Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையின மக்களும் சிங்கள மக்களின் மனோநிலையும்

Featured Replies

இலங்கை வரலாற்றில் தன்றையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருபத்திரண்டு பேர் போட்டியிட களம் இறங்கியுள்ளனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்றை ஓன்பது பேர் அதிகமாக போட்டியிடுகின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிறை அறிகப்படுத்தி முப்பது வருடங்கள் முடிவுறும் வேளையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக தன்மைகளை நாட்டின் பொது மக்கள் எந்தளவு தூரம் புந்துள்ளனர் என்பது பற்றி விவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திகா பண்டாரநாயக்கா மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை வெற்றிபெறச் செய்ததன் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிறையை மாற்ற வேண்டும் எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர் என்பதை எடுகோளாகக் கொள்ளலாம்.

இப்பெரும்பான்மையான மக்களில் சிறு பான்மையினராகவுள்ள தமிழ் பேசும் மக் களும் உள்ளடங்குவர். ஆயினும் முமுப்பது வருட வரலாற்றில் சிங்கள மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ ஒட்டுமொத்தமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி றையை நீக்குவதற்கு வாக்களிக்கவில்லை.

இதேவேளை நாட்டின் சிறுபான்மையாக மக்களின் சில தலைமைகள் ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ள அரசிலமைப்பினை இல்ல தொழிக்கக் கூடாது எனும் கருத்தினை முன் வைத்தனர். சிறுபான்மையினக் கட்சிகளின் தலைமைகள் இதுநாள் வரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டதுடன். அதற்கமைய சிறுபான்மையின மக் களும் இதுநாள்வரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிக்கலாயினர்.

கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டுமே வடக்கு வாழ் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய வாக்களிப்பதனைத் தவிர்த்தனர். ஆகையால் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பினை இல்லாதொழிப்பது பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை.

இப்பின்புலத்தில் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நோக்குகையில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான போட்டியின் முடிவே நாட்டின் எதிர்கால அரசியல் செல்நெறியை நிர்ணயிக்கும் சக்தியாக அமையவுள்ளது.

இவ்விரு வேட்பாளர்கள் கோரும் ஆணைக்கு சிங்கள மக்கள் எந்தளவு ஆதரவு வழங்கத் தயாராகின்றனர் என்பதிலேயே இது தங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் வெற்றி பெற்ற தமக்கு நாட்டைக் கட்டியெழுப்ப ஆதரவு தருமாறு கோருகிறார். மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகளை களத்தில் போராடி அழித்த ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டை குடும்ப அரசியலிலிருந்து காப்பாற்றி தனிமனித அதிகாரத்தைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஆட்சிறையை ஒழித்து, நாட்டை ஜனநாயக வழிக்கு கொண்டுவர ஆதரவு தருமாறு கோருகின்றார்.

இவ்விரு வேட்பாளர்களது கோக்கைகளும் பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்கினை பிரதான இலக்காக கொண்டவையாகும். கடந்த முப்பது வருட தேர்தல் வரலாற்றை நோக்கினால் வடக்கு கிழக்கின் யுத்தத்தினை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர்கள் சிங்கள வாக்குகளைத் திரட்டினர்.

ஆனால், இம்றை வடக்கு கிழக்கு யுத்தத்தின் வெற்றியை முன்னிறுத்தி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இரு தேர்தலைத் தவிர (இருறை சந்திகாவை ஆட்சியிலமர்த்தியதைத் தவிர) தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இனவாத நிலைப்பாட்டிற்கு சார்பான வகையிலேயே சிங்கள மக்கள் வாக்களித்தனர். இந்நிலையில், சிங்கள மக்கள் ஜனநாயகத்தை நாட்டில் மீளமைக்க கோரும் விடயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்களா அல்லது வெறுமனே விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதில் யார் தன்மையானவர் என்பதை தெவு செய்வதில் அக்கறை செலுத்துவார்களா என்பதை தேர்தல் முடிவு களின் பின்னரே அறியலாம். முன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான கருத்திற்கு முக்கியத்துவமளித்து ஆட்சியாளர்களை தெரிவு செய்த சிங்கள மக்கள் இந்த மனோநிலையிலிருந்து விடுபட வேண்டியுள்ளமை தேவையாகவுள்ளது.

