Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்புவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பன்மைத்துவத்தை ஏற்ப்படுத்தி ஜனநாயகத்தை கட்டி எழுப்பி தமிழ் மக்களின் இழந்த வாழ்வை மீட்க அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் வேண்டி நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு மேல் அனைத்து போராட்ட வழிமுறைகளிலும் பேராடிய ஈழத்தமிழ் மக்கள் இன்று நிலை மாறும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள். தமிழ் மக்களின் கடந்த கால போராட்ட அனுபவங்களை பாடமாகக் கொண்டு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியதான புதிய அரசியல் வழி முறைகளை மேற் கொள்ள வேண்டி அவசியத்தில் தமி;ழ சமூகம் இன்றுள்ளது.

இதில் முதலாவதாக தகவல் யுகத்தில் எல்லா வகையான தொடர்புர்;களையும் துண்டிக்கப்பட்டிருக்கும் வன்னி அகதி மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவேண்டும்., அடுத்து முஸ்லீம் மக்கள் உள்ளடங்களாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளிறே;றப்பட்ட சகல மக்களும் மீள் குடியேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னிருத்தியும் தமிழ் மக்களினுடைய கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு மனித உரிமைகள் என்ற அனைத்து வகையான உரிமைகளையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை எற்படுத்த வேண்டிய தேவை இன்றிருக்கிறது.

இழக்க முடியாதவற்றை இழந்து சிந்த முடியாதளவு குருதியை சிந்தி உலகத்தி;ன் இரத்த சாட்சியங்களாக இருக்கின்ற எமது வன்னி மக்களது பாதுகாப்பு நலன் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுமாறு அனைத்து தமிழ் கட்சிகளையும் கோருகிறோம்.

தமிழ் சூழலில் பன்மைத்துவத்தiயும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பம் தேவைக்கு பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் யதார்த்த பூர்வமாகவும் மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்., அவ்வாறு தீர்வு காண்போரையே மக்கள் தமது அரசியல் தெரிவாக எடுத்துக்கௌ;ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். வன்னி அகதி மக்கள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் தமிழ் கட்சிகள் மனந்திறந்து பேசவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் எங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழக்க தயாராக இருக்கின்றோம்.

எங்களிடமிருந்த வன்முறை அரசியலாலும், விட்டக் கொப்பின்மையினாலும், முரண்பாடுகளாலும் எமது மக்களே அனுபவிக்க முடியாதளவு துயரங்களை அனுபவித்து இன்று முட்கம்பிச் சிறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது மக்களை கவனிக்காது அவர்களை பார்வையிடாது மீட்பதற்கு எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்காது வாக்குகளை கேட்க வருகின்ற தமிழ் கட்சிகள்மீது எமக்கு கடுமையான விமர்னசம் உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளமன்ற உறுப்பினர்கள் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது எமக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது.

ஓட்டுமொத்த தமிழ் மக்களினதும் இன்றைய உடனடிப் பிரச்சனையாக இருப்பது வன்னி மக்கள்தான். அதுவே தாயகத்து மக்களினதும், தமிழக மக்களினதும், புலம்பெயர் மக்களினதும் நெருக்கடி நிலையாக உள்ளது. எனவே முதலில் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினையை தீர்த்து அவர்களை தடுப்பு முகாங்களிலிருந்து விடுவித்து மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்த வேண்டிய அவசியம் உடனடித் தேவையாக உள்ளதை தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் இன்றைய மனிதாபிமான பிரச்சினையை அவலத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அரசியல் தீர்வை ஏற்படுத்த வலியுறுத்துங்கள். சுயநலமான அரசியல் நோக்கங்களுக்காக வன்னி மக்கைளை பயன்படுத்துவது கண்டு சில தமிழ் கட்சிகள்மீது அதிருப்தி அடைகிறோம்.

வன்னி அகதி மக்களின் விமோசனத்திற்காக நடைமுறையில் இறங்குபவர்களை வன்னி மக்களே தமது பிரதிநியாக தெரிவு செய்வார்கள். அவர்களையே புலம்பெயர் மக்களும் தமிழகத்து மக்களும் நிரதிநிதியாக ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் மக்கள் சிந்திய குருதி வீண்போகாத வகையிலும் அவர்களுக்கு நல்ல வாழ்வுச் சூழலை கட்டி எழுப்ப நேர்மையான நடவடிக்கையில் இறங்குங்கள். தமிழ் மக்களை இனியும் தோற்கடிக்காமல் ஏகபிரதிநிதித்துவ வாத்தின் வன்முறை அரசியலி;ன் அழிவில் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிற, உலகத்தின் பொதுப்போக்கான பன்மைத்தவ அரசியல் சூழலையும் மக்கள் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்ப மனதாரச் செயற்படுங்கள். அனைவரும் ஒன்றினைந்து வன்னி மக்களின் நலன் சார்ந்த விடயங்களை அசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூறுவோம்.

மக்கள் நலன் தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசுவதோடு நேர்மையாக, மக்கள் நலனுக்காக அர்பணித்து செயற்படுகிற அரசியல் முனைப்பக்களை நாம் வரவேற்பதுடன் அதன் பின் நின்று முழுமையான எங்கள் ஒத்துழைப்பை தருவதற்கு தயாரக உள்ளோம் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாட்டை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நன்றி.

இவ்வண்ணம்,

பா.பிரதீபன் அ.பிரசன்னா

………………………….. ……………………….

செயலாளர் தலைவர்

28.07.2009 இரவு8.00

அடுத்து முஸ்லீம் மக்கள் உள்ளடங்களாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளிறே;றப்பட்ட சகல மக்களும்

முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்துவதிலதான் நம்ம ஆட்கள் முழுமூச்சாக இருக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.