Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெர்சி மிஷன்-கொலரடா கப்பல் நிவாரணப் பொருட்களுன் நடுக்கடலில் தத்தளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெர்சி மிஷன்-கொலரடா கப்பல் நிவாரணப் பொருட்களுன் நடுக்கடலில் தத்தளிப்பு

on 28-07-2009 05:17

Published in : செய்திகள், இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற கொலராடோ கப்பல் தத்தளிக்கிறது - இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள், கொலராடோ என்ற சரக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க கடந்த 7ம் தேதி இலங்கைக்கு அனுப்பினர். இந்த கப்பல் 9ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்ற பின்னரும், நிவாரணப் பொருட் களை வாங்க செஞ்சிலுவை சங்கத்தினர் இதுவரை வரவில்லை. இத னால் கொழும்பு துறைமுகத்தில் நிவாரணப் பொருட்கள் கடந்த 19 நாட்களாக கேட்பாரற்று இருக்கின்றன.

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள மனிதம் மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குனர் மற்றும் லண்டன் மெர்ஸி மிஷனின் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறியதாவது:

நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத் தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து லண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து கிளம்பி 70 நாட்களுக்கு மேல் ஆகிறது. 19 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் இருக்கிறது. முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் முயற்சியில் அனுப்பப்பட்ட பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் உள்ளன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹாப்பேஜ் லாய்ட் கன்டெய்னர் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘எங்கள் நிறுவன கன்டெய்னரில்தான் நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கை சென்றன. நிவாரணப் பொருட்களை எடுக்க அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்தின் யாரும் வராததால் எங்கள் கன்டெய்னர்களும் அங்கேயே உள்ளன. கொழும்பு துறைமுகம் விதிமுறைகளின்படி 21 நாட்களுக்கு மேலானால், அவர்கள் அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக வணங்காமண் கப்பல் ஏஜென்ட், டெல்லியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மனிதம் மனித உரிமை அமைப்பு, லண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளோம்’ என்றார்.

அதிகாலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.