Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தின் அடித்தளம் காக்கப்படல் வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பேட்டிகண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதியமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல.

நன்கு திட்டமிடப்பட்டு கருணாநிதியின் அறிக்கையோடும் ப.கிருஷ்ணாவின் அறிக்கையோடும் சேர்த்து ஒரே நேரத்தில்றோவினால் இயக்கப்பட்டுத் தமிழீழத் தேசியத்திற்கும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சாவு மணியாகும். கொழும்பு சென்னை டெல்லி அச்சில் செயற்படுத்தப்பட்ட ஒரு கூட்டுச் சதியே இவ் அறிக்கையும், பேட்டியும்.

பாசிஸ்டுகளினதும், ஸ்ராலினிஸ்டுகளினதும் கோட்பாடுகளைப் பின்பற்றி, போர்க் குற்றவாளிகளைக் காத்து நின்று, போரிலே தோல்வியடைந்த மக்களை மேலும் அழிவிற்குள்ளாக்கி, அவர்கள் மீது சாத்தியமற்ற தீர்வுகளைத் திணித்து, அந்த மக்களை மேலும் தடுப்பு முகாம்களிலேயே அடைத்து வைத்து ஒரு இனத்தின் போராட்டக் குணமுள்ள ஒரு பகுதியையே தொடர் அழிவிற்குள்ளாக்கும் ஒரு இனப்படுகொலைக் கட்டமைப்பையே சிறீலங்காவின் இந்தக் கூட்டுச் சதியாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இன அழிப்பு வழிமுறைகளில் இன்று இராஜபக்­வே முன்னணி வகிக்கின்றார்.

தமிழருக்கு எந்தத் தீர்ப்பும் தர விரும்பாது தனது தேர்தலைக் குறிவைத்து சிங்களவர் மனங்குளிரத் தமிழர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்து அழித்தொழிக்க நினைக்கிறார் மகிந்தர். நாட்டில் இராணுவத்தை மேலும் பெருக்கித் தனது மகிந்த சிந்தனைத் தீர்வை நிலைநாட்ட முதலீடு செய்வதற்குஉலகையும் துணைக்கு அழைக்கின்றார். கருணாநிதி தமிழீழத்தை முற்றாகப் புறக்கணித்து உரிமைகளற்ற மாநில சுயாட்சி முறையைப் பின்பற்றும்படி குரல் எழுப்பி சிங்களத்திற்கு ஒத்தடம் தடவுகின்றார். தமிழீழத் தேசியப் போராட்டத்தை ஒரு சிறுபான்மையினரின் கிளர்ச்சியாகப் பாவித்து இலங்கைத் தீவில் "பயங்கரவாதம்' ஒழிக்கப்பட்டதைப் பாராட்டி, 13 ஆவது சட்டத்தை அமுலாக்குவதில் மட்டுமே ஆர்வம்காட்டிச் சென்ற வியாழனன்று பாராளுமன்றத்தில் பேசிய ப.கிருஷ்ணாவும் சிங்களத்திற்கு சாமரம் வீசவே எத்தனிக்கின்றார்.

