Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்லுபடியற்றதாகும் சரத் என் சில்வாவின் நீதிமன்ற தீர்ப்புக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சுப்பதவி வகிக்க கூடாது என சத்தியக்கடிதமும், மீண்டும் அமைச்சுப்பொறுப்பும்!

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்கவின் பதவிக்காலத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் வரையில் நீடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் உடனடியாக அமுலுக்கு

வரும்வகையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார்.

அரச நிறுவனம் ஒன்றை தனியார் மயப்படுத்தியதில் அரசாங்கத்திற்கு சார்பற்ற முறையில் நடந்து கொண்டதாக உயர்நீதிமன்றத்தினால் குற்றம் சுமத்தப்பட்ட ஜயசுந்திரவை, 5 லட்சம் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிட்ட முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள், தொடர்ந்து அரச பதவிகள் எதனையும் வகிக்க போவதில்லை என்ற சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டனர்.

இதற்கமைய சத்தியக் கடதாசியை சமர்பித்த அவர், அரச பதவிகளில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில், சரத் என் சில்வா பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதை அடுத்து நாட்டுக்கு சேவையாற்றும் நோக்கில், நிதியமைச்சின் செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில், நீதிமன்றத்தில் தான் சமர்ப்பித்த சத்தியக் கடதாசி தடையாக இருப்பதாகவும் ,இதனால் அதனை ரத்துச் செய்யுமாறு கோரி ஜயசுந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு அதனை ரத்துச் செய்ததுடன், மீண்டும் அரச பதவிகளை வகிக்க ஜயசுந்தரவுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

ஜயசுந்தரவை மீண்டும் நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பது ஏற்புடையதல்ல என அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான தேசியத் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, தமது கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்திருந்தார். எனினும் ஜனாதிபதி அவரை மீண்டும் நிதியமைச்சின் செயலாளர் பொறுப்பில் இன்று அமர்த்தியுள்ளார்.

பி.பீ ஜயசுந்தரவை பற்றி 'லக்பிம' வில் விமர்சிக்க வேண்டாம் - மஹிந்த அறிவுறுத்தல்

நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.பீ.ஜயசுந்தரவிற்கு எதிராக லக்பிம பத்திரிகையில் எவ்வித செய்தியையும் வெளியிட வேண்டாம் என மேல் மாகாண உறுப்பினரும், லக்பிம பத்திரிகை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திலங்க சுமதிபாலவை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், பி.பீ. ஜயசுந்தரவிற்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என முதலீட்டுச் சபையின் தலைவரும், பிரபல கசினோ சூதாட்ட வர்த்தகருமான தம்மிக்க பெரேராவிற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளராக முன்னர் பதவி வகித்த பி.பீ.ஜயசுந்தரவிற்கும், திலங்க சுமதிபால மற்றும் தம்மிக்க பெரேருஆகியோருக்கும் இடையே இடம்பெற்றுவந்த பனிப்போர் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவின் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது.

இந்த நிலையில், பலத்த எதிர்ப்புக்களுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் மீண்டும் பி.பீ.ஜயசுந்தர பதவியமர்த்தப்பட்டதை அடுத்து அவருக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என திலங்க மற்றும் ம்மிக்க ஆகியோருக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

சரத் என் சில்வாவின் தீர்ப்பினை செல்லுபடியற்றதாக்க வேண்டுமென மேலும் மூவர் கோர்க்கை

சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவி வகித்தபோது தமக்கெதிராக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள், மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் மீண்டும் பரிசிலீக்கப்பட வேண்டுமெனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க, ஹரி ஜயவர்தன, சுமால் பெரேரா, ஏல்மோ பெரேரா ஆகியோருடன் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான சுசந்த ரத்நாயக்க மற்றும் அஜித் குணவர்தன ஆகியோர் எதிர்வரும் சில நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸின் ஆதரவும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகளுக்கு...

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.