போட்டியிடும் இரு வேட்பாளர்களினதும் அவர்கள் சார்பான பேச்சாளர்களின் கருத்துக்களையும் மற்றும் அவர்கள் சார்ந்த எழுத்தõளர்களின் கட்டுரைகளையும் நோக்குகையில் இரு பிரதான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, ஆளுங்கட்சியினரும் அவர்கள் சார்ந்த பிவினரும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிபீடமேறினால் நாட்டில் இராணுவ ஆட்சி வந்துவிடும், ஜனநாயக ஆட்சி அழிக்கப்படும் எனும் கருத்தினை பிரதானமாக ன்வைக்கின்றனர். ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் கருத்தினை முன்வைப்பவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இன்றைய ஆட்சியை தொடரவிட்டால் தனியொரு குடும்ப சர்வாதிகாரம் தொடர்வதுடன் நாடு அழிவினை நோக்கி பயணிக்கும் எனும் கருத்தினை முன்வைக்கின்றனர்.

இவ்விரு கருத்தாக்கங்களில் எதற்கு சிங்கள மக்கள் செவிசாய்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிபீடமேறினால் இராணுவ ஆட்சியை உருவாக்க முடியுமா? அவ்வாறான உள்ளக அல்லது வெளியக சூழல் காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்தால் ஹிட்லர், சோலினிக்குப் பின்னைய வரலாற்றினை நோக்கின், ஜனநாயக ஆட்சிறையை பூரணமாக அனுபவிக்காத நாடுகளிலேயே இராணுவத் தளபதிகளினால் இராணுவ ஆட்சியை இராணுவ கிளர்ச்சி மூலம் உருவாக்க முடிந்துள்ளது. அதிலும் ஓரளவேனும் ஜனநாயக ஆட்சிறையை மக்கள் அனுபவித்திருந்தால் இராணுவ ஆட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலையேற்பட்டு மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்து ஜனநாயக ஆட்சியை நிறுவியுள்ளமை வரலாறாகவுள்ளது. இதற்கு எமக்கு அண்மைய பங்களாதேஷûம், பாகிஸ்தானும் சிறந்த உதாணமாகும்.

இது இவ்வாறிருக்க, மக்களால் தெவு செய்யப்பட்ட ஜனநாயக தலைவனாக இருந்துக் கொண்டே மறைமுக இராணுவ ஆட்சியை நடத்தும் நாடுகளும் உள்ளன. அது தேவைக்கேற்ப ஆட்சியாளர்களினால் இறுக்கமõகவும், தளர்ச்சியுடனும் சில நாடுகளில் பேணப்பட்டு வருகின்றது. இவ்வாறான தளர்ச்சியுடனான அரை இராணுவ ஆட்சியை ஜனாதிபதி ஜே.ஆரின் காலத்தில் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் முழுமையான இராணுவ ஆட்சியை இலங்கையில் உருவாக்க முடியாது போயிற்று.

அதற்கான வாய்ப்பு யுத்த காலத்தில் இருந்தபோதிலும், ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்ட பெரிய‌ நாடான இந்தியா அண்மித்திருப்பதனாலும் இலங்கை மக்கள் ஜனநாயகத்தை அனுபவித்தவர்களாக இருப்பதாலும் அதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. ஆயினும் நிழல் இராணுவ ஆட்சியை பலப்படுத்திக் கொள்ளலாம். யுத்தம் முடிவடைந்த பின்னர், இன்றைய ஜனாதிபதி வடக்கு கிழக்கு ஆளுநர்களாக படை அதிகாகளை நியமித்துள்ளதுடன் தமக்கு வேண்டியவர்களை, உறவினர்களை முப்படை உயர் அதிகாகளாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் நியமித்துள்ளார். ஒரு சாதாரண பொதுமகனாக இருந்து ஜனநாயக தேர்தல் மூலம் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை செய்துள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையை ஜெனரல் சரத் பொன்சேகாவினாலும் உருவாக்க முடியும்.

