Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தடுக்கவில்லை‐ ஆளும் கட்சித் தலைவர் முரண்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தாம் தடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதனை தடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், அகதிகளை இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை எனவும், இந்தியா இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எத்தனை அகதிகளுக்கும் புகலிடம் வழங்கத் தயார் என கனடா அறிவித்துள்ளது. அகதி முகாம்களில் கனடா வீசா காரியாலத்தை அமைத்து மக்களுக்கு புகலிடம் வழங்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படைவீரர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா செய்திகளை வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சித் தலைவர் முரண்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும் ‐ ஜனாதிபதி :

தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டத்தை வழங்குதல் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது தனது பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய தெளிவான திட்டமும், மக்கள் ஆதரவும் இருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எவரும் அதைப் பற்றிய கவலைகொள்ளத் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல மக்களினதும் விருப்பு வெறுப்புக்களை கருத்திற் கொண்டு காத்திரமான தீர்வுத் திட்டத்தை தாம் முன்வைக்க உள்ளதாகவும், தமது நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்து வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், மக்கள் ஆணையே இறுதித் தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளது ஆலோசனையின்றி துரித கதியில் இராணுவ நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டதாகவும், அதேபோன்று சமாதான தீர்வுத் திட்டமும் வெளிநாடுகளது உதவியின்றி இலங்கைக்கு பொருத்தமான வகையில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம் - GTN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாட்டு ஜனாதிபதி என்று எங்குமே சொல்லவில்லையே :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.