Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து, அமைச்சர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்கிறது - ரணில் விக்ரமசிங்க‏

Featured Replies

வரவு செலவுத் திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவெனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஷஷவரவு செலவுத் திட்டத்தின் மூலமாக அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு 2008ம் ஆண்டு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம்

கவனம் செலுத்தவில்லை.

2009ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலாவது சம்பளம் அதிகரிக்கப்படுமென்று நினைத்து

7,500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியிருந்தோம். எனினும், சம்பள முன்மொழிவே

முன்வைக்கபடவில்லை. இந்த நிலையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் 2010ம் ஆண்டு வரவு

செலவுத் திட்டத்தில் எவ்விதமான யோசனைகளும் முன்வைப்பதற்கு கலந்துரையாடப்படவில்லை

என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என்ற விசேட சுற்றறிக்கையொன்று

சகல அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக

அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். யுத்தத்தைக் காரணம் காட்டிய அரசாங்கம், பிரபாகரன்

கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொருளாதார யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக ஜனாதிபதி

தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அமைச்சர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு ஒரு இலட்சம்

ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 150 சதவீத அதிகரிப்பாகும்.

தற்போது இந்த அரசாங்கத்தில் 110 அமைச்சர்கள் வரையுள்ளனர். இந்த நிலையில்,

அமைச்சரவையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அமைச்சரவையை 30

முதல் 35ஆக குறைக்கவேண்டும். அரசாங்கத்தில் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரையிலான

சகல மட்டங்களிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தின் நிதியே

பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்ற நிலையில், அரசாங்க

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? இவை தொடர்பில்

பேசவிடாது ஊடக அடக்குமுறையும் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் எதிராக வேலை

செய்யும் சகல தரப்பினரையும் இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் செலவழிக்கும் பணமும் அமைச்சரவையின் ஊழல்

மோசடிகளும் திறைசேரியின் மீதே திணிக்கப்படுகின்றன.

http://parantan.com/pranthannews/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.