கொழும்பும், புதுடில்லியும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமானது. இவர்கள் கூறிக்கொள்ளும் பயங்கரவாதத்தின் முற்றுப்புள்ளிக்குப் பின்னரும் கொழும்பும், டெல்லியும் கூட்டாக ஒரு புதியவகையான இன அழிப்புக்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இது தமிழீழம் என்ற எம் தாயகத்தையே இல்லாதொழிப்பதற்காகவும், சிறீலங்கா மீதான தனது பிராந்திய புவியியல் இலாபங்களிற்கு அப்பால் இந்தியா என்றுமே தமிழர் நலனில் அக்கறை காட்டவில்லை. இதற்காகவே கொழும்பில் இன அழிப்பு அட்டவணையை இந்தியா நிறைவேற்றுகின்றது. ஈழத் தமிழர் என்றுமே இந்தியாவை தமது விடுதலையை வழங்குவோராகவே எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்திய அரசு தமிழர் நலனில் எந்த அக்கறையையும் காட்டாது தனது சுய நலன்களிற்காகத் தமிழர்களை பலியிடவே விரும்பியுள்ளது. இதற்குத் துணைபோகும் தமிழக அரசு தமிழர்களால் என்றுமே மன்னிக்கப்படாததாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மாபெரும் இனவழிப்புப் போரையோ அல்லது கொழும்பையோ போர்க்குற்றவாளிகளாகத் தட்டிக்கேட்க எந்த நாட்டிற்கும் துணிவற்றுப்போய்விட்டது. இவர்கள் தம்மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றுபோர்வையைப் போர்த்திக்கொண்டு உண்மையில் முன்னால் ஒளிந்துகொள்கின்றனர். இவர்கள் போர்த்திக்கொண்ட பயங்கரவாதம் இன்று இவர்கள் கூறுவதுபோல் அழிக்கப்பட்டுவிட்டதாயின் ஈழத் தமிழரின் சட்டபூர்வமான சுயநிர்ணயத்திற்கான தேசிய விடுதலையையும், அதன் நியாயத்தையும் ஏற்றுக்கொள்வதில் இருந்து இவர்களை இன்னும் என்ன தடுக்கின்றது?

இந்தப்போர் விடுதலைப் புலிகளிற்கு எதிரானது அல்ல, ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதே. இலங்கைத் தீவின் புவியியல் கேந்திரப் புள்ளியில் கண் வைத்திருக்கும் புவிசார் அரசியல் சக்திகளிற்கோ அல்லது சிறீலங்காவிலும் அதன் சுற்றுச் சூழலிலும் தனது பாதுகாப்பை உறுதிசெய்ய நினைக்கும் இந்தியாவிற்கோ ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரானது எந்தவிதப் பயனுமற்றது.

இந்தப் போரை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும், இந்திய ‡சிறீலங்கா அரசுகள் நடாத்தும் போரிற்கும், தமிழீழம் என்ற கோரிக்கையை நசுக்குவதற்கும், இவர்கள் மிகவும் பொருத்தமானவராகத் தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடியவருமாகக் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்றைய நிலையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் குரலானது தமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தி தமது சுயநிர்ணய உரிமையையும், தமிழீழத் தேசிய விடுதலையையும் உலகிற்கு உரக்கச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று இந்தியாவிற்கு நேரெதிரான நிலைப்பாட்டைக் காட்ட முயலும் மேலைத் தேசங்களும், ஒரு பக்கத்தில் மனித உரிமைகள் பற்றியும், போர்க் குற்றங்கள் பற்றியும் வாய் கிழியப் பேசிக்கொண்டு தமது சொந்த நலன்களிற்காக மறுபக்கத்தில் சிறீலங்காவைத் தூக்கி நிறுத்த முயன்றாலும், போர் முடிவடைந்ததன் பின்னாலும் கூட ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காமலும், தமிழீழத் தேசியப் போராட்டத்தைப் புறுந்தள்ளியுமே விடுகின்றனர். எமக்கு அரசியல் தீர்வை அடக்கு முறை அரசாட்சி செய்யும் அல்லது மகிந்த பார்வைக்கு நிதியளிக்கும் ஜப்பானோ தந்துவிடப்போவதில்லை. இந்த நாடுகள் எல்லாம் போரில் தோற்ற ஜேர்மனின் பின்னான அல்லது ஜப்பானின் பின்னான "பொருளாராத அற்புதங்களை' செய்கிறோம் என்று மூக்கை நுழைத்ததுபோல் எம்மிடமும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நில ஆக்கிரமிப்புப் போரையும் நடத்தவில்லை, இரண்டு அணுகுண்டுகளிற்குப் பிறகு மிக்காடோ அரசுபோல் சரணடையவுமில்லை.

