இவர்போய் படுத்துக்கொண்டார். என்ன செய்வது, சிதம்பரத்துக்கு இருந்த அதிர்ஷ்டம் ஈழத்தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

கலைஞரை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? அவர் செய்ததைத்தான் உலக நாடுகளும் செய்தன. போரை நிறுத்தும்படி அறிக்கை விட்டன.. மீண்டும் அறிக்கை விட்டன... மீண்டும் மீண்டும் அறிக்கைவிட்டன. முள்ளிவாய்க்காலில் கடைசித் தமிழனும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தான், இவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.இந்தியாவில் தேர்தலும் இலங்கையில் போரும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பத்தே நாளில், போருக்கு ஆதரவுகொடுத்த சோனியாவுக்கும் மன்மோகன்சிங்குக்கும் மனமுவந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ராஜபக்ஷேக்கள்.

110609a21.jpg

ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களை வீழ்த்தி இந்தியாவுக்கே நீதி வழங்கியிருப்பதாக பாணா சுற்றுகிறார்கள். மடியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. இலங்கையில் நாங்கள் போரில் வென்ற அதே நேரத்தில் இந்தியாவில் நீங்கள் தேர்தலில் வென்றது குறித்து மகிழ்ச்சி. புலிகளை ஆதரித்தவர்களுக்குத் தமிழக மக்கள் பாடம் புகட்டியதில் பெருமகிழ்ச்சி என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார் ராஜபக்ஷே.

தனது வாழ்க்கையில் ராஜபக்ஷே உண்மை பேசியிருப்பது இதுதான் முதல்முறை. இரண்டும் ஒரே நேரத்தில்தான் நடந்தது. தமிழினப் படுகொலையைக் கொண்டாட சிங்கள இனவெறியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோதுதான், அண்ணா அறிவாலயத்தின் முன்பும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். ஊசிவெடி வெடித்தால்கூட பங்கருக்குள் ஓடிப்போய் பதுங்கிக்கொள்ளும் எங்கள் சொந்தங்களின் காதில், இந்தப் பட்டாசு சத்தமெல்லாம் கேட்டிருக்காது. ஏனென்றால், அதற்குமுன்பே அவர்களது பதுங்குக் குழிகள் எல்லாம் சவக்குழிகளாக மாறிவிட்டிருந்தன.

110609a24.jpg

54 வயது பிரபாகரன் உயிரோடு இருக்கவேண்டியதன் அவசியம் கருதி, மகன் சார்லஸ் கரும்புலியாக மாறிக் காப்பாற்றியதாக அங்கிருந்து செய்தி வந்த நேரத்தில்தான், மகனுக்கு எப்படியாவது மந்திரி பதவியை வாங்கிக்கொடுக்கும்படி தள்ளாத வயது தலைவரைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனது தமிழ்நாடு. பழைய எண்ணிக்கையில் கொஞ்சம் தள்ளுபடி ஆனாலும் பரவாயில்லை, சொல்லும்படி ஒரு இலாகாவை மதுரைவீரனுக்குக் கொடுங்கள் என்று காவடிச் சிந்து எழுதாத குறை.

நமக்கெதற்கு வம்பு என்று நாம் வாயை மூடிக்கொண்டோம்.இப்போது, நம்மையெல்லாம் மிஞ்சும் விதத்தில் மௌனம் சாதிக்கிறார், ஐ.நா.வின் செயலர் நாயகம் பான் கீ மூன். கடைசி ஓரிரு நாளில் மட்டுமே 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற விவரம் தெரிந்திருந்தும், இலங்கை விஜயத்தின்போது அதைப்பற்றி மூச்சுவிடாமல் திரும்பிச் சென்ற அவரது மௌனம், ஐ.நா.வையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது.

ஐ.நா.வின் இந்தக் கள்ள மௌனத்தை அம்பலப்படுத்தியிருப்பவர், ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர். பெயர், பிலிப் போலோபியான். இலங்கையின் கொலைவெறிக்கு ஐ.நா. துணைபோனதையும், மிகப்பெரிய இனப்படுகொலை நடந்திருப்பதை மறைக்க அது முயல்வதையும் லீமாண்ட் என்கிற பிரெஞ்சு நாளேட்டில் அவர் விவரித்திருக்கிறார். ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் நிலையில் இருக்கும் விஜய் நம்பியார்தான் இதற்கெல்லாம் காரணம் என்பது அவரது குற்றச்சாட்டு.விஜயின் இளவல் சதீஷ் நம்பியார், இலங்கை ராணுவத்தின் ஆலோசகராகப் பதவி வகிக்கிறார். 110609a22.jpg

இதிலிருந்து ஐ.நா.எப்படி வளைந்துகொடுத்தது என்ற ரகசியம் அம்பலமாகிறது.கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை முழுமையாக அறிந்திருந்தும் ஐ.நா. அதை மறைத்-திருக்கிறது. உண்மையான தகவல்களை வெளியிட்டால் ஐ.நா. அலுவலகமே கொழும்பில் செயல்படமுடியாது போய்விடுமென்றும், ஐ.நா. அலுவலர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படுவார்களென்றும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.