Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஜி.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை வழங்குவதற்கான நிபந்தனைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன: சிறிலங்கா தெரிவிப்பு

Featured Replies

சிறிலங்காவுக்கான 'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்ட அமைச்சரவைக் குழு குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

இந்த உயர் மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தனது இறுதி அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்ததாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

'ஜீ.எஸ்.பி.பிளஸ்' வசதியை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் பற்றிய விபரங்கள், கடந்த இரண்டு வருட காலத்தில் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தொழிற்சட்டம், சிறுவர் பாதுகாப்புச் சட்டம், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான சுதந்திரம் போன்ற நிபந்தனைகள் ஏற்கனவே எமது சட்டப் புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை சிறிலங்கா ஒருபோதுமே சகித்துக்கொள்ளாது. அத்துடன், தொழிற்சங்கங்களின் சட்டரீதியான செயற்பாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது" எனவும் பிரதி அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.

தேவை ஏற்படுமாயின் இந்தச் சட்டங்கள் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த அவர், தயாரிக்கப்பட்ட ஆடைகளின் உற்பத்தி சிறிலங்காவைப் பொறுத்தவரையில் மிகவும் அபிவிருத்தியடைந்த ஒரு தொழிற்துறையாக இருக்கின்றது எனவும், பெரும்பாலான ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு பணிபுரிபவர்கள் சிறப்பான வேதனைத்தைப் பெற்றுக்கொள்வதுடன், அவர்களின் தொழில் நிலைமைகளும் சிறப்பானதாகவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

"இந்நிலையில் சிறிலங்காவுக்கு 'ஜி.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை மேலும் ஒரு கால கட்டத்துக்கு வழங்குவதனைத் தடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எந்தவிதமான காரணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தொழிற் சட்டங்கள் எதனையும் மீறும் வகையில் சிறிலங்கா செயற்படவில்லை என்பதும், தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளைத் தடுக்கவில்லை என்பதும்தான் மிகவும் முக்கியமானது" எனவும் பிரதி அமைச்சர் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் சாதகமற்ற முறையில் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து சிறிலங்காவுக்கான 'ஜி.எஸ்.பி.பிளஸ்' வசதிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என வெளியான செய்திகளையடுத்தே அது தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையின் உயர் மட்டக்குழு ஒன்றை நியமித்திருந்தார்.

இந்தக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் மிலிந்த மொறகொட, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் உள்ளடங்கியிருந்தார்கள்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.