Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையும் இழுத்தடிப்புக்களும்--வ.திருநாவுக்கரசு

Featured Replies

தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு காலா காலத்தில் ஒரு நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் காணப்பட்டிருந்தால் தமிழர் தரப்பிலான ஆயுதப் போராட்டமோ தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசவமோ 25 வருடகால யுத்தமோ இடம்பெற்றிருக்க முடியாது.

தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்துவதற்கோ பல இலட்சக்கணக்கான தமிழர் இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழவேண்டிய நிலைமை

ஏற்பட்டிருக்காது. ஆளும் வர்க்கத்தினர் இவற்றையெல்லாம் அறிவுபூர்வமா,அரசியல் முதிர்ச்சி கொண்டு அலசுவதை விடுத்துத் தாமே உருவாக்கிவிட்டதாகிய விடுதலைப்புலிகள் மீது பழிபோடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. உலகத்திலேயே மிகக் கொடூரமான அந்த இயக்கம் தான் நாடு எதிர்நோக்கிவந்த பாரிய பிரச்சினை என்பதால் அது 25 வருடங்களின் பின்னர் சென்ற மே மாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட வெற்றிக் களிப்பே இன்றும் மேலோங்கி நிற்கின்றது.

நீதி அமைச்சர் மிலிந்த மொறகொடவின் முன்முயற்சி காரணமாக முன்பு போர்முனையிலிருந்து தப்பியோடியதற்காக கைது செய்து சிறைவைக்கப்பட்டிருந்த 1883 ஆயுதப்படையினர் விடுதலை செய்யப்பட்டுமுள்ளனர். அது பெரிதும் அலட்டப்பட வேண்டிய பிரச்சினையல்ல.

சர்வகட்சிக் குழுவின் அறிக்கை

மறுபுறத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் (IDPS) என அடையாளப்படுத்தி வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீள் குடியேற்றம் செய்யும் விடயத்தில் என்றாலும் சரி அடிப்படை விடயமாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியில் என்றாலும் சரி இழுத்தடிப்பு மனோபாவத்தையே காணமுடிகிறது. முதலில் அரசியல் தீர்வு விடயத்தினை எடுத்துக் கொண்டால் 3 வருடகாலத்திற்கு முன்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதாகிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு (APRC) இவ்வாரம் தமது அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் போவதாக குழுவின் தலைவர் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அறிவித்துள்ளார். தமது அறிக்கையானது விரைவில் வெளியிடப்படும் என்ற செய்தியோடு அமைச்சர் வித்தாரண சென்ற வாரம் ஆங்கில இதழொன்றுக்கு (டெய்லி மிரர் 22.07.09) வழங்கியிருந்த செவ்வியை சற்று நோக்குவோம். அதாவது தேசிய இனப்பிரச்சினை கடந்த ஆறு தசாப்தங்களாகப் பதிவு செய்துள்ள பரிமாணங்கள் உள்ளிட்ட வரலாற்றினைச் சுருக்கமாகவும் பெரும்பாலும் ஒளிவுமறைவு இன்றியும் கூறியுள்ளார். அங்கே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

"1977 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் அவர்களின் சொத்துகள் அழிக்கப்பட்டும் வந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பின் சிங்கள மக்களின் மனக்குறையை நீக்குவதற்காக 1956 இல் சிங்கள மொழியானது அரச கருமமொழியாக்கப்பட்டதாயினும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.