Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாம் சுபம்! கலைஞரின் காட்சியமைப்பு முடிந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபத் திருநாளுக்கு முன்னதாக ஈழத்தமிழரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமிதத்தோடு தமிழக எம்பிக்கள் குழு தாயகம் திரும்பியிருக்கிறது. எண்ணியவாறு எல்லாம் முடிந்தது எனும் மகிழ்ச்சியில் விமானநிலையத்திற்கே வந்து வரவேற்றிருக்கிறார் முதல்வர் கலைஞர். இந்தக் குழுவின் பயணம், கலைஞரின் இன்னுமொரு சாதனையாகப் பரிணமிக்கப் போகிறது.

யுத்தம் உக்கிரமாக இருந்தபோதிலே தனிமனிதனாக உண்ணா விரதமிருந்து, முடியாத போரை முடிந்ததாகச் சொல்லி முடித்துக்கொண்டவருக்கு இதுவெல்லாம் எம்மாத்திரம். இதோ சொல்லி விட்டார் நாளை முதல் தமிழர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றார்கள் என்று. இனியென்ன எல்லாம் முடிந்தது சுபம் . இந்தக் காட்சியின் நிறைவுப் பகுதியும் முடிந்துவிட்டது. அறிக்கையை இனி அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் அதற்குமப்பால் கடிதங்களும் எழுதுவார். கவனத்தில் எடுக்கின்றோம் என்பார் பிரதமர். எல்லாம் உள்ளபடியே நடக்கும்.

இந்தப் பிரச்சனை அவ்வளவு எளிதாக முடிந்துவிட்டால் அல்லது முடியுமானால் அப்புறம் இந்தியா என்னாவது. இந்தியாவுக்கு இப்போதுள்ள அதிமுக்கிய பிரச்சனை, ஈழத்தமிழர்கள் மத்தியில் தனக்கு விசுவாசமான புதிய அரசியல் எசமானன். அதனைத் தேடிக் கண்டுகொள்வதிலேயே காலம் கடத்துகிறது. ஏற்கனவே எதிர்பார்த்த சில தலைமைகள், எதிர்பார்த்தது போல் இல்லாதமையால், இன்னமும் தேடுகின்றது என்றும் ஒருபுறத்தில் சொல்லப்படுகிறது. தேடிக் கண்டுகொண்ட திருவை, கூடிக் குடியமர்த்தும் வரையில் காலங்கடத்தித்தானே ஆகவேண்டும்.

இந்த ரகசியம் எல்லோர்க்கும் தெரிந்ததுதான். அதனால்தான் ஆளாளுக்கு அன்பைச் சொரிந்து அரவணைக்கப் பார்க்கின்றார்கள். ஆனால் ஏற்கனவே ஒரு தடவை இல்லாது போனது போல் போய்விடாதிருப்பதற்காக, ஏற்புடைய சக்தியை கண்டறிய இன்னமும் கவனம் எடுத்துக் கொள்கின்றது. இந்தியா. இப்போதைக்கு முன்னைய கூட்டின் கூடப்பிறந்தவர்களே முதலிடத்தில் நிற்கின்றார்களாம்.

இந்தக் குழுவினரின் விஜயத்தின்போதும், அந்தக் கூட்டின் நெருக்கம் காட்டப்பட்டதாகவும், அதற்கப்பாலான சக்திகளோடு சற்று எட்டியே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எந்தக் கூட்டின் போதும், எல்லோரும் எடுபிடிகளாகவே இருப்பார்கள. அல்லாதவர்கள் இல்லாதவர்களாகிவிடுவார்கள். ஏனெனில் இவ்வளவு சிரமமெடுத்து இலங்கை யுத்தத்தில் முதலீடு செய்ததையெல்லாம் முதலாளிகள் இலாபம் காணவேண்டாமா? இருந்தவர்களை இல்லாதவர்களாக்கி, ஏதிலிகளாக ஏங்கவைத்தவர்களுக்கு இதுவும் முடியும் இதற்கப்பாலும் முடியும். அது வரையில், நாளும் ஒரு கதை அரங்கேறும், காட்சிகளும் மாறும். இப்போதைக்க, இந்தக் காட்சிக்கு கலைஞர் எல்லாம் முடிந்தது, சுபம் போட்டிருக்கின்றார்.

அடுத்தவாரத்தில் சென்னையில் ஈழம் சென்ற தூதுக்குழுவுக்கு பாராட்டுவிழா எனும் மற்றுமொரு காட்சி அரங்கேறும். அதிலே அனைவரும் கலைஞரின் சாதனைகளை பாராட்டிக் கவிதை பாடுவார்கள் .பரிசு கொடுப்பார்கள். இதுவெல்லாம் பழகிப் போச்சுங்க. இது மட்டுமா? சீறிய சிறுத்தை, சினம் அடங்கிப் பசுவாய் மாறியது கூடப் பழகிப் போனதுதான்.. என்ன இந்தக் காட்சியில் திருமா புதுமுகம் அவ்வளவுதான்...மற்றும்படி, கதாசிரியர் கலைஞர் எழுதிக் கொடுத்த பிரதிப்படி அற்புதமாக, வசனம் பேசிய தமிழகக் குழுவின் தனித்திறமையை பாராட்டலாம்..

தமிழகக் குழுவின் அக்கரைப் பேச்சைக் கானொளியில் காண

பிறகு என்ன ... இதையும் வைத்து ஒரு படத்துக்கு திரைக்கதை எழுத வேண்டியது தானே.. வலியின் ஓசை என்று .. ஒரு தமிழனை இன்னொரு தமிழன் எவ்வளவு தூரம் ஏமாற்ற முடியும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் கருணாநிதி .. ஏமாறுபவன் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவன் இருந்து கொண்டேயிருப்பான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.