எமது போரானது மதிப்பிற்குரிய ஒரு இனத்தின் மூன்று தசாப்தத்திற்கும் மேலான ஒரு விடுதலைப்போர். இதில் நாம் பல அணுகுண்டுகளைப் பார்த்துவிட்டோம். பல இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். இவை கடந்தும் சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த எதிர்ப்புப் பலத்தையும் தாண்டி முன் எப்போதும் இல்லாதவாறு எமது போராட்டம் இன்று மிகவும் வலுப்பெற்றுள்ளது. எதிரி பலம், எதிரி வளம் அதிகரிக்க அதிகரிக்க எமது போராட்டமானது உரம் பெறும். இந்த அளவிற்கு எமது போராட்டம் வலுப்பெற்று வளர்வதற்கு ஒருங்கிணைந்த பலத்தோடு எமை எதிர்த்த சர்வதேச வல்லரசுகளிற்கு நன்றி.

எமது போர் சரணடைவில் முடிவடைந்துவிடவில்லை. தேசியத் தலைவர் கட்டியயழுப்பி, அதன் அத்தனை கட்டமைப்புக்களையும் உருவாக்கி, உலகை வியக்க வைத்த ஒரு சுதந்திரத் தமிழீழ அரசு என்றுமே சரணடைந்து விடவில்லை. இது தனது ஈழத் தமிழர்களின் சுதந்திர வேட்கையையும், விடுதலைப் போரையும் என்றுமே, எவரிடமுமே சரணடைய வைத்ததில்லை. இதை மனதிற் கொண்டு எம் போராட்டம் தொடரப்படல் வேண்டும்.

கொழும்பின் நிவாரணம், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழீழத் தேசியத்தையே தற்கொலை முயற்சிக்குள்ளாக்கும் நிலையையே கொண்டுள்ளது. இந்த நிலையிலே நாம் நமது விடுதலைப்போரை உரமேற்றி தமிழீழத் தேசியத்தையும், ஈழத் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் ஆயுதமாகக் கைகளில் ஏந்திப் போராட வேண்டும். எமது உச்ச பலத்தைக் காட்டவேண்டும். நாம் இரண்டே இரண்டு பிரிவினர்தான் இப் போராட்டக் களத்தில் உள்ளோம். ஒன்று தமிழீழத் தேசியத்தை நசுக்கி ஒடுக்கும் பேரினவாதமும், அதன் கூட்டாளிகள், எம்மினத் துரோகிகள் என்கின்ற எதிரி அணி. மற்றொன்று தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தக்கவைத்து அதன் அடித்தளத்தைத் தக்கவைத்து தமிழீழ விடுதலையைப் பெறும்வரை ஓயாது போராடும் தமிழர் கூட்டம். இதைத் தவிர எந்தப் பிரிவினையும் புதிய பிரிவுகளும் எமக்குத் தேவையில்லை. காரணம் எமது போராட்ட அடித்தளம் என்றோ நிறுவப்பட்டுவிட்டது. அந்த அடித்தளம் மீதான போராட்ட வலுவிற்கு உரம் சேர்ப்பதுதான் எம் கடமை. அந்தத் தலைமையே, அந்தக் கட்டமைப்பே எமது அடித்தளம். அடித்தளம் இழக்கப்பட்டால் போராட்ட அடிப்படை இழக்கப்படும்.

எமது போராட்டம் இங்கு புலத்தில் ஜனநாயக ரீதியாக மாற்றம் பெறலாம். ஆனாலும் களத்தில் அதன் அடிப்படை அப்படியே பேணப்படும். புலத்தில் அரசுகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள், யாருக்காகப் பேசுகிறார்களோ அந்த மக்களின் இதயங்களை வென்றவர்களாக இருத்தல் வேண்டும். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தம்மைத் தாமே பிரதிநிதியாக்கி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.