Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு திரும்பிய ராஜபக்ச – நிவாரண நிதி தமிழ் மக்களைச் சேருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17/06/2009, 12:25 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

நாடு திரும்பிய ராஜபக்ச – நிவாரண நிதி தமிழ் மக்களைச் சேருமா?

சிறீலங்கா அரசு மியான்மாருடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளதாக, நாடு திரும்பியுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, தமது அதிபர் நாடு திரும்பியிருப்பதாக, அதிபரது ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், குறிப்பிட்ட நிதியுதவி இடம்பெயர்ந்த தமிழ் மக்களைச் சென்றடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், சுற்றுலா விசா நடைமுறை மாற்றங்கள், மற்றும் குறைந்த செலவுடனான வானூர்திச் சீட்டுக்கள் பற்றிய ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

உலக அரங்கில் மிகவும் கண்டனத்துக்குரிய படைத்துறை ஆட்சி நடைபெறும் மியான்மாருடன் சிறீலங்கா வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் அளவிற்கு சிறீலங்காவின் பொருண்மிய வீழ்ச்சி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த வங்கிக்கணக்கில் பணம் குவியுது. பயங்கரவாதம் என்ற போரில் பயங்கரவாதம் செய்து தமிழனில் ஒரு பகுதியை அழித்தாயிற்று. மிச்சம் மீதி இருப்பவர்களையும் அழிக்கப்பணம் வேண்டுமே என்று சொல்லி எவ்வளவு சேர்கக முடியுமோ சேகரித்து கொண்டு மாற வேண்டியது தான். ஒருபக்கம் சீனாவிற்கு விற்றாயிற்று. மறுபக்கம் இந்தியாவிற்கு ப+ச்சாண்டி. பாகிஸ்த்தானுக்கும் கொடுத்திருக்கு. இலங்கை அரசாங்கத்திற்கு பிரச்சனை கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழீழப்போராட்டத்தை உருவாக்கிய இந்தியர்கள் இன்று தங்களுடைய பிராந்தியம் தமிழர்களின் வலுவின்மையால் கைநழுவிவிடுமோ என்ற எண்ணத்தில் மீண்டும் தமிழர்களைப் போராட்டத்திறகு உருவாக்கி விடுவார்கள் என்ற எண்ணம் கொண்ட இலங்கை அரசாங்கம் தமிழர் பகுதி முதலீடுகளை இந்தியாவிற்கு ஒப்படைத்து தான் சீனாவுடன் உல்லாசம் கொண்டு இந்தியாவை அச்சுறுத்தல் நிலையில் வைத்திருக்க நல்லதொரு இராஜதந்திரம். இருந்தாலும் உலகையே தன் இராஜதந்திரத்தால் மழுங்கடித்தது இலங்கை அரசாங்கம். இதில் தோல்வியுற்றவர்கள் இந்தியரும், மேற்குலகங்களும் தான். ஆதிக்கப்போட்டியில் வென்றது சீனா. உயிர்ப்பலி கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால் தமிழர்கள் தோற்கவில்லை. அநீதயான போரில் அழிக்கப்பட்டார்கள். ஏனெனில் சர்வதேச போர்ச் சட்டங்களையும் மீறி இலங்கை அரசு தாக்குதல் செய்தபோது அதைத் தடுக்கவோ அல்லது கண்டனமோ செய்யவில்லை. ஏனெனில் இந்தச்சட்டம் அவர்கள் கைகளில் இருந்தது. புலிகள் மக்களைத் தடுத்து வைத்திருக்கின்றார்கள். இது குற்றம் என்று சொன்னவர்கள். வைத்தியசாலை, கோவில்கள், மற்றும் பொது இடங்களுக்கு குண்டு வீசுவது சர்வதேச சட்டவிதிப்படி குற்றமே. அதை அவர்கள் குற்றம் சாடவில்லை. இறுதிவரை தங்கியிருந்த மக்கள் சாவு வரினும் எதிரியிடம் போகமாட்டோம் என்கின்ற உறுதியுடன் இருந்துள்ளனர். என்பது வரலாற்றுச் சான்று. வடங்களுக்கு முரண்பட்டதை நிறுத்தாதவர்கள், எப்படி மக்கள் வெளியேறாதபோது புலிகள் மீது குற்றம் சுமத்தமுடியும்? வம்மாத்து உலகம். உலகம் தங்கள் கைக்குள் இயங்குகின்றது என்று எண்ணும் இந்த முட்டாள்கள். உலகைப்படைத்தவனை முட்டாள் ஆக்க யோசித்தால் விளைவு பாரதூரமாக இருக்கும். ஈராக்கின் மீது முட்டாள்தனமான போர் செய்து அழித்தார்கள். இன்று தங்களை காப்பாற்றமுடியாமல் திணறுகின்றார்கள். படைத்தவனின் தண்டனை எந்தரூபமாகவும் வரலாம். இந்தியாவில் காந்தி வெள்ளையனை வெளியேற்றினார். இன்று மீண்டும் வெள்ளை ஆட்சி செய்கின்றது. தர்மத்தை சூது வெல்லும். தர்மம் மறுபடியும் வெல்லும்.

மக்களை முட்டாள்கள் ஆக்கும் ஆட்சியே இன்று உலகில் நடைபெறுகின்றது. இது உலகம் அழிவின் விளிம்பில் நிற்கின்றது என்பதுதான் அர்த்தம். ஆக்கி வைத்த அணுகுண்டுகளை காலாவதி ஆவதற்கு முன் எறியத்தானே வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.