Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி இலக்கு வைக்கப்பட்ட சிறுபான்மையினர்

Featured Replies

இலங்கையானது பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் பணியில் எதிர்க்கட்சிகள் குதித்துள்ளன.

குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வியை தழுவிய நிலையில் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பு

வெளியாகியுள்ளது.கடந்த புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடிய போதே எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பேச்சுகளை முன் னெடுப்பதற்கு கட்சியின் 5 எம்.பி. க்களை கொண்ட சிறப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இனநெருக்கடி, பொருளாதார சிக்கல் உள்ளிட்ட முக்கிய தேசிய பிரச்சினைகள் பற்றி ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கலந்து ரையாடலை மேற்கொண்டு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் மெகா கூட்ட ணியை அமைப்பதற்கான நடவடிக்கையில் இக்குழு ஈடுபடும்எனவும் தரிவிக்கப் பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகங்களி டையே ஓரளவு செல்வாக்கைப் பெற்றுள்ளதுடன், ஏனைய சிறுபான்மை கட்சித் தலைவர்க ளுடன் சமூக உறவைப் பேணும் எம்.பி. க்களே ஐ.தே.க. வின் இந்தக் குழுவில் அங்கம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத் தேர்தலாயினும் சரி, அல்லது ஜனாதிபதி தேர்தலாயினும் சரி அதனை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி தற்போதே தயாராகும் நிலையில், எதிர்க்கட்சிகள் அடுத்த இரு பிரதான தேர்தலிலும் சிறுபான்மை சமூகங்களையே நம்பியிருக்கும் போக்கு காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். தீர்மான சக்தி சிறுபான்மையினரே

இலங்கையில் கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற தேர்தல்களை நோக்குவோமாயின் அங்கு தீர்மான சக்திகளாக சிறுபான்மையின சமூகமும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செயும் கட்சிகளும் விளங்கியதை ஏற்றுக்கொள்ளலாம்.

பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடம் ஏறுவதற்கும், சந்திரிகா அம்மையார் ஜனாதிபதி ஆகியதற்கும் அன்று முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன முக்கிய பங்காற்றியிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்கவின் பதவிக்காலம் நிறைவுபெறும் வேளையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரிய ஆசன வித்தியாசம் காணப்படவில்லை.

இந்நிலையில் டீ.பி. விஜேதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு கெஞ்சியதை நாம் மறுக்க முடியாது.

அவ்வாறே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த போது ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி கனவு தகர்ந்து போனமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விரு சம்பவங்களும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவும், சிறுபான்மையினரின் ஆதரவும் எந்தளவு ஆட்சியாளரையும், ஆட்சியையும் தீர்மானிக்கின்றன என்பதை தெளிவுபடுத்தும் ஆதாரங்களாகும்.

எதிர்க் கட்சியினரின் உபாயம்

இதனால்தான் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சிறுபான்மை சமூகங்களைப் கவர்ந்திழுக்கும் வகையில் தற்போதிருந்தே தமது உபாயங்களை வகுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். எனினும் தற்போது அந்த மக்களில் பலருக்கு வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை யால் அவர்களின் வாக்குகளையும் கவனத்திற் கொண்டே எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் அமைகின்றன.

அடுத்து நடை பெறவுள்ள இரு தேர்தல்களிலும் நிச்சயமாக சிறு பான்மையினர் செல்வாக்குச் சக்திகளாக விளங்குவார்கள் என்பதாலும், சிங்கள கடும் போக்காளர்களின் வாக்குகள் தமக்கு கிடைப்பது அரிது என்பதாலும்தான் சிறுபான்மையினரை கவர்ந்திழுக்கும் கூற்றுகள் தற்போது வெளி யாகின்றன.