(இன்றைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் நாடாளு மன்ற அங்கத்தவராக இல்லாததன் காரணமாக தமது உறவினர்களுக்கு உயர் அமைச்சர் அல்லது உயர் அரச அதிகார பொறுப்புகளை வழங்க முடியாது போகலாம். ஆனால் தமக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்).

இந்நிலையை சிங்கள மக்கள் எந்தளவு சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்பதும், நிறைவேற்று ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரம் எந்தளவுக்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதனை சிங்கள மக்கள் புரிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குயாகும்.

ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் செய்ய 24 மணித்தியாலம் இருக்கையில் எதிர்க்கட்சியிலிருந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளார். அதாவது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் இருக்கையில் முதல் நாள் காலையில் எதிரணியிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாலையில் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நிறைவேற்று அதிகாரத்தின் தன்மையை மிக இலகுவில் அறிய வாய்ப்பு ஏற்படுத்தினாலும் இதனை நாட்டின் பெரும்பான்மை மக்கள் புந்துக் கொள்வார்களா என்பதை கூற முடியாதுள்ளது.

இவற்றுடன் தமிழ் மக்களின் நிலையைக் கருத்திற் கொள்வோமாயின் பாரதப் போரில் கர்ணனைக் கொன்ற போது பாரத மக்கள் எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டனரோ அவ்வாறான நிலையிலேயே உள்ளனர். இந்த எடுகோளுடன் சிறுபான்மையின மக்களது தேர்தல் வரலாற்றை நோக்கினால் சிறுபõன்மை மக்களது வாக்கு ஜனாதிபதி தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக அமைந்ததாக இல்லை. மாறாக, பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்கு வங்கியே தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அமைந் திருந்தது.

தமிழ் பேசும் மக்களது வாக்கு பெரும்பான்மை சிங்கள மக்களது தீர்ப்புக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

முப்பது வருடம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சிங்கள மேலாதிக்கத்தின் பிடியில் சிக்குண்டு, துன்பங்களை அனுபவித்த போதிலும் தேர்தல் வரும் வேளை தமிழ் பேசும் மக்களும் இரு பிவாக பிரிந்தே வாக்களித்துள்ளனர். தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக சிங்கள வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தாக வரலாறு இல்லை.

இன்றைய தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் தாம் ஏற்றுகொண்ட தலைமைகளின் வேண்டுகோளுக்கிணங்க பிந்துள்ளனர்.ஜனநாயக விரோத சிறுபான்மை மக்களும் தீங்கிழைக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாதொழிக்க ஓரணி திரளவில்லை. பிரதான வேட்பாளர்கள் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை அறிவிக்க முன்னரே தாம் யாரை ஆதக்கின்றனர் என்பதை வடக்கு கிழக்கு, மலையக, கொழும்பு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒரு சில தலைமைகள் தெவித்துவிட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மட்டுமே தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லையாயினும் அக்கூட்டமைப்பினைச் சார்ந்த கட்சியொன்றின் பிரதிநிதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இதனால் அக்கூட்டமைப்புக் குள்ளும் பிளவு ஏற்படவுள்ளது.

முப்பது வருட மனித மற்றும் வள இழப்பிற்கு பின்னரும் ஒருமித்த நிலைப்பாட்டை சிறுபான்மையினக் கட்சிகளினால் கடைப்பிடிக்க முடியாதுள்ளது.

எனவே, சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களினால் இத்தேர்தலின் போது எவ்வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது. முப்பது வருடமாக பாதிப்பøடந்துவரும் தமிழ் பேசும் மக்களது தலைமைகள் எதனை பாடமாகக் கற்றுள்ளன எனில், சிங்களத் தலைமைகளுக்கு ஈடான சந்தர்ப்பவாத அரசியலையே பாடமாக கற்றுள்ளன. ஆகையால் நடைபெறும் தேர்தலிலும் வழமை போல் சிங்கள வாக்காளர்களே தமிழ் பேசும் மக்களினது தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்வர்

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=152:2009-12-20-02-11-21&catid=35:2009-11-28-06-27-57&Itemid=101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.