Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எம்பிக்கள் குழு இலங்கையில் இன்ப சுற்றுலா - விஜயகாந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் ஆளும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், இலங்கையில் உண்மை நிலையை கண்டறியப் போவதாகச் சொல்லி இன்பச்சுற்றுலா பயணம் மேற் கொண்ட சம்பவத்தால் ராஜபக்சேவுக்குத்தான் லாபம். இதனால் அங்குள்ள தமிழ் மக்களுக்க எந்தப் பயனும் கிடைக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

இலங்கையில் முள்வேலி சிறைக்குள் 3 லட்சம் தமிழர்கள் கடந்த 5 மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல், சிறை கைதிகளுக்கு தரப்படும் சலுகைகள் கூட கிடைக்காமல், ஆடுமாடுகளை போன்று பட்டியில் அடைத்து சிங்கள இனவெறி ராணுவம் கொடுமைப்படுத்தி வருகிறது.

யூதர்களுக்கு முகாம்கள் அமைத்து இனப்படுகொலை செய்த ஹிட்லரை நாம் பார்த்தது இல்லை, சரித்திரத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால் நம்முடைய நாட்டுக்கு 20 மைல் தூரத்திலுள்ள இலங்கையில் சித்ரவதை முகாம்கள் அமைத்து ஒட்டு மொத்த தமிழர்களையும் குற்றுயிரும், குலை உயிருமாக சிங்கள இனவெறி அரசு அழித்து வருகிறது.

ஐ.நா.சபையும், அமெரிக்கா, கனடா, நார்வே போன்ற ஜனநாயக நாடு களும், மனித உரிமை கண்காணிப்பு நிறுவனமும் இதைக் கண்டித்துள்ளது.

சட்டவிரோதமாக மக்களின் சுதந்திரத்தையும் நடமாடும் உரிமையையும் தடுத்துள்ளதோடு மட்டுமல்ல, அவர்களை விடுதலைப் புலிகளை கண்காணிக்கிறோம் என்ற பெயரால் சிங்கள இனவெறி ராணுவம் அவ்வபோது சோதனை நடத்தி, இளைஞர்களை கடத்திக் கொல்லுவதும், இளம் பெண்களை கற்பழிப்பதும், எதிர்த்து பேசுபவர்களை சுட்டுக் கொல்லுவதுமாக உள்ளது.

அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி வழியில் அவர்களை தங்கவைத்து கொன்று குவித்து வருகின்றனர். 1 லட்சத்து 62 ஆயிரம் பேரை சிங்கள ராணுவம் சோதனை செய்து விடுவித்தது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் ஐ.நா.சபை 15 ஆயிரம் பேர்தான் வீடு திரும்பி யுள்ளார்கள் என்று அறிவித்துள்ளது.

மழைக்காலம் வேறு வருவதால், பேராபத்து காத்திருக்கிறது என்று உலகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தான் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஆளுகின்ற கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், இவர்களின் உண்மை நிலையை கண்டறியப் போவதாகச் சொல்லி இலங்கைக்கு இன்பச்சுற்றுலா பயணம் மேற் கொண்டுள்ளனர்.

இன்பச்சுற்றுலா முடிந்து இறுதியில் நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சேவுடன் இனித்து பேசி கைகுலுக்கி அவரை திருப்திபடுத்தி விட்டு மகிழ்ச்சியோடு புகைப்படத் திற்கும் போஸ் கொடுத்து விட்டு திரும்புகின்றனர்.

இந்த நாடாளுமன்றக் குழுவின் இன்பச் சுற்றுலாவினால் அங்கு தமிழர்களுக்கு நன்மை உண்டா என்றால் சிறிது கூட இல்லை. மாறாக சிங்கள இனவெறியர் ராஜபக்சேவுக்கு இது அனுகூலமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களே வந்து தனக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும், இதர ஜனநாயக நாடுகளுக்கும் அவர் இதை பயன்படுத்திக்கொள்வார்.

எந்த அளவுக்கு இந்த பயணம் அவருக்கு பயன்பட்டிருக்கிறது என்றால், இலங்கையில் அதிபருக்கான தேர்தலை அவர் முன்கூட்டியே நடத்தவுள்ளார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.

எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்டு எங்கள் கூட்டணியை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், எதிர்கட்சிகளும் அப்படி செய்யட்டும் என்று அதிமேதாவித்தனமாக முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை விடுகிறார். இவர் தான் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்.

பிரதமரைப் பார்க்க அனுமதி வேண்டுமானால் தன்னை வந்து பார்த்தால் அனுமதி பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் சொல்லுகிறார். பிரதமர் என்றால் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் பிரதமர் என்று. இத்தகையோர்கள் ஒற்றுமையைப் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள் .

எம்ஜிஆர் காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒற்றுமை வேண்டும் என்ற பொழுது அதை சீரழித்தவர் கருணாநிதி தான். அவர் என்றைக்கு அரசியலில் உள்ளே நுழைந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதும் உலகமறிந்த உண்மை.

இலங்கையில் வாழ்வா, சாவா என்று லட்சக்கணக்கான தமிழர்கள் கஷ்டப்படும் நிலையை இந்திய அரசு கண்டுகொள்ளாதது மட்டுமல்ல. தமிழ்நாட்டில் உள்ள கடலோர தமிழக மீனவர்களும் இன்று வரை அவமானப் படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை. இந்திய இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறீர்களா ? அதனால் தான் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இந்திய இலங்கை உறவு இரண்டு கண்களைப் போன்றது. அவற்றில் ஒன்று பழுது ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த பார்வைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழினமும் அழிந்த பிறகு, இந்திய இலங்கை உறவை காப்பாற்றுவேன் என்பது கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவதைப் போல் என்பது மட்டும் ஏனோ இவர்களுக்கு புரியவில்லை. தமிழர்கள் தினந்தோறும் சாகிறார்கள் என்றால், இந்திய இலங்கை உறவினால் என்ன பயன் ? என்று அந்த அறிகையில் விஜயகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.