Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[காணொளி] வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் – இயக்குநர் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் – இயக்குநர் சீமான்

[காணொளி]தமிழினத்தை இழிவுபடுத்திப் பேசிய சிறீலங்கா துணைத்தூதரை நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால் தமிழ் இன உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று “நாம் தமிழர் இயக்கத்தின்’ தலைவர் நடிகர் சீமான் எச்சரித்துள்ளார்.

வீடியோ காண: http://www.meenagam.org/?p=12877

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழர் இயக்கமே நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இயக்குனர் சீமானின் தலைமையிலான நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதரக அலுவலகத்தின் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் தலைமை தாங்கினார். பொறியாளர் விஜயகுமார், அதியமான், மைக்கேல் தமிழ் செல்வன், மருத்துவர் சிபி சங்கர், அயோத்தி தாசர் பேரவையின் தலைவரும், இரட்டைமலை சீனிவாசனின் பேத்தியுமான ரேவதி நாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் புலிக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படம் பொறித்த அட்டைகள், வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும் ஆர்ப் பாட்டக்காரர்கள் முழக்கமிட்டார்கள். “வெளியேற்று வெளியேற்று சிங்கள கைக்கூலி வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை வெளியேற்று, தமிழக அரசே, இந்திய அரசே சிறீலங்கா துணைத்தூதரை நாட்டை விட்டு வெளியே அனுப்பு, வென்றெடுப்போம், வென்றெடுப்போம் தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம், பாதுகாப்போம், பாதுகாப்போம் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள ஈழத்தமிழர்களை பாதுகாப்போம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

ஒரு சிலர் சிறீலங்கா அதிபர் ராஜபக்சேவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர் சீமான் பேசியதாவது: சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்த சிறீலங்கா துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியிடம் அங்கே முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்று கேட்கப்பட்டதற்கு, அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல எல்லோரும் பார்ப்பதற்கு என்று வாய்க்கொழுப்புடன் கூறியிருக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய செய்தியும் தவறானவை என்று கூறி தமிழர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டுக்கே வந்து இவ்வாறு தமிழர்களை இழிவுபடுத்தி பேசும் இந்த அதிகாரியை இங்கு பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. ஈழத்தமிழ் மக்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் வேதனை அடையும் இந்த நேரத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள அதிகாரி இப்படி இழிவுபடுத்தி பேசி எங்களை வேதனைப்படுத்தி உள்ளார்.

எனவே அவரை உடனடியாக இந்திய அரசும், தமிழக அரசும் வெளி யேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சிறீலங்கா துணைத் தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம்தான் இங்கே வேண்டும். வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றார்சீமான்.

ஈழத்தமிழர்களின் துயரம் பற்றியும், ஈழத்தை வென்றெடுப்பது தொடர்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தினர் பிரச்சாரப் பாடல்களை பாடினார்கள். ஆர்ப் பாட்டத்தில் பேசிய அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள், “இது ஒரு எச்சரிக்கை போராட்டம் தான். எங்களுடைய உணர்வுகளை மதித்து வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றாவிட்டால் நாம் தமிழர் இயக்கமே நேரடி நடவடிக்கையில் ஈடுபடும்’ என்று எச்சரித்தார்.

http://www.meenagam.org/?p=12877

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

seemaan08102009001.jpg

seemaan08102009002.jpg

seemaan08102009005.jpg

seemaan08102009006.jpg

mores photos and vides : www.meenakam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.