Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தும் சிறுவர்களது உரிமைகள் பேணப்படவில்லை – சிறுவர் உரிமைகள் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் முடிந்தும் சிறுவர்களது உரிமைகள் பேணப்படவில்லை – சிறுவர் உரிமைகள் அமைப்பு

இலங்கையில் போர் முடிந்துள்ளபோதும் சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்வதால் அவர்களின் உரிமைகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளனவென்று அமெரிக்காவில் இயங்கும் சிறுவர் உரிமைகள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் சிறுவர்களை படைகளில் இணைப்பதைத் தடுக்கும் சிறுவர் உரிமைகள் அமைப்பானது, வவுனியா தடுப்பு முகாம்களில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தடுப்பு முகாம்களிலுள்ள சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டு அச்சிறுவர்களைக் காக்கும் நடவடிக்கைகளை உடனும் இலங்கை அரசு செயற்படுத்தவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களை அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரித்துத் தனியாக்குவதும், தனியாக்கப்பட்ட சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா, புனர்வாழ்வு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்களா அல்லது காணாமல் போய் விட்டார்களா என்று கூட பெறோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்று அந்த அமைப்பின் இயக்குநர் விக்டோரியா போப்ஸ் ஆதம் கூறியுள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான இலகுவான வழி, சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை முகாம்களுக்குள் தடையின்றி அனுமதிப்பதும், அங்குள்ள அனைவரதும் விவரங்களைப் பதிவு செய்து வைத்திருப்பதுமாகும் எனக் கூறிய அவர் சிறுவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்களோ அங்கு அவர்களின் பெற்றோர்கள் சென்றுவர அனுமதியளிப்பது மிக முக்கியம் எனவும் கூறினார்.

“ராணுவத்துடன் இணைந்துள்ள ஆயுத தாரிகள் இலகுவாக முகாம்களுக்குள் சென்று வர அனுமதிக்கப்படுவதாகவும் பணத்துக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்வதாகவும் அறிக்கைகள் கிடைக்கின்றன. ஈ.பி.டி.பி யினரும், தமிழ் மக்கள் விடுதலை முன்னணியினரும் (TMVP) தமது ஆயுதக்குழுவில் இணையுமாறு சிறுவர்களை வற்புறுத்துவதாகவும் உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த குழுக்கள் தான் தற்போது வவுனியா வர்த்தகர்களிடம் பணம் சேகரிக்கிறார்கள். இதேவேளை மட்டக்களப்பிலும் TMVP முன்னாள் தலைவர் கருணா இவ்வாறான ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சில அறிக்கைகள் கூறுகின்றன” என்று விக்டோரியா போப்ஸ் ஆதம்ஸ் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் ஆதரவில் இயங்குகின்ற இந்த ஆயுதக்குழுக்கள் முகாம்களுக்கும், சரணடைந்தவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கும் சென்று முன்னர் புலிகளில் இணைந்திருந்தவர்களைக் காட்டிக் கொடுத்து வருவதாகக் கூறும் இவர், அரசு கண்டிப்பாக இந்த ஆயுதக்குழுக்களின் அனுமதியைத் தடுத்து நிறுத்தி அவர்களது கடத்தல், சிறுவர் ஆட்சேர்ப்பு போன்றவற்றுக்கு எதிரான புலன் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். சிறுவர்களை இந்த ஆயுதக்குழுக்கள் தம்முடன் இணைத்துவருவதை விசாரிக்கவென, அரசு குழுவொன்றை 2007 இல் அமைத்திருந்தும் கூட கிட்டத்தட்ட 23 மாதங்களாகிய பின்னரும் கூட அந்த விசாரணை முடிக்கப்படவில்லை. அதில் முக்கியமான குற்றவாளியான கருணா, இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார் எனக் கூறுகிறார் விக்டோரியா போப்ஸ் ஆதம்ஸ்.

இருபத்து ஐந்து வருட போரானது நிறைவுக்கு வந்துள்ள இச்சந்தப்பத்தில், முன்னாள் புலிச் சிறுவர்களை விடுதலை செய்து, போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கும் உதவி செய்ய மிகச்சிறந்த தருணம் இதுவே. இந்த சந்தர்ப்பத்தை நன்மை பயக்கக்கூடிய விதமாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்த இலங்கை அதிகார சபைகளும், சர்வதேச சமூகங்களும் இனைந்து செயற்படும் என்று தொடர்ந்து கூறியுள்ளார் விக்டோரியா போப்ஸ் ஆதம்ஸ்.

http://www.meenagam.org/?p=6638

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.