சிறுபான்மையின மக்களை மாத்திரமல்லாது சிறுபான்மை கட்சிகள் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அதிருப்தி கொண்டோர், சுதந்திரக் கட்சியிலிருந்து ஒதுங்கியோர் உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் எதிரணியில் இணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மங்கள சமரவீரவின் பங்களிப்பு

புதிய ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியை தம்பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்றுள்ள மங்கள சமரவீர அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக கட்சியொன்றை தம் பக்கம் இழுப்பதிலும் தீவிர முனைப்புக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தலைவர்களைக் காட்டிலும் மங்கள சமரவீரவுக்கு தமிழ் மக்கள் குறித்து அக்கறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியினர் பகிடி விடும் அளவுக்கு தமிழ் சமூகம் குறித்தான அவரின் கருத்துகள் தினமும் வெளிவருகின்றன.

உபாயங்கள் வகுப்பதில் சிறந்தவரென அவரது அரசியல் சகபாடிகளினால் வர்ணிக்கப்படும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர அதிகாரப் பகிர்வின் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருவதுடன், இனவாதிகளின் கூடாரமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இம்மாத ஆரம்பத்தில் இந்தியா சென்ற மங்கள சமரவீர மற்றும் திரான் அலெக்ஸ் அங்கு இந்திய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டதாகவும் செதிகள் வெளியாகியிருந்தன.

இந்தியாவின் ஆசீர்வாதம் உண்டா?

ரணில் விக்கிரமசிங்கவின் நோர்வே மற்றும் பிரித்தானிய விஜயத்தின் பின்னரும், மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் பின்னரும்தான் எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் மெகா கூட்டணி பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பேசப்பட்ட விடயங்கள் வெளியே வராதபோதிலும் எதிர்க்கட்சியில் மங்கள சமரவீரவின் முக்கிய அங்கத்துவத்தை இந்தியா புரிந்து வைத்துள்ளதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

எதிர்க்கட்சியினருக்கு இந்தியா மற்றும்சில வெளிநாடுகளின் ஆதரவு உள்ளது என்ற தோற்றப்பாடு எதிர்க்கட்சியினருக்கு சிறுபான்மையினரிடத்தில் ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், பெரும்பான்மை சிங்கள சமூகத்தினரிடையே அது ஒரு சந்தேகப் பார்வையை தோற்றுவிக்கும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ன செயப் போகிறது?

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோகணேசன் குறித்தும் இங்கு கேள்விகள் எழுகின்றன.

ஐ.தே.க. எனும் வாகனத்தில் ரணில் விக்கிரமசிங்க எனும் சாரதி இருக்கும் வரையில் அந்த வாகனத்தில் தாம் ஏறப்போவதில்லையென முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறியதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர்.

அண்மையில் நடந்துமுடிந்த சில மாகாணங்களுக்கான தேர்தல்களில் ஐ.தே.க. வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதன் முன்னைய பிரதிநிதித்துவங்களைக்கூட இழந்துள்ளது.

இந்தநிலையில் எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ்தொடர்ந்து இடம்பிடிக்குமா என்பது சந்தேகமே. முன்னைய காலங்களைப் போன்று அக்கட்சி தீர்மான சக்தியாக விளங்குவதற்கான வாப்புகளும் குறைவாகவே உள்ளமையால் உடனடியாக மெகா கூட்டணியில் ஒருமித்துவிடவும் சந்தர்ப்பம் இல்லை.

மனோ கணேசனைப் பொறுத்தவரையில் ஏனைய தமிழ் கட்சிகளைப் பார்க்கிலும் ஓரளவு துணிச்சலாக கருத்துக்களை வெளியிடுபவர் மற்றும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இசைவாக்கம் பெற்றவர் என்பதாலும் அவர் தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இடம்பெற வாப்புகள் உண்டு. ஜே.வி.பி. யின் பேரம்பேசும் சக்தி பாதிப்பு

இந்நிலையில் ஜே.வி.பி. ரணில்மங்கள மெகா எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பிடிக்குமா என்பது மிகுந்த ஆர்வத்திற்குரியது. கூட்டணி குறித்து பேச்சு நடத்த ஐ.தே.க. அமைத்துள்ள குழுவில் இடம்பெறும் அதன் எம்.பி. க்களில் சிலர் ஜே.வி. பி.யுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுபவர்கள். இது அக்கட்சியை மெகா எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற சிலவேளைகளில் உதவலாம்.

