Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதனை மறைக்கிறது? : கனடிய "ரொரன்ரோ சன்' பத்திரிகை

Featured Replies

IMG6669-1245172640.jpg

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் நேசஅணியாக இருக்கும் இலங்கை மற்றவர்கள் மீது சந்தேகப்படும் தன்மையை கொண்டிருப்பதாகவும் இந்நிலையில்,

இராணுவ வெற்றியைத்தொடர்ந்து தமிழ் பொதுமக்களின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்குமென எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் "ரொரன்ரோ சன்' பத்திரிகை அதனாலேயே சர்வதேச அவதானிகள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

"இலங்கை எதனை மறைக்கிறது' என்று மகுடமிட்டு "ரொரன்ரோ சன்' நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை இறைமையுள்ள தேசமாகும். லிபரல்கட்சி எம்.பி.பொப் ரேயையும் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சரும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யுமான தீபக் ஒபராவையும் நாட்டுக்குள் பிரவேசிக்காமல் தடுப்பதற்கான உரிமை அதற்கு உண்டு. யாவற்றுக்கும் மேலாக இலங்கை பொப்ரேக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்றதொன்றை பிரிட்டிஷ் எம்.பி.ஹல்லோவேயுக்கு கனடா செய்திருந்தது.

தமது உரிமைகள் என்ற வரையறைக்குள் நாடுகள் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை இது வெளிப்படுத்துகிறது. அதேசமயம், ஹல்லோவே ஹமாஸுக்கு பொருள் உதவி வழங்கியதாக கனடா தற்போதும் வாதத்தை முன்வைத்து வருகிறது. விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் கொண்டவரென்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் காரணத்துக்காக இலங்கை பொப்ரேயை தடைசெய்தது.

உண்மையான உலகத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடர்பாக ஹல்லோவே ஒருபக்க கருத்தைக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவர் பயங்கரவாதிகளுக்கு உதவியாக ஒருபோதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை. 2006 இல் அவர் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவும் அவருக்கு தடை விதிக்கவில்லை.

இலங்கை சிறுபான்மை தமிழர்களைக் கொடூரமாக நடத்துவதை அடிக்கடி பொப்ரே பகிரங்கமாக விமர்சித்து வந்தார். மனித உரிமை அமைப்புகளும் இதனை மேற்கொண்டுள்ளன. இலங்கை தொடர்பாக பொப்ரே நீண்டகாலமாக ஆர்வம் கொண்டவராவார்.

சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கடந்த காலத்தில் அவர் புலிகளின் உறுப்பினர்களை சந்தித்துள்ளார். ஆனால், அவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் பயங்கரவாதத்தை அங்கீகரிக்கின்றார் என்றும் தெரிவிப்பது பிரயோசனமற்றதொன்றாகும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 26 வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையைத் தொடர்ந்து கனடிய அவதானிகளை அனுமதிப்பது தொடர்பாக இலங்கை ஐயுறவு கொண்டுள்ளதா என்பது தொடர்பாக பொப்ரே குறிப்பிட்டிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.

மோதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்தும் இருக்கின்ற நிலையில் இந்தத் தமிழர்கள் தொடர்பாக அதன் திட்டம் என்ன என்று அவதானிப்பதற்காகவே கனடிய அவதானிகளை அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அகதிகளாக இலட்சக்கணக்கான தமிழர்களை கனடா ஏற்றுக்கொண்டிருப்பதால் இலங்கை சந்தேகப்படுவதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால், பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் புலிகளை பயங்கரவாத அமைப்பென பிரகடனப்படுத்தியுள்ளார். அதேவேளை, பொப்ரே தடுக்கப்பட்டமை மற்றும் இலங்கையிலுள்ள கனடிய தூதரகம் மீதான தாக்குதல் என்பன தொடர்பாக அவர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் நேச அணியாக இருந்தும் கூட இலங்கையானது இந்த சந்தேகத்தைக் கொண்டுள்ளது. இத்தகைய நிலையில் இராணுவ வெற்றியைத் தொடர்ந்து தமிழ்ப் பொதுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பாக அதன்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்? அதனாலேயே அது (இலங்கை) செய்கின்றதைப் பார்ப்பதற்கு சர்வதேச அவதானிகள் தேவைப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிய மறந்துவிடாதீர்கள்.

http://www.torontosun.com/comment/editoria...797631-sun.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலையிடி தனக்குத்தனக்கு வந்தால்தான் அதன் வலி எப்படி என்ற உணருவார்கள். இப்போது இவர்களுக்குத் தலையிடி வந்துவிட்டது. தன்னைத்திருப்பி அனுப்பயதே அவமானம் என்று கொதிக்கிறார்கள். தமிழினத்தை அழித்தபோது கண்மூடி, வாய்பொத்தி, காது பொத்தி இருந்தார்கள். வெள்ளம் காலுக்குள் வந்தபின் அணைகட்ட வெளிக்கிட்டால் வெள்ளம் அடித்துச் செல்லும். எதை மூடி மறைத்து எல்லாரும் செய்தார்களோ அதையே அவர்கள் தொடருகின்றார்கள். இதைப்புதினமாகக் கேட்கிறாங்கள். தற்காலிகமாக வெற்றுப்;பெட்டி பிச்சை வாங்கி வல்லரசாக இருப்பது இலங்கைதான். இந்த நிலை தொடராது.

இப்போது இலங்கையைக் குற்றவாளியாக்க குற்றங்களை அனுமதித்துள்ளது பெருச்சாளிப் பயங்கர வாதங்கள். பின் அதை ஊதிப் பெருப்பித்து அங்கே குண்டு பொழிவார்கள்.

  • தொடங்கியவர்

உவை பாருங்கோ எங்களை பயங்கரவாதப் பட்டியல்லை சிறீலாங்கா சேர்க்கச் சொன்னதற்கு செவி சாய்த்து பயங்கரவாதிகள் ஆக்கி சிங்களவனை மகிழ்வித்தவை. இப்பதான் வளர்த்தகடா மார்பில பாய்ஞ்சமாதிரி அவைக்கு இருக்கு.... இப்ப இவையை திருப்பி அனுப்பிய பின்தான் இவைக்கு அவமானம் என்றால் என்னவென்று புரியுது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.