Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு குட்டி யானைகளும் வவுனியா முகாம் மக்களும்

Featured Replies

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க டேலவின் ஏற்பாட்டில் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து பால் குடிமறவாத இரு கொம்பன் யானைக் குட்டிகள் கடந்த சனிக்கிழமை அவற்றின் தாய் யானைகளிடம் இருந்து பலவந்தமாக

பிரிக்கப்பட்டு கண்டிக்குக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கிறது. தலதாமாளிகையின் மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறுபராயத்தில் இருந்தே பயிற்சியளித்து

வளர்ப்பதற்காக இரு குட்டிகளையும் சரணாலயத்தில் இருந்து கொண்டுவந்ததாக தியவதன நிலமே தரப்பில் கூறப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே குட்டிகளை சரணாலயத்தில் இருந்து வெளியே கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டு ஒத்துழைத்ததாகவும் தெரியவருகிறது.

மூன்று வயதைக் கூடதாண்டாத யானைக்குட்டிகளை தாய் யானைகளிடம் இருந்து அவற்றின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தெடுத்த செயல் கொடூரமானது என்று மிருக உரிமைகள் ஆர்வலர்களினாலும் அமைப்புகளினாலும் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குட்டிகளுக்கு பாலூட்டுவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டதால் இரு தாய் யானைகளினதும் முலைகளில் பால் கட்டியாகி அவற்றுக்கு பாரதூரமான சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பின்னவலவில் உள்ள பராமரிப்பு உத்தியோகத்தர்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியானதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

தாய்மாரின் அரவணைப்பு இல்லாமல் கண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குட்டிகளை பின்னவல சரணாலயத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் யானைகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்குமாறு கேட்டிருக்கும் மிருக உரிமைகள் அமைப்புகள், உலகிற்கு அன்பையும் கருணையையும் போதித்த புத்தபெருமானின் கோட்பாடுகளை பின்பற்றும் நிறுவனங்களின் பெயரில் இத்தகைய மிருகவதையைச் செய்யலாமா என்று பௌத்த மத பீடங்களிடம் கேள்வியெழுப்பியிருக்கின்றன.

யானைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை குறித்து கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் சில தினங்களுக்குள்ளாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஆசிரிய தலையங்கங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. யானைக்குட்டிகளைக் கடத்தியதன் மூலமாக பௌத்த மதத்தை நிந்தனை செய்தமைக்காக தியவதன நிலமேயும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏனையோரும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று தேசிய பிக்கு முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. பின்னவலவில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட பின்னர் யானைக் குட்டிகள் நன்றாகப் பராமரிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கும் இளம் விலங்கியலாளர்கள் சங்கம் ஒரு யானைக்குட்டி தாக்கப்பட்டதைக் காண்பிக்கும் புகைப்படம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஒரு யானைக்குட்டியின் தந்தம் முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

யானைக் குட்டிகள் தாய்மாரிடமிருந்து பிரிக்கப்பட்ட செயலை "உயிரியல்களவு' என்று வர்ணித்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை மறுதலித்து அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையும் கண்டனத்துக்குள்ளாகியிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.