விமல் வீரவன்ஸவின் வெளியேற்றமும், யுத்த வெற்றியினால் சிங்கள கடும் போக்காளர்கள் மஹிந்த ராஜபக்ஷ பக்கம் திரும்பியமையும் அக்கட்சியின் பேரம்பேசும் சக்தியை முற்றாக பாதித்துள்ளது.

இந்நிலையில் ஜே.வி.பி. தமிழ் மக்கள் குறித்து அண்மைய நாட்களில் வெளியிட்ட கருத்துகள் அரசியல் ஆவாளர்களின் அவதானத்தை ஈர்ப்பதாக அமைகிறது. அவர்களுக்கும் தமிழ் மக்கள் மீது அனுதாபம் வந்துவிட்டதோ என்று சிந்திக்கத் தோன்றும் அளவுக்கு அவர்களின் கருத்துகள் வெளியாகின்றன.

எது எப்படியோ இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் ஐ.தே.க. வின் செயற்குழு நியமித்துள்ள விசேட குழு இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களிலும் பொது இணக்கப்பாடு கண்டு, அதன் அடிப்படையில் மெகா கூட்டணி அமைக்க விரும்புவதாகவே கூறப்படுகிறது.

இந்தநிலையில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு என்ற விடயத்தில் ஜே.வி.பி. இந்த மெகா கூட்டணியுடன் உடன்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் இந்த மெகா கூட்டணியின் செயற்பாடுகளும் அரசியல் அரங்கில் ஆர்வத்திற்குரிய விடயங்களாகியுள்ளன.

அத்துடன் சிறுபான்மையினரை கவருவதற்காக எதிர்க்கட்சி மெகா கூட்டணி வெளியிடும் அரசியல் தீர்வு யோசனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுத் திட்டங்கள் எவ்வாறு அமையுமென்பதிலும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதற்கு அடுத்துவரும் வாரங்கள் அல்லது மாதங்கள் விடையைக் கொண்டு வரலாம்.

சிறுபான்மை சமூகங்களினை இலக்காக கொண்டு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் மெகா எதிர்க்கட்சி கூட்டணி பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செயும் வகையில் சிறந்த தீர்வுத் திட்டங்களை முன்வைக்குமாயின் அது நிச்சயம் சிறுபான்மையினரின் ஆதரவைப்பெறும்.

இல்லையேல் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை பெறுவதை மாத்திரம் அடிப்படையாக கொண்டு அது கூட்டணி அமைக்குமாயின், அல்லது சிறுபான்மையினர் தரப்பு ஊடகங்களில் இடம்பிடிப்பதற்காக பரபரப்பு தகவல்களை வெளியிடுவார்களாயின் அது மீண்டும் மீண்டும் சிறுபான்மை சமூகங்களை ஏமாற்றுவதாகவே அமையும். சம்பந்தப்பட்டவர்கள் இதனை புரிந்துகொண்டால் சரி.

சிறுபான்மை கட்சிகளின் கவனத்திற்கு

யுத்த வெற்றியையடுத்து உருவாகியுள்ள தற்போதைய சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள்தமது பாதுகாப்பு குறித்தும் உரிமைகள் குறித்தும் அரசியல் அபிலாசை குறித்தும் அக்கறை செலுத்துவது இயல்பானதே. இந்த யதார்த்தத்தை சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் சரிவர புரிந்து கொள்வது மிக அவசியமானது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி மெகா கூட்டணி தயரிக்கவுள்ள இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனை சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகளை ஓரளவேனும் பூர்த்திசெயும் வகையில் அமையத்தக்கதாக அழுத்தங்களைப் பிரயோகிப்பது தற்போதும் எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோரை சார்ந்துள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

http://www.appaa.com/index.php?option=com_...7&Itemid=54

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.